ஆஸ்துமா நோய்க்கு அக்கு பஞ்சர் தரும் தீர்வுகள்
ஒரு சிறிய மெல்லிய குழாயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வழியாக காற்றை ஊதுங்கள். இப்போது காற்று சீரான வேகத்துடன் செல்லும். அதே குழாயை ஒரு இடத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு காற்றை ஊதிப் பாருங்கள். காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, காற்று வேகத்துடனும் சத்தமாகவும் வெளியேறும். குழாயில் காற்று தடையில்லாமல் போக வேண்டுமானால், அதில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். அதேபோல் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் ஏற்பட்டுள்ள தடை (ஆஸ்துமா) எதனால் ஏற்பட்டது? நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளால். முதலில் இவற்றை வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உடலானது இவற்றை வெளியேற்ற முயலும் போது (சளி பிடிக்கும்போது) மருந்துகளினால் நீங்கள் அவற்றை நிறுத்தும் போது, அந்தக் கழிவுகள் காய்ந்து நரையீரலிலேயே படிந்து விடுகின்றன. சளி பிடிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீங்கள் செய்யும் போதும் இந்தக் காய்ந்த சளிக் கழிவுகள் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் படிந்து, அதன் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றன. காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, மூச்சு விடுவதில் சிரமம், இரைப்பு, சத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சொல்