Posts

Showing posts from June, 2017

பாரம்பரிய அரிசி வகைகள்

Image
நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி :  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும்.   9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. தங்கச்சம்பா அரிசி :  பல், இதயம் வலுவாகும்.  11. கருங்குறுவை அரிசி :  இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.  12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும்.  14. குடை வாழை அரிசி :  குடல் சுத்தமாகும்.  15. கிச்சிலி சம்பா அரிசி :  இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.  16.

திராட்சை பழரசம் கொடுக்கும் நன்மைகள் !

பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். அதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  கருப்பு திராட்சை ஜூஸை அருந்துவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். அதுமட்டுமல்லாமல் மாரடைப்பு தடுக்கப்படும். மேலும் இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திராட்சை ஜூஸ் உடலின் மெட்டாபலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் பல மடங்கு மெட்டாபலிசம் அதிகரிக்கும். திராட்சை ஜூஸ் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.  உடற்பயிற்சி செய்த பின்னர், திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைய காரணமாக அமையும். திராட்சை ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். ரத்தத்தில் கழிவுகளை வெளியேற்றும்.

நீரிழவு நோய் போக்கும் வெந்தயம் !

வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அதனை எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா? வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தே நீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும். வழி – 2 : முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும் வழி- 3 : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும். வழி -4 : வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். வழி -5 : குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொ

முகத்தை அழகாக்கும் ஃபேஸ் பேக்குகள் !

 பொதுவாக அனைவருமே முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஃபேஸ் பேக் போடுவோம். ஆனால் அவ்வாறு போடும் போது, சில சமயங்களில் பயம் ஏற்படும். ஏனெனில், சில பொருட்களை சருமத்தில் பயன்படுத்தினால், அவை சருமத்தில் அரிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காரணம், அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை.  மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகள் இங்கு பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள். முட்டை அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்த