Posts

Showing posts from July, 2020

சினிமா நடிகைகளை விஞ்சும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் நீச்சல்குள போட்டோ ஷூட்

Image
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சித்ரா. இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட தனது புதிய புகைப்படங்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் கலக்கி, பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்க்க தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் அதில் முல்லை கதாபாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்தளவிற்கு அவருடைய கதா பாத்திரம் தனித்துவம் மிக்கது. சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சித்ரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். அதில் சில புகைப்படங்கள் உடனடியாக வைரல் ஆகும். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள நீச்சல் குள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. .

கல்யாண வீடு சீரியல் ஹீரோயினுக்கு திருமணம் ! அடுத்து நடிப்பாரா? மாட்டாரா? பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் அவர் சொன்ன பதில் !

Image
கல்யாண வீடு சீரியல் ஹீரோயின் திடீரென காணாமல் போனார். எதனால் விலகினார் என்று ஒரே மர்ம மாக இருந்தது. இப்பொழுது அதற்கான காரணம் தெரிந்துள்ளது. பெங்களூரைவைச் சேர்ந்த நடிகை ஸ்பூர்த்தி கவுடா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி SUN TV யில் ஒளிப்பரப்படும் "கல்யாண வீடு" தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். திடீரென இவர் அதில் விலகியதை அடுத்து புதிய நாயகி தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், திடீரென விலக என்ன காரணம் என புரியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்பூர்த்தி கவுடா தனக்கு திருமணம் ஏற்பாடு நடப்பதால், கல்யாண வீடு தொடரிலிருந்து விலகி யிருப்பதாக அவரே கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கல்யாண வீடு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குநர் திருமுருகன் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  கோபி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சூர்யா கதிரேசன் என்ற கேரக்டரில் ஸ்பூர்த்தி கவுடா நடித்து வந்தார். ஊரடங்குக்கு முன்னர் வரை இவர் கல்யாண வீடு சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது இவருக்கு பதிலாக நடிகை கன்னிகா ரவி மாற்றப்பட்டுள்ளார். கோபி கதாபாத்திரத

காம சூத்ரா பட ஸ்டைலில் போஸ் கொடுத்து தனுசை மயக்கிய மாளவிகா மோகனன் ! அடுத்த படத்தில் நீதான் ஜோடி அதிர வைத்த தனுஷ் !!!

Image
தனுசை பொறுத்தவரை திறமைக்கு என்றும் மதிப்பு கொடுப்பார். அவர் படத்தில் நடிக்கும் நடிகைகள் அழகுடன் சேர்ந்து நடிப்புத் திறமை, நடன திறமை என்று பலதரப்பட்ட திறமைகளுடன் இருப்பர். அந்த வகையில் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேர்ந்தவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு தளபடி நடித்த மாஸ்டர் படத்தில் யார் விஜய்க்கு ஜோடி என தேடியபோது, அந்த வாய்ப்பை அசால்டா தட்டிச் சென்றார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனமாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது நமக்குத் தெரியும். கனக சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த ஊரடங்கு முடிந்த பிறகு திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடி சேர்ந்த மாளவிகா மோகனன் பற்றி ரசிகர்கள் அதிகம் தேடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை வெளியிட்டு வைரல் ஆக்கி வந்தார். அவர் குளோசப்பில் எடுத்து போடும் படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்பி வைரல் ஆக்கி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் அவர் காம சூத்ரா நடிகை போல போஸ் கொடுத்து எடுத்த புகைப்பட

கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா... வடிவேலு நடிக்கும் புதிய வெப் சீரிசை இயக்க போவது யார் தெரியுமா?

Image
"வைகை புயல்" என்று அழைக்கப்படும் வடிவேலு, திரையில் தோன்றினாலே சிரிப்பதற்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் அரசியல் பிரச்னைகளால் சில ஆண்டுகள் திரைப்படம் நடிக்காமலேயே இருந்தார். பிரமாண்ட திரைப்பட தயாரிப்பு டைரக்டர் சங்கர் அவர்களுக்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. ஆனால் உண்மையில் அது மட்டுமே காரணமாக இல்லை. திமுகவுக்கு ஆதரவாக ஓட்டு பிரசாரத்தில் ஈடுபட்டதிலிருந்து வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓரங்கப்பட்டார். இந்நிலையில் "காதல் மன்னன்" கமலஹாசன் நடிக்கும் "தலைவன் இருக்கிறான்" என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. அதுவும் கொரோனோ பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகை புயலை திரையில் பார்க்கலாம் என்ற நினைத்திருந்த ரசிகர்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இதனையடுத்து தலைநகரம், மருதமலை, படிக்காதவன் திரைப்படங்களை இயக்கிய சுராஜ் டைரக்சனில் புதிய படமொன்றில் வடிவேலு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு, தொடங்குவதாக இருந்த இத

அந்த படத்தில் அந்த மாதிரி ஏன் நடிச்சீங்க? திடீர் கேள்வியால் கதி கலங்கி போன ஹரீஸ் கல்யாண் சொன்ன பதில் என்ன தெரியுமா?

Image
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்பு. வாய்ப்புக்காக பல லட்சக்கணக்கானோர் தூக்கம் கெட்டி, பசி, பட்டினி இருந்து ஏங்கி நிற்கின்றனர். சினிமா கனவோடு வரும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எங்காவது ஒரு கூட்டத்தில் , கூட்டமோடு கூட்டமாக நிற்கும் துணை நடிகராக கூட பல வருடங்கள் போராட வேண்டியிருக்கும். பிரபலங்களின் வாரிசுகள் என்றால், நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் திறமையோடு இருப்பவர்கள் அதில் வெல்வார்கள். மற்றவர்கள் ஓட ஓட துரத்தி அடிப்பார்கள். இன்று நாம் காணும் கதாநாயகர்கள் பலர் நிலைக்காத துக்கு காரணம் திறமையின்மைதான். நடிப்புத்திறமை, பாட்டு, சண்டைக்காட்சிகளில் நடிக்க நல்ல கட்டுக்கோப்பான உடம்பு என பல திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் நின்று வென்று காட்டுகிறார்கள். சிலர் 18+ படங்களில் நடித்தாவது முன்னுக்கு வர வேண்டும் என்று கூச்சப்படாமல் "அந்த" மாதிரி படங்களில் நடித்து பெயர் பெறுகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஹரீஸ் கல்யான் நடித்து இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் சக்கை போடு போட்டது. குறிப்பாக பியார்  பிரேமா காதல் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இதன

கொரோனோவை குணப்படுத்தும் மூலிகை தேநீர் !

Image
கொரோனோவை குணப்படுத்திடும் மூலிகை தேநீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதியுடன் சித்த மருத்துவர் வீரபாபு, கபசுர குடிநீருக்கு துணை மருந்தாக இதைப் பயன்படுத்தி, கொரோனோ நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார். இந்த துணை மருந்தான "மூலிகை" தேநீரை வீட்டிலேயே தயாரித்து பருகலாம். கொரோனோவை குணப்படுத்த உதவிடும் மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி.? தேவையான பொருட்கள்:  சுக்கு, 100 கிராம்,  அதிமதுரம், 100 கிராம்,  சித்தரத்தை, 30 கிராம்  கடுக்காய்த்தோல், 30 கிராம்  மஞ்சள், 10 கிராம்,  திப்பிலி, ஐந்து கிராம்,  ஓமம் ஐந்து கிராம்,  கிராம்பு ஐந்து கிராம்,  மிளகு ஐந்து கிராம்  இவற்றை இடித்துப் பொடி செய்து, வைத்து கொள்ள வேண்டும்.  400 மில்லி நீரில் இந்த பொடியை, 10 கிராம் அளவு போட்டு, நன்கு கொதிக்க விடவும். இந்த கசாய நீர், 100 மி.லி., அளவாக வற்றியதும், ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து இறக்கி, இளம் சூடாக வடிகட்டி, காலை மற்றும் இரவு உணவுக்கு பின் குடிக்கலாம். இந்த மூலிகை தேநீரை, நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஒரு வேளைக்கு, 100 மில்லியும், சிறுவர்கள், 50 மில்லியும் குடிக்கலாம். கொரோனா இ

கொழுப்பெடுத்த போலீஸ் கார ர் செய்த செயலை பாருங்க ! வேடிக்கை பார்த்தவரை உதைத்து ஆற்றில் தள்ளிய கொடூரம் !

Image
உத்திரபிரதேசம், மிர்சா பூரில் கங்கை ந்தியில் ஒருவர் தவறி விழுந்து விட்டார். அவரை மீட்க மீட்பு குழுவினர் முயற்சித்து வந்தனர். அந்த நிலையில் அவரை மீட்பதை  வேடிக்கைப் பார்க்க கூட்டம் கூடியது. அப்பொழுது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை போலிஸ் கார ர் பின்னாலிருந்து எட்டி உதைத்து ஆற்றுக்குள் தள்ளினார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலிக் அந்த இளைஞர் நிலை தடுமாறி திடு திப்பென ஆற்றினுள் சரிந்தார். அப்பொழுது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவரை போன் பேசியவாறே வந்து காலை தட்டி விட்டு ஆற்றில் தள்ளி விட்ட மோசமான செயலை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். போலீஸ் என்றால், மக்களை காப்பதற்கு தானே ஒழிய, அவர்களை தாக்கி, மோசமான வார்த்தைகள் பேசி, அழிப்பதற்கு அல்ல. சமீபத்தில் அரசு உத்தரவினை மீறி கைப்பேசி கடையை திறந்து வைத்திருந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை - மகன் இரட்டை கொலை சம்பவம் பதபதைக்க வைத்தது நினைவிருக்கும். அதுபோல இந்தசம்பவமும் பார்ப்பவர்கள் மனதில் கோபத்தை கிளறி விட்டிருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் அந்த காவலரை

மன்னிப்பு' கேட்கிறேன்... நான் அந்த 'கட்சிக்கு' செல்லவில்லை... நடிகை குஷ்பூ விளக்கம்!

Image
கட்சி மாறுவதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சகஜம். ஆனால் நடிகர் நடிகைகளுக்கும் அது இப்போது பொருந்தும். ஒரு கட்சியில் ஏதேனும் பிரச்னை என்றால், உடனே எதிர் கட்சிக்கு தாவி, அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க, அதை மறைக்க என எத்தனையோ தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சிக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த வகையில் நடிகை குஷ்பூ முதலில் திமுகவிலிருந்து, காங்கிரஸ் க்கு கட்சிக்கு தாவினார். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைவதாக குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆளும் BJP கட்சியில் இணைவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் குஷ்பூ ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் ஆதரவளித்து வருகின்றனர். அந்த வகையில் இதை வரவேற்பதாக தனது ட்விட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி புதிய கல்விக்கொள்கையை விமர்ச

15 கோடி ரூபாய் அபேஸ் செய்து, சுஷாந்தை தற்கொலை மனநிலைக்குத் தள்ளிய காதலி ! வெளியான ரகசியம் !!!

Image
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், அவரது தந்தை சுஷாந்தின் காதலி மீது புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த சிங் தற்கொலையில் பரபரப்பு திருப்பம் பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த்தின் காதலியான ரியா சக்ராபொர்த்தி மீது, அவரது தந்தை காவல்துறையில் புகாரளித்திருப்பதுடன், அதன் முதல் தகவல் அறிக்கையையும் தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில், ரியா சக்ராபொர்த்தி, ரூபாய் 15 கோடியை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளதாக அவர் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த சிங் தற்கொலையில் பரபரப்பு திருப்பம் இதுமட்டுமின்றி, 2019-ஆம் ஆண்டு வரை சுஷாந்திற்கு எந்த மன அழுத்தமும் இல்லை

தட்டை பயிறு சுண்டல் இப்படி செய்து பாருங்க ! குடும்பமே இன்னும் வேணும்னு கேட்டு சாப்பிடும் !

Image
தேவையான பொருட்கள் காராமணி - 1 கப் தண்ணீர் உப்பு வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 துருவிய தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை காராமணிசுண்டல் செய்முறை 1. காராமணி சுண்டல் செய்ய ஒரு பாத்திரத்தில் காராமணியை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். 2. மூன்று மணி நேரம் கழித்து ஊறவைத்த காராமணியை குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். 3. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். 4. வெங்காயம் இளர் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த காராமணி, தேவையான அளவு உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். 5. சுவையான மற்றும் எளிமையான காராமணி சுண்டல் தயார்

ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள்

Image
ரிசர்வ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: அப்ளைடு மேத்தமெட்டிக்ஸ் 3, அப்ளைடு எகானாமிக்ஸ் 3, மைக்ரோ எகானாமிக்ஸ் 1, டேட்டா அனாலிட்டிக்ஸ் 5, ரிஸ்க் அனலிஸ்ட் 1, ரிஸ்க்மேனேஜ்மென்ட் 2, ஐ.டி., ஆடிட் 2, பாரன்சிக் ஆடிட் 1, சி.ஏ., 1, சிஸ்டம் அட்மின் 9, புராஜக்ட் அட்மின் 5, நெட்வொர்க் அட்மின் 6 என மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. வயது: 1.3.2020 அடிப்படையில் சிஸ்டம் அட்மின், புராஜக்ட் அட்மின், நெட்வொர்க் அட்மின் பதவிக்கு 25 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு 30 - 40 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. பணிக்காலம்: குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள். ஊதியம் : ஆண்டு ஊதியம் ரூ. 28.20 லட்சம் முதல் 33.60 லட்சம் வரை. தேர்ச்சி முறை : கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100. கடைசிநாள் : 22.8.2020 மாலை 6 மணி வரை விபரங்களுக்கு :  https://rbidocs.rbi.org.in/rdocs/Conten

என்.சி.இ.ஆர்.டி.,யில் 266 பேராசிரியர் வாய்ப்பு

Image
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 266 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம் : இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், வரலாறு, வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உடற்கல்வி, புவியியல், நுாலகர், உணவு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பேராசிரியர் 39, இணை பேராசிரியர் 83, உதவி பேராசிரியர் 144 என மொத்தம் 266 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன கல்வித்தகுதி : பாடப்பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். வயது : 65 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 3.8.2020 விபரங்களுக்கு : http://recruitment.ncert.gov.in/NCERTADVT171-2020.pdf

தமிழக அரசில் பணி ! மருத்துவத் துறையில் மகத்தான பணி ! government jobs

Image
தமிழகத்தில் தற்காலிகமாக 99 பணியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலியிடம்: ஸ்கில்டு அசிஸ்டென்ட் கிரேடு II பிரிவில் 87, பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவில் 12 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புடன் மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள் பிரிவில் என்.டி.சி., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பிசிசியன் அசிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்சி., (அலைடு ஹெல்த் சயின்ஸ்) அல்லது பி.எஸ்., (பிசிசியன் அசிஸ்டென்ட்) முடித்திருக்க வேண்டும். வயது : இரு பிரிவுகளுக்கும் 1.7.2020 அடிப்படையில் 18 - 58 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். ஸ்கில்டு அசிஸ்டென்ட் பிரிவுக்கு பத்தாம் வகுப்புக்கு 40%, என்.டி.சி., சான்றிதழுக்கு 60% சதவீதம் கணக்கிடப்படும். பிசிசியன் அசிஸ்டென்ட் பிரிவுக்கு பட்டப்படிப்பு 50%, பிளஸ் 2வில் 30%, பத்தாம் வகுப்புக்கு 20% மதிப்பெண் வழங்கப்படும் விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். விண்ணப்பக்கட்டணம் : ஸ்கில்டு அசிஸ்டென்ட் பதவிக்கு ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி.,

திடீர் மாரடைப்பு ! பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம் ! பிரபலங்கள் இரங்கல் !

Image
சினிமாவில் பிரபலம் ஆனாலே, புகழும் சேர்ந்துகொள்ளும். அதனால் அவர்களுக்கு ஏதாவது என்றால் உடனே ஊடகங்கள் பெரிதாக செய்திகளை வெளியிடும். ரசிகர்களுக்கு பிடித்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திடீரென மாரடைப்பால் காலமாகியுள்ளார். பிரபல பாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் இயக்குனர் பர்வேஸ் கான். இவர் இந்தியில் பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார். மாரடைப்பால் மரணம் ! நெஞ்சு வலி ஏற்பட்டதை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். இத்தகவலை பர்வேஸ்கானின் நீண்ட நாள் அசோசியேட் நிஷாந்த் கான் தெரிவித்துள்ளார். 'திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்தான் அவர் இறந்துள்ளார். அவருக்கு வேறு எந்த உடல் உபாதைகளும் அவருக்கு இல்லை' என்று அவர் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து பாலிவுட்டின் பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்ற

உடல் எடையை குறைக்க அருமையான பானம் ! இதை செய்து குடித்துப் பாருங்க.. ஒரே வாரத்தில் எடை குறையும் !

Image
சிலர் உடல் எடையைக் குறைக்க பல்வேறு விதமான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார்கள். ஆனால், சமயத்தில் நல்ல ருசியான உணவைப் பார்க்கும் போது, அவர்கள் பின்பற்றிய கட்டுபாடுகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அதுநாள் வரையில் கடைப்பிடித்திருந்த டயட் மொத்தமும் பீட்சா, பர்கரை போன்றவற்றைச் சாப்பிட்டு வீணாகிவிடும். எனவே, ஆரோக்கியமானவற்றை மட்டும் உணவில் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் போது, அதற்கு ஏற்றவாறு உணவுத் திட்டமும் தேவை. துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவைகளைக் கைவிட வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் இதுபோன்ற கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டும். இவை கடினமாக இருந்தாலும், அவ்வாறு உணவுக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் போதுதான் அதன் மதிப்பு உங்களுக்குப் புரியும். ஆனால், இதற்கு மத்தியிலும் சில உணவு வகைகள் உள்ளன. அவை நாவிற்குச் சுவையாகவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியும் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஸ்மூத்தி. பல்வேறு வகையான ஸ்மூத்திகள் உள்ளன. அவற்றில் ஆரோக்கியம் மிகுந்த உணவுப்பொருட்கள், பழங்கள் சேர

வைரஸில் இருந்து தப்பிக்க உதவும் மூலிகைகள் இது தான்! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

Image
உலகில் தற்போது க ரோ னா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன.தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து வருகின்றனர். க ரோ னா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை சீக்கிரம் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் நம்முடைய உணவு நோய் எதிர்சக்தி அதிகம் கொண்ட காய்களை சேர்த்து கொள்ள வேண்டும்.அது தவிர சில மூலிகைகளும் இருக்கின்றன. அத்துடன் வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்.குறிப்பாக சில மூலிகைகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால், அந்த மூலிகைகளைப் பற்றி பார்ப்போம். கற்பூரவள்ளி புதினா குடும்பத்தைச் சேர்ந்த கற்பூரவள்ளி இலைகளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இதில் உள்ள தாவர வகை பொருளான கார்வாக்ரோல் ஆன்டி-வைரல் பண்புகளை வழங்குகின்றன.எனவே நற்பதமான கற்பூரவள்ளி இலையை காலையில் எழுந்ததும் நீரில் கழுவி வாயில் போட்டு மென்று சாப்ப

யோக்யன் மாதிரி நடிப்பு தான். பிரபல அரசியல் தலைவரை விமர்சித்த இளம் நடிகை ! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Image
சினிமா என்றாலே அது இது என பல விஷயங்கள் உள்ளுக்குள் நடந்துக்கொண்டுதான் இருக்கும். சில உண்மையாக இருக்கும். பல பொய்யாக, புரளியாக, இட்டு கட்டி பிரபலமடைவதற்காக இருக்கும். ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட நடிகர் நடிகைகள் தங்களுடைய இமேஜை ஸ்பாய்ல் செய்து, நெகடிவ் விளம்பரம் மூலம் தங்களுடைய மார்க்கெட் சரிவை சரிகட்ட ஆள் வைத்து பொய்யான தகவல்களை பரப்பி விடுவதும் உண்டு.  சினிமா ஒரு பெரிய துறை என்பதால் பல லட்சக்கணக்கானவர்கள் அதில் இயங்கி கொண்டுதான் உள்ளனர். வெளியில் சிலர் மட்டுமே அனைவருக்கும் பெரிதாக தெரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் பிரபலமாகிவிடுகின்றனர்.  திறமையானவர்கள், ரெகமெண்டேசன் கிடைக்காமல், அவர்களை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்து கொண்டிருப்பார்கள். திடீரென ஒரு சில படங்கள் அவர்களை தூக்கி விட்டதுடன் மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்று உயரத்தில் உட்கார வைக்கும். அதுபோலதான் சினிமா பேக்ரவுண்ட் இல்லாதவர்கள் சினிமாவில் ஜெயிக்கிறார்கள். அந்த வகையில் பிரபல அரசியல் வாதியும், நடிகரும், இயக்குனருமான சீமான் பிரபலமானார்.  சமீபத்தில் அவரைப் பற்றிய அவதூறுகள் பல வந்த வண்ணம் உள்ளது. நடிகை விஜய லட்சும

காதில் பூச்சி புகுந்தால் எப்படி எடுப்பது? சுபல வழி !

Image
இப்பொழுது மழைக்காலம். எந்த ஒரு மாட மாளிகை என்றாலும் கூட, அதில் பூச்சி புகுந்து நமக்குத் தொல்லைத்தரும். லைட் வெளிச்சம் கண்டவுடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அதன் ஆட்டம் ஓயாது. காதில்  காதில் எறும்பு/வண்டு/ஈ/பூச்சிகள் புகுந்தால் தொல்லை அதிகமாகும். அதை எடுப்பது சுலமல்ல. சிறு குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் வீட்டில் மெத்தையில் கூட அந்த பூச்சிகள் சில நேரம் ஒளிந்துகொண்டு, இரவு விளக்கு ஏற்றும்போது, ஊர்ந்து வந்து நம்மை தொல்லைப்படுத்தும். சில நேரங்களில் உடலில் கடித்து, அரிப்பு, வீக்கம் ஏற்படும். ஒரு சில பூச்சிகள் கடித்தால் கொப்புளம் போட்டு, கொப்புளித்த இடத்தில் நீர் வரும். பிச்சிக்கொள்ளும். பிப்பு எடுக்கும்பொழுது சொரிந்தால் இதமாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் சிவந்து தடித்துக்கொள்ளும். அந்த நீர் படும் இடங்களிலெல்லாம் அதே போல சிவந்த திட்டுகள் உருவாகி மீண்டும் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படும். இது மேற்புறத்தோலில் ஏற்படும் பாதிப்புகள். அதே நேரத்தில் அந்த பூச்சிகள் மூக்கு, கண், காதுகளில் புகுந்தால் எரிச்சல் மிகும்.  கண்கள், மூக்கு துவாரங்களில் பூச்சிகள் விழுந்தால் அதை உடனடியா, அனிச்சையாக அந்த பூச்

'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற் கொ லை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்

Image
மூன்று மகன்கள் இருந்தும் அனாதையாகக் கை விடப்பட்டதால், உணவுக்கு வழியின்றி வயதான தம்பதி கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிப்பவர்கள் குணசேகரன் - செல்வி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  தற்போது, 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் பணிபுரிந்தார். கொரோனா காரணமாக சமீப காலமாக வாட்ச்மேன் வேலைக்கும் குணசேகரன் சென்று வந்துள்ளார். இவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமானபின் தாய் தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை. இவர்  மட்டும் பெற்றோருடன் வசித்தார். மதுவுக்கு அடிமையான ஸ்ரீதர் பணம் தேவைப்படும்போது மட்டும் வேலைக்குச் செனல்வார். மற்ற நேரங்களில் ஊர் சுற்றி திரிந்தார். ஊதாரித்தனமான இருந்துள்ளார். குடிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய் தந்தையிடமும் பணம் கேட்டுச் சண்டையிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் பறிபோனது. இதனால், போதிய வருமானம

விஜய் தங்கச்சி இப்போ என்ன பன்றாரு தெரியுமா?

Image
கில்லி படத்தில் விஜய் தங்கை யாக நடித்த சிறுமி இப்போ என்ன பன்றாரு தெரியுமா? தெரிந்தால் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்டுவீங்க.  ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தது தற்போது அது எனக்கு மைனஸாகி விட்டது என்று நடிகை ஜெனிபர் வருத்தத்துடன் கூறியுள்ளார். விஜய்யின் திரை பயணத்தில் மிகவும் முக்கியமான படம் ‘கில்லி’. இந்தப் படத்தை இன்றளவும் விஜய் ரசிகர்களால் மறக்க முடியாத படம். இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருப்பார். அத்துடன் படத்தில் விஜய்யின் தங்கை ஜெனிபர் என்பவர் நடித்திருப்பார். விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர், இப்போதும் ரசிகர்கள் நினைவில் தங்கையாக காட்சியளிக்கிறார். நடிகை ஜெனிபர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசினார். அப்போது அவர், ‘‘விஜய்யுடன் ‘கில்லி’ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தது மிகப்பெரிய பாக்கியம். ஆனால் அதில் இருந்து மக்கள் வெளிவராதது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில் யாராலும் என்னை நாயகி என்று ஏற்க முடியவில்லை. ‘கில்லி’ படத்தில் குட்டி பெண்ணாக நட

குஷ்பூ இடுப்பில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிந்தால் ஷா க் ஆவீங்க ! விபரம் உள்ளே !!!

Image
கே டிவி பார்த்துட்டே இருந்தோம். அப்ப நம் கண்ணில் ஒரு காட்சி தென்பட்டது. அதாவது நடிகை குஷ்பு இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை யார்னு தெரியுமா.. வாங்க தொடர்ந்து படிச்சு தெரிஞ்சுக்கங்க. லாக்டோன் டைம் என்பதால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். எல்லோருக்கும் இப்போது பெரிய பொழுது போக்காக இருப்பது டிவிதான். ஆனால் பாருங்க அதிலும் கூட கொரோனா பலி, கொரோனா பாதிப்புன்னு மக்களுக்கு டென்ஷன்தான் அதிகம். சரி சீரியல் பக்கம் போலாம்னு பார்த்தா புது எபிசோடுகளைக் காணோம். எல்லாமே பழசுதான். ரிப்பீட்தான். ஏதோ அரசாங்கத்தின் புண்ணியத்தால் இப்போது கொஞ்சம் பாதுகாப்போடு ஷூட்டிங்குகளை ஆரம்பிச்சிருக்காங்க. படமா பார்க்கிறாங்க மக்களுக்கு இந்த நேரத்தில் மிகச் சிறந்த பொழுது போக்காக இருப்பது இந்த ஓடிடி சானல்களும், டிவி சானல்களில் காட்டப்படும் படங்களும்தான். அதிலும் ஓடிடி சானல்களில் புத்தம் புதுப் படங்களையே டைரக்டகா ரிலீஸ் செய்ய ஆரம்பித்து விட்டனர். .மக்களும் செம ஜாலியாக பைசா செலவில்லாமல் திரும்பத் திரும்பப் பார்த்து என்ஜாய் செய்கின்றனர். 20, 30 படங்கள் அதேபோல டிவி சானல்களிலும் படங்கள்த

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

Image
வெண்டைக்காஉ மனித உடலுக்கு தேவையான பல நற்குணங்களை உள்ளடக்கியுள்ளது. அவை பின்வருமாறு... வெண்டைக்காயில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருள் உள்ளது. இதய துடிப்பை சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகிறது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.  இளம் வெண்டை பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு எரிச்சல் போன்றவையும் தணியும். வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. வெண்டைக்காயில் உள்ள ஃபோலேட், எலும்புகளை  உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது.  ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து.  வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.

பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

Image
பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள். பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து  கொள்ளலாம்.  வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு  கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும்.  பாலில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதை கண்டறிய ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால்  நுரை வரும்.  வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும். ஆனால், சோப்புத் தூள் கலந்த  பாலாக இருப்பின் அந்த நுரை போகாது.  சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால்,  கலப்பட பால் திரியாது.  பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஒரு சிறிய டம்ளரில்  பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காக

இதயநோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுமா பிஸ்தா...?

Image
இன்றைய கால கட்டத்தில் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் அற்ற மாற்றத்தினை பெற்றுக் கொள்ளலாம். பிஸ்தாவில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருப்பதால், குளுக்கோஸை அமினோ அமிலமாகச் சிதைக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு  பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவு என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து. பிஸ்தா நல்ல ஆரோக்கியத்தை வழங்கக் கூடியது. பிஸ்தாவில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி6, ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு இது, செல்களுக்கு ஆக்சிஜனையும் கொடுக்கிறது. வைட்டமின் பி6, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிஸ்தாவில் அதிகமாக உள்ள வைட்டமின் ஈ, தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து அதன் பொலிவைக் காக்கிறது. மேலும் வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும்,  தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது. பிஸ்தாவில் சியாசாந்தின், லூட்டின் ஆகிய இரு கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன.

உடம்புல இருக்குற அதிகமான கொழுப்பு வேகமா குறையணுமா? அப்ப பூண்டை இப்படி சாப்பிடுங்க...!

Image
லாக்டவுன் காலத்தில் வீட்டிலேயே இருந்து வாய்க்கு ருசியாக வயிறு நிறைய சாப்பிட்டு பலருக்கும் தொப்பை வந்திருக்கும். என்ன சரிதானே? ஒருவரது உடல் எடையை அதிகரிப்பது என்பது சுலபமான ஒன்று.  ஆனால் அதைக் குறைப்பது தான் மிகவும் கடினமான செயல் மற்றும் அதற்காக கடுமையாக போராடி வேண்டியிருக்கும். டயட் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதன் மூலம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற பல மாதங்கள் ஆகும்.  ஆனால் நீங்கள் பழைய உடலமைப்பை வேகமாக பெற நினைத்தால், பூண்டு நீரைக் குடியுங்கள். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இது சிறப்பான பலனைத் தரும். பூண்டின் குணங்கள் பூண்டு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மிகச்சிறப்பான பொருட்களில் ஒன்று. ஒருவர் அன்றாட உணவில் பூண்டை அதிகம் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.  உலகெங்கிலும் சமையலில் பயன்படுத்தப்படும் ஓர் முக்கிய பொருள் தான் பூண்டு.  குறிப்பாக இந்திய உணவுகளில் இது கட்டாயம் இடம் பெறக்கூடிய ஒரு பொருளும் கூட. பூண்டு நல்ல மணத்தைக் கொண்டதால், இது உணவிற்கு ஓர் நல்ல மணத்த