Posts

Showing posts from March, 2017

ஆஸ்துமா நோய்க்கு அக்கு பஞ்சர் தரும் தீர்வுகள்

ஒரு சிறிய மெல்லிய குழாயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வழியாக காற்றை ஊதுங்கள். இப்போது காற்று சீரான வேகத்துடன் செல்லும். அதே குழாயை ஒரு இடத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு காற்றை ஊதிப் பாருங்கள். காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, காற்று வேகத்துடனும் சத்தமாகவும் வெளியேறும். குழாயில் காற்று தடையில்லாமல் போக வேண்டுமானால், அதில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். அதேபோல் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் ஏற்பட்டுள்ள தடை (ஆஸ்துமா) எதனால் ஏற்பட்டது? நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளால். முதலில் இவற்றை வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உடலானது இவற்றை வெளியேற்ற முயலும் போது (சளி பிடிக்கும்போது) மருந்துகளினால் நீங்கள் அவற்றை நிறுத்தும் போது, அந்தக் கழிவுகள் காய்ந்து நரையீரலிலேயே படிந்து விடுகின்றன. சளி பிடிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீங்கள் செய்யும் போதும் இந்தக் காய்ந்த சளிக் கழிவுகள் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் படிந்து, அதன் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றன. காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, மூச்சு விடுவதில் சிரமம், இரைப்பு, சத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சொல்

சிறுநீரக செயலிழப்பு - தொடக்க நிலை அறிவது எப்படி?

Image
இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று

ஒருவரியில் வீட்டு வைத்திய குறிப்புகள் !

சின்ன நோய்களுக்கு வீட்டு வைத்தியம் ..! எலும்பு வலுப்பெற: கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பொடி நெய் சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும். மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும். இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும். சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும். படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும். நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நேரம் குண