Posts

Showing posts from December, 2019

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் !

சிலருக்கு அடிக்கடி உடற்சி செய்ய முடியாது போகலாம். நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் இந்த இரண்டு காரணங்களால் தான் இப்படி ஒருவர் அன்றாட உடற் பயிற்களிலிருந்து விடுபட காரணமாக இருக்கிறது. அப்படி விட்டு விட்டு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை உடற்பயிற்சி செய்வதால் என்னாகும்? உங்களது உடல் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை தெரிந்துகொள்வோம். பெரும்பாலும் உடற்பயிற்சியைத் தவிர்க்கிறீர்களா? நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி என்பது உடலுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். சோம்பேறித்தனம் அல்லது வேலைகளில் பிஸியாக இருப்பது காரணமாக உங்கள் வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்க்க நேரிடலாம். அப்படி நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடல் பல சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். உடலுக்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. செயலற்ற தன்மை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி உங்கள் உடலை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் உடல்

இது பெண்கள் ரகசியம் ! ஆண்கள் படிக்காதீங்க !

Image
ஒரு சில நோய்கள் பெண்களுக்கு மட்டும்தான் வரும். அதை பற்றிய கவலை நமக்கெதுக்கு என்று சிலர் அசட்டையாக இருந்துவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கான நோய்கள் பற்றி ஆண்களும் தெரிந்துகொள்வதால்தான் அவர்களது துணைக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே அதற்கான முன்னெச்சரிக்கையாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும். அதுபோன்ற நோய் ஒன்றுதான் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய். அதுபற்றி அதிக விபரமாக இங்கு தெரிந்துகொள்வோம். வாங்க நண்பர்கள..! அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். இந்தியாவில் மார்பக புற்றுநோயாளிகளில் கிட்டத்தட்ட அறுபது சதவிகிதம் நோய் அதன் கடைசி கட்டத்தில் இருக்கும் வரை கண்டறியப்படுவதில்லை. இது நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதைக் குறிக்கிறது. மார்பக புற்றுநோயை சிறந்த பரிசோதனை முறையில் கண்டறிவது நோயிலிருந்து இறப்பு விகிதம் 40 சதவீதம் குறைகிறது. மார்பக புற்றுநோய்களில் சுமார் 5% முதல் 10% வரை பரம்பரையாக பாதிக்கப்படுவதா கருதப்படுகிறது, இது பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு அனுப்பப்படும் அசாதாரண மரபணுக்களால் ஏற்படுகிறது. எனவே மரபணு காரணிகள், புற்றுநோயின் குடும்ப வ

அசிடிட்டி பிரச்னையா? இதை சாப்பிடுங்க !

Image
அசிடிட்டி தீர அற்புதமான பழம் ! சாப்பிட்டுப் பாருங்க. அப்போதானே புரியும்..! அமிலத்தன்மை (acidity) நீங்கவும், உடல் எடை குறைக்கவும் சீத்தாப்பழம் உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் டயட்டில் சேர்க்க சுவாரஸ்யமான யோசனைகளை அறிய இங்கே படியுங்கள். மருத்துவர்கள் சீத்தாப்பழத்தை ஏன் தவறாமல் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் : ஆங்கிலத்தில் கஸ்டார்ட் ஆப்பிள் எனப்படும் சீத்தாப்பழம் வெப்பமண்டல அமெரிக்க நாடுகளிலும் மேற்கிந்திய தீவுகளிலும் சொந்த இடமாகக் கொண்டது. கஸ்டர்ட் ஆப்பிள் பொதுவாக இந்தியாவில் சீதாப்பால் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப்பழம், பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக அறியப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுவதையும், உங்கள் உணவில் இந்தப் பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.

கலிகாலத்தில் தீமை செய்பவன் இலகுவாக உயர்வது ஏன்..?

Image
தள்ளி நிற்பவர்களை இறைவன் கண்டுகொள்வதில்லை, என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால் எளிதான பாதிப்பு வரும். சற்றே வேகமான வாகனத்திலிருந்து விழுந்தால் கொஞ்சம் பலமான பாதிப்பு வரும். ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்தால், உயிருக்கே அபாயம் தான். அது போல் தான், கெடுதல் செய்பவர்கள், பகவானை துதிப்பது போல் நாடகமாடி பெரும் பொருள் சம்பாதித்தாலும், மிக விரைவில் அவர் உயரத்திலிருந்து விழப்போகிறார் என்று அர்த்தம். இறைவன் அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பாதிப்பை கொடுக்காமல், உயரமான இடத்திற்கு ஏற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, சித்தர்களுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும் மட்டும்தான் தெரியும். மூன்று உலகத்தையும் ஆண்ட ராவணனுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணான, பதிவிரதையான சீதாபிராட்டியால் அழிவு ஏற்பட்டதைத்தான் சுந்தரகாண்டம் எடுத்துக்காட்டுகிறது, என்கிற முக்கியமான செய்தியை, இவ்வுலக மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்" கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவே

தலைமுடி நன்கு வளர இயற்கை வழிமுறைகள் | thalai mudi iyarkkaiyaga valara

முடி வேகமாக வளர தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாகவும் நீண்டும் வளரும். மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். முடி வளர: தேங்காய் எண்ணையில் மருதாணி பூவை ஊற வைத்து, வெயிலில் காயவைத்து, தினமும் தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும். கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். பொடுகை தவிர்க்க: வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவிகுளித்து வந்தால் பொடுகு வராது. வேப்ப இ