Posts

Showing posts from September, 2021

வடிவேலு அதிரடி ! குல தெய்வ நிலம் மீட்பு

Image
 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மிக அருகில் உள்ளது காட்டு பரமக்குடி கிராம ம். இங்கு மிகப் பிரசித்திப் பெற்ற திருவேட்டர் அய்யனார்தான் நடிகர் வடிவேலும் குல தெய்வம். இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.  இந்நிலையில் இந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம், ந த்தம் என்று அழைக்கப்படும் சேத்தூர் கிராமத்தில் உள்ளது. இது சுமார் 5 கோடி மதிப்பு இருக்கும்.  அந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், அந்த நிலத்தை மீட்டுத் தருமாறு அறிநிலையத்துறை அதிகாரிகளிடம்  பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால் மெத்தனமாக அவர்கள் நடந்து கொண்டதை அடுத்து, வடிவேல் நடிகர் ஒரு அதிரடி காட்டியுள்ளார்.  அதன் பிறகு அந்த நிலத்தை மிக துரிதமாக நடிவடிக்கை எடுத்து அறிநிலையத்துறையினர் மீட்டு எடுத்து கோவிலுக்கு சொந்தமாக்கியுள்ளனர். நடிகர் வடிவேலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இது பற்றி பேசிய பிறகுதான் இந்த விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம், ஆனாலும் அமலாபால் நீங்க செய்றது ஓவர் தான். ! ரசிகர்கள் காட்டம் !!!!

Image
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர், சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர் தான் அமலாபால். அவர் வரிசையாக ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று உச்சத்தை அடைந்தவர். அதன்பிறகு அவருக்கு இறங்கு முகம்தான். அவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்து ஏமாந்து தான் போனார். அவர் எதிர்பார்த்தளவு படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. அதன் பிறகு திக்கு முக்காடி கொண்டிருந்தவருக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்தது. அந்த படம் தான். ‘ஆடை’. அப்படம் அடுத்த லெவெலுக்கு அவரை எடுத்து சென்றது என்றே கூறலாம். அந்த படத்தில் அவர் ஒட்டுத் துணியில்லாமல் நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கதைக்குத் தேவையானதால் அவர் நடிப்பு அருவருப்பாக இல்லை. அந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அவருடைய  ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து வெகுவாக கொண்டாடினர். ஒரு அருமையான பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப

விளக்கெண்ணெய் தரும் 100 நன்மைகள் !

Image
விளக்கெண்ணெயின் நன்மைகள்: நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர். சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர். இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர். புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட

எலுமிச்சை பழத்தின் 17 மருத்துவ குணங்கள்

Image
 ஆசியாவில் உள்ள சிறிய பசுமையான மரங்களில் ஒன்று சிட்ரஸ் பழமான எலுமிச்சை. இதை ஆயுர்வேதத்தில் பரவலாக பயன்படுத்துவதுண்டு. உணவு, அழகு பராமரிப்பு, மருந்துகள் மற்றும் பல்வேறு உலோகங்களின் சுத்தகரிப்பு செயல்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவில் ஏற்படும் சிறிய மாற்றங்களே உங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பழங்கள் மற்றும் காய்கறிகளை பொறுத்தவரை எலுமிச்சை அளவில் மிகச் சிறியதாக இருக்கலாம். அதன் அளவிற்கு மாறாக இது அதிக அடர்த்தியான ஊட்டச்சத்து மிக்கதாகவும் குறைந்த கலோரிகள் கொண்ட பழமாகவும் உள்ளது. ​எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள்: எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலம். இந்த சிறிய பழத்தில் பொட்டாசியம், ஃபோலேட் கால்சியம், ஃபைபர் மெக்னீசியம் மற்றும் ஃப்ளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுகிறது. எலுமிச்சையின் தனித்துவமான நன்மைகள் குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்G.K.தாராஜெயஸ்ரீ BAMS. மாதவிடாய் கால பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாகும் மூலிகைகள், எல்லாமே வீட்டில் இருக்க கூடியவை ! தங்கானக்‌ஷரா (tankana kshara) என்ன

எனக்கா உடம்பு சரியில்லை. தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க !

Image
 சமீபத்தில் உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் பிரபல நடிகர் விஜயகாந்த் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும், எந்த இடர்பாடும் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். தான் நடித்த சத்ரியன் படத்தினை, தனக்கு சிகிச்சை உதவும் செவிலியர்களுடன் கண்டு களித்த புகைப்படத்தின் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கார்.  அவர் பாணியில் சொல்வதென்றால், யார்டா சொன்னது? எனக்கா உடம்பு சரியில்லை? தூக்கி அடிச்சிக்குவேன் பார்த்துக்க. என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.  விஜயகாந்த் அதைப் படித்துவிட்டு, யார்ரா இவன்? என நாக்கை துருத்தியபடி கேட்டிருக்கிறார். அதைப்பார்த்து சிரித்த செவிலியர்களைப் பார்த்து ஷ்ஷ்.. எதுக்கு சிரிக்கறீங்க என அதட்டி விட்டு..  சும்மா.. லுலூலாயி என சிரித்தார். நல்ல மனசனுக்குத் கடவுள் எத்தனை சோதையை கொடுக்கிறார் என பாருங்க ..

7 லட்சம் தாங்க வந்தது ! உண்மையை போட்டு உடைத்த புகழ் !

Image
குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் வழங்கிய லொள்ளு காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். மறைந்த நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை சிரிக்கமால் இருக்கும் போட்டியாளர்களே வெற்றியாளர்கள், மேலும் பரிசுத்தொகை 25 லட்சம்.  அந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் அபிஷேக்  கடைசி வரை சிரிக்காமல் இருந்து வெற்றி பெற்றார். இதனையடுத்து 6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்த புகழ் என செய்திகள் வைரலாகின.  தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ள புகழ், வெற்றி பெற்ற பரிசுத்தொகை இரண்டாக பிரிக்கப்பட்டது.  12.5 லட்சத்தில் டிடிஸ், வரி போக 7 லட்சம் தான் கைக்கு கிடைத்தது. ஆனால் 25 லட்சம் வாங்கிவிட்டேன் என செய்திகள் பரவின என அவர் கூறினார். 

17 வயது நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி ! காரணம் என்ன தெரியுமா?

Image
சினிமாவில் மட்டுமல்ல.. நிஜ வாழ்விலும் மகள் தான் ! ஹாலிவுட்டை அதிர வைத்த விஜய் சேதுபதி !  தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா. இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. விஜய்சேதுபதி இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.  கீர்த்தி ஷெட்டி ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஆமாம். நடிப்பை நடிப்பாக இல்லாமல், உண்மையாகவே சினிமாவில் வாழ்வதால் அந்த பாத்திரங்களின் படைப்பை கூட உண்மையான நிஜ வாழ்க்கையின் பாத்திரங்களாக மதிக்கும் குணம் விஜய் சேதுபதி

அமைதியான மனதைப் பெற 8 வழி முறைகள்..!

Image
1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் :- பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2.மறக்கவும்... மன்னிக்கவும் :- இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள் :- உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வே