Posts

Showing posts from September, 2016

இதய நோய் வராமல் தடுக்க இயற்கை உணவு

மனித இயக்கத்தின் மையப் புள்ளி இதயம் . நமது அன்றாட உணவுகள், உணர்வுகள்தான் நமது ஆயுளைத் தீர்மானிக்கிறது. ஆனால், இன்றைய துரித உலகில் அதே உணவுகளாலும் துரிதமாக கோபம் கொள்வதாலும் நமது உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதயம் நன்றாகச் செயல்பட...இதயம் நோயின்றி இயங்க நல்ல பிராண வாயு தேவைப்படுகிறது. நமது நுரையீரலுக்கு வரும் அழுக்கடைந்த ரத்தம் தூய்மைப்படுத்தப்பட்டு இதயத்துக்குச் செல்லவேண்டுமெனில், மாசடைந்த ரத்தத்தைச் சுத்தம் செய்வதற்கு தேவையான பிராணவாயு போதிய அளவுக்குத் தேவை. இதயமும் நுரையீரலும் இரண்டு கண்கள். இரண்டும் சரியாக இருக்க வேண்டும் இன்னும் சொல்லப் போனால் நுரையீலும் நன்றாக இருந்தால் இதயம் நன்றாக இருக்கும். இதயத்தின் முக்கிய எதிரி: மேலும் இதயத்துக்கு ஒவ்வாத உணவுகள் எனப் பட்டியலிட்டால் முதலில் இடம் பிடிப்பது நாள்பட்ட எண்ணெய்கள், மிக முக்கியமாகத் தவிர்க்கப்பட வேண்டிய உணவு. இல்லை இல்லை அது உணவு இல்லை. ஆம் பரோட்டா! நமக்கு இன்றைய முக்கிய எதிரி பரோட்டாதான்! அடுத்து அதிக கொழுப்புள்ள உணவுகளான பண்ணை வளர்ப்பு கோழிகள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்! இதய நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியது: 1

தொப்பையை குறைக்க உதவும் மூச்சுப் பயிற்சிகள் !

வந்தால் போகாத்து தொப்பை. வந்து விட்ட பிறகு வருத்தப்படுவதில் பிரயோசமில்லை என்பார்கள். ஆனால் வந்த பிறகும் கூட அதை விரட்டி விட்டு மீண்டும் சிலிம் பாயாக திரியலாம் என்பது இந்த கால உணவு முறை மற்றும் உடற்சி முறை நமக்கு சொல்லித்தரும் பாடம். முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு பெரிய "தொந்தி" யாக இருந்தாலும் அதை குறைத்து "FLAT STOMACH" பெற்றுத் தந்திடும். இப்பொழுது முறையான "மூச்சு பயற்சி" செய்தாலே போதும். தொப்பை கிடுகிடுவென குறைந்துவிடும் என்கின்றனர். தொப்பையை குறைக்க உதவும் மூச்சுப் பயிற்சிகள் ! வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி நேரம் வரை உட்கார்ந்தபடியே தான் வேலை செய்கிறோம். உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!! மற்றொன்று உணவுப் பழக்கம், செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை போல தான் உணவும். அளவுக்கு மீறிய பணம் தலையிலும், அளவுக்கு மீறிய உணவு வயிற்றிலும் கனத்தை அதிகரித்துவிடும். உட்கார

சர்க்கரை நோய் தீர்க்கும் புதிய வகை மாத்திரை

தீவிர சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்றும் தினசரி இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது நடக்கிறது. இத்தனைக்கும் இன்சுலின் மாத்திரைகள் வந்து விட்டன. ஆனால், மாத்திரைகளில் ஒரு சிக்கல். அவை உட்கொண்ட பிறகு வயிற்றை அடைந்ததும், ஜீரணிப்பதற்கான அமிலங்கள் இன்சுலினின் அளவையும் வீரியத்தையும் குறைத்து விடுகின்றன. இதனால், ரத்தத்தில் தேவையான இன்சுலின் கலக்காமல் விரயமாகி விடுகிறது. இதற்கு மாற்று வழி கண்டுபிடித்திருக்கின்றனர் அமெரிக்காவிலுள்ள நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இவர்களும் அதே மாத்திரை வடிவத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள், 'கொலஸ்டோசோம்' என்ற மிக நுண்ணிய பைகளைக் கொண்டவை. ஒரு மாத்திரையில் உள்ள நுாற்றுக்கணக்கான நுண் பைகளில் இன்சுலினை நிரப்பி அனுப்பும்போது, அவை வயிற்றில் உள்ள அமிலத்தை தாக்குப்பிடித்து, குடல் பகுதியை அடைந்து விடுகின்றன. குடல் பகுதியில் பல சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கப்படும்போது, கொலஸ்டோசோம் பைகளும் உடைந்து, அதிலுள்ள இன்சுலின், ரத்தத்தில் அதிகம் விரயமாகாமல் கலந்து விடுகிறது என்கின்றனர் நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். இந்த மாத்திரை சந்தைக்கு வந்த