Posts

Showing posts from October, 2020

பூனம் பஜ்வாவின் காதலர் ? வெளியான புகைப்படம் !

Image
 நடிகை பூனம் பஜ்வாவின் காதலர் புகைப்படத்தை அவர் நேற்று வெளியிட்டார். இதுவரைக்கும் அவருடைய காதலர் யார் என்று தெரியாத ரகிசயமாய் இருந்த நிலையில், இன்று அவர் வெளிப்படையாக அவருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  முதன்முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஹரியின் சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.  சேவல் தவிர இவரது படங்கள் பெரியளவில் பாராட்டுக்களைக் குவிட்டாவிட்டாலும் பூனம் பாஜ்வாவுக்கு பெரிய ஃபாலோயர்ஸ் கூட்டமே சமூக வலைதளங்களில் இருக்கிறது.  இன்ஸ்டாகிராமில், இவரை பின் தொடர்பவர்கள் மட்டுமே 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்குமேல் காரணம், தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் நெட்டிசன்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளார்.  காலை குட்மார்னிங்கை கூட பூனம் பாஜ்வாவின் புகைப்படத்துடன் ஆரம்பிக்கும் ரசிகர்கள் கூட்டமே இவருக்கு ஃபேஸ்புக்கில் உண்டு. இந்நிலையில், இன்று த

Cardiac Diet | loss 33 pounds in 15 days

Image
Maintaining optimal heart health is something we don’t take too seriously, the diet plays an essential part in this field. The internet is overwhelmed with diets that prioritize trimming the belly fat or slimming the waists in an unhealthy way. But the cardiac diet is something different than other diets. Why Choosing Cardiac Diet? Cardiac diet or a heart-healthy diet is low-calorie diet (1000-1200 calories/daily) is based on eating plenty of nutritious foods full of vitamins, minerals, clean protein, monosaturated fats. Just like veggies, fruits, whole grains, fish and lean poultry. It also suggests skipping trans fats, saturated fats, and sodium foods, sugar and limiting junk foods as much as possible. While regular exercise or other activity is necessary to help boost heart health. People who are overweight and have high cholesterol have greater chances of underlying other medical conditions like as high blood pressure, sleep apnea, cardiovascular diseases, gallbladder disease, etc.

Control Your Blood Pressure, Protect Your Health

Image
 Do you have high blood pressure?  According to the American Heart Association (AHA), approximately half of American adults have high blood pressure (hypertension), but the majority (75 %) do not have it under control.Maintaining a healthy blood pressure is important for everyone, especially during the ongoing COVID-19 pandemic.High blood pressure remains the leading cause of heart attack and stroke, and it is a contributing factor in poor outcomes for individuals who contract COVID-19, the American Heart Association says. Fortunately, high blood pressure also is the most significant controllable risk factor in maintaining heart health. "Lowering your blood pressure is one of the most important things you can do to reduce your risk of dying from a heart attack or stroke," says Willie Lawrence, M.D., chief of cardiology, Research Medical Center, and American Heart Association volunteer expert.If you have high blood pressure, work with your healthcare provider to manage your r

காப்பீடு (Insurance) எடுப்பதன் பயன்கள் எவை?

Image
 1.காப்பீடு எடுப்பதன் மூலம் பல பயன்களை நாம் காணலாம். . குடும்பத்திற்கு நிதி நிலை ஸ்திரத்தன்மை - குடும்பத்தின் பிரதம வருமானம் ஈட்டுபவர் (குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி) மரணம் அடைந்தால் குடும்பத்தின் வருங்கால செலவுகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் நிதி நிலை பாதிக்கபடும். அதை பெருமளவுக்கு ஈடு காட்டும் விதத்தில் ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியம். ஆயுள் காப்பது மூலம் கொடுக்க படும் நிதியை வைத்து குடும்பம் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பெரும் சிரமம் இன்றி நடத்த முடியும். 2. வரி விலக்கு - அரசாங்கம் மக்களை ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு வரி விளக்கும் அளிக்கிறார்கள். இது ஒருவருடைய வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தை (Taxable income) குறைக்க உதவி செய்கிறது 3. கடன் வாங்கும் தகுதி - ஒருவர் தகுந்த அளவுக்கு ஆயுள் காப்பீடு எடுத்திருந்தால், அவர் ஏதேனும் தேவைக்கு ஒரு வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ கடன் வாங்க முற்படின், அவரின் விண்ணப்பம் முன்னுரிமை பெற வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில். கடன் எடுத்த பிறகு அவர் மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினனார் இடம் இருந்து பாக்கி கடனை வசூலிக்கும் வா

அதிக அளவில் இலாபத்தினைத் தரக்கூடிய மிகவும் பயனுள்ள காப்பீடுகள் எவை?

Image
பொதுக் காப்பீட்டை பொறுத்தமட்டில் இலாபம் கிடையாது…இலாப நோக்கில் பாலிசி வடிவமைக்க படவில்லை… உங்கள்‌ இழப்பை சரிகட்டவே காப்பீடு…நீங்கள் இழப்பிற்கு முன்‌ இருந்த நிலைக்கு கொண்டுவரவே காப்பீடு…இழப்பிற்கு முன் இருந்த நிலையை விட ஒருபடி உயர்வை தருவது காப்பீட்டின் நோக்கம் அன்று… இலாபம் என்றில்லாமல் பாதுகாப்பு என்ற ஒற்றை சொல் தான் காப்பீடின் அடிப்படையே… ஊரில் ஒருவர் நான்கு காப்பீடு நிறுவனங்களில் நான்கு விதமான விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்துள்ளார்…திடீரென விபத்தில் இறந்து போகிறார்…அவருக்கு நான்கு நிறுவனத்தில் இருந்தும் காப்பீடு பலன் கிட்டும்…அந்த தொகை மிக அதிகமாக இருக்கும் இலாபகரமாகவும் இருக்கும்…ஆனால் யாரும்‌ இலாபத்திற்காக சாக முடியுமா? இயல்பான நிகழ்விற்கே காப்பீடு பாதுகாப்பிற்கே காப்பீடு இலாபத்திற்காக ஒருபோதும் பொதுத்காப்பீடு இல்லை… இதில் ஒரு அடிப்படைத் தவறு உள்ளது. ஐயா, ஓர் அடிப்படைத் தவறு. காப்பீட்டில் லாபம் எதிர் பார்க்கக் கூடாது காப்பீடு என்பதே, நமக்கு இழப்பு வந்தால் அதைச் சரிக்கட்ட இழப்பீடு தருவது. காப்பீடு செய்யும்போது, எந்தெந்த இழப்புக்கள்/விபத்துக்கள் வரக்கூடும் என்று எண்ணி ஆராய்ந்து காப

லைஃப் இன்சூரன்ஸ் அல்லது டேர்ம் இன்சூரன்ஸ் இரண்டில் எது அதிக பயன் தரக்கூடியது?

Image
காப்பீடுகளில் பல வகைகள் உள்ளன. அவற்றை கீழ்கண்ட சித்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். டெர்ம் இன்சூரன்ஸ் என்பது காப்பீடுகளிலேயே மிக குறைந்த விலைக்கு மிக அதிக காப்பீடை அளிக்கும் திட்டமாகும். ஆனால் வழக்கமாக ஒரு காப்பீடு ஏஜென்ட் தங்களிடம் பேசும்போது, டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி கூறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, ஏனெனில், ஏஜென்ட்டுகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் கமிஷன் மிக குறைவு. அதனால், அவர்கள் தங்களிடம் டேர்ம் இன்சூரன்ஸ் அல்லாத மற்ற பல திட்டங்களை மட்டுமே விவரிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி கூறினால், தாங்கள் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பற்றி அவர்களை கேட்கலாம். ஒருவருடைய வருட வருமானத்தின் பன்னிரண்டு பங்கு அளவுக்கு (12 x Annual Income ) டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது குறைந்த பட்ச அத்தியாவசியம். மேலும், ஒருவருக்கு பலவித கடன் பளுக்கள் இருப்பின், அதன் மதிப்பையும் சேர்த்து கொள்ள வேண்டும். காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்து கையாள்வது உகந்தது. டேர்ம் இன்சூரன்ஸ் அல்லாத மற்ற பல திட்டங்கள் காப்பீட்டையும் முதைலீட்டையும் கலந்து தரும் திட்டங்கள் ஆகும்., அது போன்ற திட்டங்களினால் தங்களுக்

யார் யாருக்கெல்லாம் மருத்துவக் காப்பீடு தேவை? யாரெல்லாம் தகுதியுடைவர்கள்? விரிவான அலசல் !

Image
  மருத்துவ காப்பீடு அனைவருக்கும் அவசியமான ஒன்று…யார் யார்‌ இதை பெறலாம் என்று பார்ப்போம்… பிறந்த குழந்தைக்கு மருத்துவ காப்பீடு பிறந்த முதல் நொடியிலிருந்து காப்பீடு உள்ளது…ஆனால் அதை அனுபவிக்க குழந்தையின் பெற்றோர் இருவரும் அல்லது யாரேனும் ஒருவர் காப்பீடு வைத்திருக்க வேண்டும்…குழந்தை பிறந்த பின்வரும் முதல் மூன்று மாதங்களுக்கான மருத்துவ‌காப்பீடு முற்றிலும் இலவசம்…அதன்பின் அந்த குழந்தையின் பெயரை, பெயர் வைக்காத பட்சத்தில் நியூ பார்ன் பேபி என்று பிரீமியம் தொகை செலுத்தி‌ சேர்த்துக் கொள்ளலாம்… புதுமணப்பெண் அல்லது புதுமணப்பையன் திருமணமான ஆண் அல்லது பெண் ஒருவருக்கு, ஏற்கனவே மருத்துவகாப்பீடு இருக்கும் பட்சத்தில் தன் இணையை தனது பாலிசியிலே இணைத்துக் கொள்ளலாம். ஆனால் திருமணம் முடிந்து 60 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்…ஆதாரமாக திருமண அழைப்பிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும். நான் எப்போது மருத்துவ காப்பீடு எடுக்கலாம்? ஒருவர் தனக்கு எதாவது நோயுக்கான அறிகுறி தென்படும் வேளையில் எடுப்பது நல்லதா? தன்னோடு வேலை பார்க்கும் 28 வயது நபர் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இலட்சங்களை தன் சேமிப்பில் கரை

பக்கவாதத்திற்கு பக்காவானா மருந்து இதுதான் !

Image
  பக்க வாதம் வந்து, கை,கால் இழுத்துப் போகும். முகம் கோணி போய் விகார தோற்றம் வந்து இம்சை படுத்தும். பார்ப்பதற்கே மிக கஷ்டமாக இருக்கும். வந்தவருக்கு மனது அவஸ்தை படும். இன்னல் வந்து சேரும். "பக்கவாதம்" எதனால் வருகிறது? அதை எப்படி தடுப்பது? என்பது பற்றி பலரும் அறிந்திருக்க கூடும். பக்க வாத த்திற்கு ஒரு "பக்கா" வான மருந்து இருக்கிறது.  பக்க வாதத்திற்கு சரியான எளிமையான இரகசிய மருத்துவ குறிப்பு ஐயா ஜெகத்குரு அவர்களால் வெளியிடப்பட்டது. தேவையான பொருட்கள்:-  1. மருதம் பட்டை 20 கிராம் 2. தெளிந்த இஞ்சி சாறு 100 மில்லி லிட்டர் (தோல் நீக்கியது) 3. பூண்டு சாறு 100 மில்லி லிட்டர் 4. 5 எலுமிச்சை பழசாறு 5. 10 பெரிய நெல்லி சாறு 6. ஆப்பிள் சீடர் வினிகர் 200 மில்லி லிட்டர் 7. சுத்தமான தேன் 200 மில்லி லிட்டர்  செய்முறை:-  20 கிராம் மருதம் பட்டையை அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க விடவும், அதை கால் லிட்டர் ஆன உடன் அதன் சூடு தன்மை  நன்றாக ஆற வைத்து மேலே குறிப்பிட்ட தேவையான பொருட்களை நன்றாக கலந்து வைத்துக்கொண்டு, பிறகு தினமும் உணவுக்கு பின் மூன்று வேளை இளம் சூடான நீரில் இந்த கசாய மருந்தை கொடுத்து

கொ ரோனோ வை ர ஸ் சிலிருந்து தப்ப வைக்கும் மூலிகை இதுதான் !

Image
கொரோனோ வைரசிலிருந்து உங்களை காத்திடும் பல இயற்கை மூலிகைகள் உள்ளன. அவை எங்கும் காணப்படுகின்றன. ஆனால் அது இதுக்குத்தான் என்ற எண்ணம்/அறிவு நமக்கு இருப்பதில்லை. அது ப ற்றிதான் இந்த பதிவு. நம் சமையறையில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே கொரோன வைரஸ் வராமல் நம்மை தடுத்திடலாம்.  உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் அந்த வைரஸ் நம் உடலை அடைந்து பரவி பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கலாம். சில மூலிகைகளை பயன்படுத்தி, எந்த ஒரு நோயும் நம்மை அண்டாமல் காத்திடலாம்.  கொரோன வைரஸ் தாக்காமல் காத்திடும் மூலிகைகள்:  உலகில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன. தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை சீக்கிரம் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் நம்முடைய உணவு நோய் எதிர்சக்தி அதிகம் கொண்ட காய்களை சேர்த்து கொள்ள வேண்டும். அது தவிர சில மூலிகைகளும் இருக்கின்றன. அத்துடன் வைரஸை எதிர்த்து

சிரித்துப் பேசி ஒட்டு மொத்த பேரையும் அழ வைத்த பெண் ! 60 லட்சம் பார்வைகள் பெற்ற வைரல் வீடியோ. !!!

Image
மனிதர்களுக்கு உறவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்த வீடியோ வழியாக உணர்த்துகிறார் இந்தப்பெண். உறவுகளின் நிலைகளை பலர் புரிந்துகொள்வதே இல்லை. பணத்தை நோக்கிய இயந்திர பயணத்தில், எல்லாம் மறந்து, மனிதம் கெட்டுக்கிடக்கிறது. உறவுகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகளில்தான் எத்தனை பாசம் ஒளிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு உறவுகளின் பிரதிநிதியாய் இப்பெண் பேசும் பேச்சுக்கள், முக பாவனைகள் ஒரு தேர்ந்த நடிகையை வெளிக்காட்டுகிறது. அப்ப ப்பா.. கடைசியில் முடிக்கும் நேர்த்தி, அதை பார்ப்பவர்கள் 60 லட்சம் பேரையும் இறுதியில் கண் கலங்க வைக்கிறது.  வீடியோ இதோ உங்களுக்காக. 

உயிர் போற மூட்டு வலியா? உடனே இருக்கு தீர்வு !!!

Image
வயோதிகத்தினால் சிலருக்கு தீராத மூட்டு வலி வந்து சேரும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் உராய்வு காரணமாக வலி வந்து உயிர் போகும். இன்னதென்ன சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அதிகரிக்கும். எந்த வைத்தியம் செய்தாலும் சரியாகாது. அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வலி குறைந்து மீண்டும் வலி வந்து பின்னி எடுக்கும். சில நேரங்களில் இந்த உலகத்தில் இந்த வலியோடு நாம வாழத்தான் வேண்டுமா என்று தோன்றும்.  வயோதிகர்களுக்கு அப்படி என்றால், வாலிப வயதுடையவர்களுக்கும் வலி வந்து உயிர் போகும். அதிக எடை, ஜங்க் புட் என்று சொல்லப்படும் துரித வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகளாக மூட்டுவலி, உடல் வலி, முதுகு வந்து சேரும்.  சிலருக்கு வாத பிரச்னைகளால் வலி வந்து குத்தி எடுக்கும். அதிக நேரம் நின்று வேலை செய்பவர்கள், காலுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், கால்சியம் சத்து குறைபாடு உடையவர்கள் என பலருக்கும் மூட்டு வலி வந்து பின்னி எடுக்கும்.  குழந்தைகளுக்கு கூட சில நேரங்களில் மூட்டுகளில் அடிபடுதல், சத்து பற்றாக்குறை மற்றும் அதிக எடை காரணமாக மூட்டு வலி தொந்தரவு வந்து சேரும். எடுக்கும் சில மாத்திரைகள், மருந

இந்த இலை மட்டும் இருந்தால் போதும் ! எப்பேர்பட்ட விஷகடியும் குணமாகும் !!!!

Image
சில நேரங்களில் நமக்குத் தெரியாமலேயே விஷகடியால் பாதிக்கபடுவோம். ஆனால் இன்னதென தெரியாமல் இருக்கும். விஷகடி பிரச்னையால், தோலில் அரிப்பு ஏற்படுதல், தடிப்பு ஏற்பட்டு சிவந்து போதல் போன்ற ஓவ்வவாமை ஏற்படும். விஷகடி அறிகுறிகள்: உடல் முழுதும் எரிச்சலாக இருக்கும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும். உடலின் சில இடங்களில் புழுக்களின் ரோமங்களைப் போன்று வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும்.  விஷகடிக்கு இயற்கை வைத்தியம்: இந்த பிரச்னைக்கு தீர்வு தருகிறது கரிசலாங்கண்ணி. இந்த இலையுடன் மோர் கலந்து கொடுக்க விஷகடி பிரச்னை தீரும்.  செய்முறை:  கரிசலாங்கண்ணி இலைகளை போதுமான அளவு எடுத்து, அதை நன்றாக கசக்கி அல்லது மிக்சியில் போட்டு அரைத்து, சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் போதுமான அளவு மோர் கலந்து, காலை , மாலை என இருவேளை கலந்து குடித்து வர, விஷகடி பிரச்னை தீரும். 

கால் ஆணியை எடுப்பது எப்படி? (இயற்கை மருத்துவம்)

Image
காலில் ஏதாவது குத்தி, அது உள்ளே இருந்து, தோலில் வினையாற்றி, கடைசியில் வலியை ஏற்படுத்தும். குத்தின இடத்தைச் சுற்றி கால் மரத்துப் போகும். நாளடைவில் அது "கால் ஆணி" யாக மாறிவிடுகிறது. இதனால் காலை கீழே வைத்து ஊன்றி நடக்க முடியாது. சில கிருமி தொற்றுகளினாலும் காலில் ஆணி ஏற்டும். அப்படி ஏற்பட்ட கால் பிரச்னையை சரி செய்ய பின்வரும் முறைகளைப் பின்பற்றுங்கள். கண்டிப்பாக உங்களது KAAL AANI பிரச்னை தீரும்.  கால் ஆணியை சரி செய்யும் கடுகு கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை  சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும். பூண்டு போக்கும் கால் ஆணி  கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம். கால் ஆணி குணமாக வே

இனி, காது ஓட்டையை தைக்க வேண்டாம். பெரிய ஓட்டை 1 நாளில் சிறியதாக மாறும் !!!!

Image
தமிழக பாரம்பரியங்களில் ஒன்று காது குத்து. குழந்தை பிறந்து 7 அல்லது 9 மாதங்களில் இந்த வைபவர் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல இடங்களிலும் இந்த இந்து சம்பிரதாயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றனர்.  ஆண்கள் என்றால், சிறிது காலத்திற்கு பிறகு காதில் உள்ள ஆபரணத்தை அகற்றிவிடுவார்கள். அதனால் காதில் ஏற்படும் ஓட்டை தானாகவே அடைப்பட்டுவிடும். பெண்களுக்கும் சிலர் எடுத்து விடுவதுண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படி எடுப்பதில்லை. குறிப்பாக அந்தக்காலத்தில் அதிக எடை உடன் கூடிய ஆபரணங்களை விரும்பி அணிந்து வருவர். அப்படி அணிவது நாட்பட நாட்பட "வெயிட்" தாங்காமல், காது இழுத்துக்கொண்டு வந்து பெரிய ஓட்டையாக மாறத்தொடங்கும்.  வயது ஆக, ஆக, தோலின் இலகுதன்மை அதிகமாகி, அது பெரீய்யய்ய ஓட்டையாக மாறி ஒரு விதமான விருப்பமில்லாத தன்மையை உருவாக்கிவிடும்.  இள வயதிலேயே கூட காது தாங்கும் அளவிற்கு மேல் அதிக எடையுடன் கூடிய தோடுகளை அணிவதால் காதில் ஓட்டை பெரியதாகிவிடும். அப்படி தோன்றிய ஓட்டைகளை சிலர் வெட்டி தையல் போட்டு சரி செய்துவிடுவர். அதற்கு மருத்துவச்செலவு அதிகமாக இருக்கும்.  ஒரு சிலர் அப்படியே விட்டுவ

குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகள் !

Image
 குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம். தாய் செய்யும் தவறுகள் என்னென்ன? ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச கூடாது. பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம். குழந்தை ஒரு வயது ஆனதும் ஓடியாடி விளையாடும்போது சில தாய்மார்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. இது தவறு. சிறிது நேரமாவது குழந்தையுடன் ஓடியாடி விளையாடுவதுதான் சரி. வீட்டில் சண்டை போன்றதை பார்க்கும் குழந்தைகள் மனதால் வெகுவாக பாதிக்கின்றனர். இதைத் தாயும் தந்தையும் சேர்ந்தே தவிர்க்க வேண்டும். பிடிவாதம் செய்யும் க

10 தடவை பாம்பு கடித்தாலும், இந்த ஒற்றை இலை போதும் !

Image
ஒன்று அல்ல.. இரண்டு அல்ல.. 100 முறை பாம்பு கடித்தாலும், இந்த இலை மட்டும் இருந்தால் போதும். உடலில் ஏறும் விஷம் முறிந்து, இயல்பு நிலைக்கு திரும்பலாம்.   “பா ம்பு கடித்தால் சா வு தான்” என்பது தான் பொதுவான கருத்து.ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பா ம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். க டித்த பா ம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பா ம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பா ம்பு க டி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இ

மூக்கடைப்பை சரிசெய்ய கூடிய எளிமையான வீட்டு வைத்திய டிப்ஸ்

Image
அடிக்கடி மூக்கடைத்துக்கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும், சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை சற்று அதிகமாகவே காணப்படும். குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். என்ன செய்யலாம்? சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே முழுமையான குணம் கிடைக்கும். எப்படி எனப் பார்க்கலாமா... மூக்கடைப்பை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்.. குளியல் மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது. குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும். மூக்கை சுத்தம் செய்யும் பாட் பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும். தேன் மிளகு 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம். கைக்குட்டை கைக்குட்டையி

வறண்ட சருமம் சரியாக 24 சூப்பர் டிப்ஸ்

Image
 வறண்ட சருமம் என்பது பெரும்பாலான பெண்களுக்கு மன உளைச்சலைத் தரக்கூடியது. எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதற்கு ஏதேதோ க்ரீம்களை உபயோகித்து அலுத்துப் போயிருப்பீர்கள்.  நண்பர்களும் அது இது என சில குறிப்புகளைச் சொல்லியிருப்பார்கள். எதுவும் உபயோகப்பட்டிருக்காது. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக பழையபடி வறண்ட தோற்றத்துக்கே சென்றுவிடும்.  இதற்கு என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்காக சில டிப்ஸ். இதற்காக ரொம்ப மெனக்கெடத் தேவையில்லை. வீட்டிலேயே தயார் செய்துகொள்ளலாம். இதில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்று பயப்படவும் தேவையில்லை. 1.ஆப்பிள் ஆப்பிள் முழுவதுமே வறண்ட சருமத்துக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. ஆப்பிளைத் தோலை நீக்கிவிட்டு, அதைத் துண்டு துண்டாக நறுக்கி, பாலில் போட்டுக் கொதிக்க வையுங்கள். கெட்டியாகத் தயிர் போல ஆகிவிடும். அதை நன்றாக ஆற வைத்து தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து முகத்தில் பூசி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு கழுவினால் முகம் பொலிவு பெறும். பால் இல்லாமல் இன்னொரு வழியும் இருக்கிறது. அதே ப

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் ! இலங்கை செல்கிறது தனிப்படை !

Image
 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட இருந்த ‘800’ திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து ‘800’ திரைப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.  இந்நிலையில், விஜய் சேதுபதி தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு ஒன்றில், ரித்திக்என்ற நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்டார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நபரை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபலரும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மிரட்டல் விடுத்தது இலங்கையைச் சேர்ந்தவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய விரைவில் தனிப்படை போலீஸார் இலங்கை செல்ல உள்ளனர். சாதாரண சினிமா படத்தில் நடிப்பதற்காக இப்படி என்றால், உண்மையாகவே பல

குழந்தைகள் வீட்டில் இதெல்லாம் செய்யவே கூடாது… 43 ரூல்ஸ்… !!!

Image
குழந்தைகள் முன் இதெல்லாம் செய்ய கூடாது, பேச கூடாது என விதிமுறைகள் உள்ளன. இவற்றை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து செயல்படுவது நல்லது. குழந்தைதானே என அவர்கள் முன் நீங்கள் செய்யும் தவறுகள். குழந்தையின் தவறுகளுக்கு ஆரம்பமாகலாம். குழந்தை முன்னிலையில் இதையெல்லாம் தவிருங்கள்… சரி செய்யுங்கள்... #1.குழந்தைகள் நிறையத் தவறு செய்வார்கள். அதைக் கண்டிக்காமல் விட்டு விட்டு கொஞ்சி கொண்டே இருக்க வேண்டாம்.  #2.தந்தையை, தாயை, பெரியவர்களைக் குழந்தை அடிக்கும் போது பார்த்துக் கொண்டு இருப்பது தவறு. குழந்தையை திருத்தாவிட்டால் பெரியவர்கள் ஆனதும் திருத்தவே முடியாமல் போகும்.  #3.’தண்டனைத் தருகிறேன்’ எனக் குழந்தையிடம் அன்பாக இல்லாமல் இருப்பதும் தவறுதான்.  #4.குழந்தைகள் முன்னிலையில் மற்றோரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேச கூடாது. அதுபோல், மற்றொரு குழந்தையை ஒப்பிட்டு தன் குழந்தையை தாழ்த்தி மற்றவர்களிடம் பேச கூடாது.  #5.தன் குழந்தையைப் பற்றி தாங்களே அதிகமாக பெருமையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.  #6.உன்னை ஹாஸ்டலில் விட்டுவிடுவேன். உன்னை வேறு யாருக்காவது கொடுத்து விடுவேன் என பயமுறுத்தி வைக்க கூடாது.  #7.’தனக்கு உதவி செய்ய யார

மஞ்சளை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது தெரியுமா?

Image
மஞ்சளை பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். இதில் அதிகளவு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள முக்கிய பொருளான குர்குமின், சிறந்த நோயெதிர்ப்பு பொருளாக உள்ளது. இது இயற்கையாகவே தொற்றுகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்பட கூடியது தான். . அதுமட்டுமின்றி மஞ்சள் இருதய பாதிப்புகள் மற்றும் கேன்சர் செல்களுடன் போராடக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. மஞ்சள் உங்களது மூளையை பாதுகாக்கும் திறனையும் பெற்றுள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாகிறது. . மஞ்சளை மருந்துக்கு பதிலாக பயன்படுத்துவது சிறந்தது தான். ஆனால் மஞ்சளை மருந்துடன் சேர்த்து பயன்படுத்துவது சரியாக இருக்குமா? . மஞ்சள் 4000 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த மிகச்சிறந்த மருத்துவ பொருளாகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ஆராய்ச்சிகளில் மஞ்சள் ஒரு இயற்கை மருந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. . ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய குறைப்பாட்டை சரிசெய்யும் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது, அதனுடன் மஞ்சளை உபயோகப்படுத்த கூடாது. ஏனெனில் இது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த

வேல்முருகன்.. ஷனம் ரெட்டியா போய் நீங்க இப்படி தூக்கலாமா? பார்ப்பவர்களுக்கு எரியுமா எரியாதா?

Image
சனம் ஷெட்டிக்கு பாலாஜி முருகதாஸை ஜோடியாக்குவாரு பிக் பாஸுன்னு பார்த்தா, வேல்முருகனை ஜோடியாக்கிட்டாரு. வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேங்கிற பேர்ல எவ்ளோ ஜம்ப் பண்ண முடியுமோ வேல்முருகன் அந்த அளவுக்கு ஜம்ப் பண்ணிட்டாரு.  கடைசியா, சனம் ஷெட்டியை அப்படி புடிச்சு தூக்கினதை எல்லாம் சிலர் பார்த்து டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரி. மோதலில் ஆரம்பித்து காதலில் முடியுமோ.. பிக் பாஸ் தமிழ் 4 போற போக்கை பார்த்தா அப்படித்தான் தெரியுது! முன்னாள் காதலி கிட்டத்தட்ட 22 படங்களில் நடித்தும் ஓ நீங்க படத்துல எல்லாம் நடிச்சு இருக்கீங்களா, ஒரு படத்தோட பெயராச்சும் சொல்லுங்க என கேட்கிற அளவுக்குத் தான் சனம் ஷெட்டி இன்றும் இருக்கிறார்.  ஆனால், அவர் தர்ஷனின் முன்னாள் காதலி என்பது மட்டும் ஊருக்கே தெரிந்த ஒன்று, தர்ஷன் மீது புகார் எல்லாம் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். பாலாஜியுடன் மோதல் இந்த சீசனில் தொடர்ந்து சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் தான் மோதல் வெடித்துக் கொண்டே இருக்கிறது.  10ம் நாள் நிகழ்ச்சியிலும் கிச்சன் ஏரியாவில் பாலாஜி முருகதாஸ், ரியோவின் சிங் தொப்பி, கண்ணாடி எல்லாம் மாட்

வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி! '800' படத்திற்கு எதிர்ப்பு: டுவிட்டரில் டிரெண்டிங்

Image
  இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார்.  இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. அதனால், விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்றே எதிர்பார்த்தார்கள்.  சிலதினங்களுக்கு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்தபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  விஜய் சேதுபதிக்கு சினிமாவில் நல்ல அடையாளம் தந்த இயக்குனர் சீனுராமசாமி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு டுவீட் போட்டார்.  இந்நிலையில் அதிகாரப்பூர்

உங்கள் ஆரோக்கியம் சிறந்ததாக அமைய இந்த 8 வழிகள் போதும் !!

Image
ஒரு மனிதனுகு உடல் ஆரோக்கியமே பெரும் செல்வம். அதை முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றிருக்கிறார்கள். அனுபவ உண்மை அது. எனவேதான் பொருள், பணம், சொத்து சுகத்தை விட, நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருப்பவனே பெரும் செல்வந்தன் என நம்முடைய மூத்த புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.  என்னதான் செவந்தனாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் இல்லாதவன் மன நிம்மதி இழப்பான். இதனால் வாழ்க்கை நரகமாகிவிடும். உணவுக்கு, உடைக்கு, இருப்பிடத்திற்கு கஷ்டபடுகிறவன் கூட, நல்ல மன நிம்மதியுடன் இருப்பான். காரணம் அவன் உடல் உழைப்பு மற்றும் நிம்மதியான தூக்கம், பசிக்கு மட்டும் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களால் தான்.  சரி, அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதோ இந்த 8 வழிகளை மட்டும் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல தேக ஆரோக்கியத்துடன், மன நலத்துடன் இருப்பது நிச்சயம்.  உடல் ஆரோக்கிமாக அமைய 8 வழிகள்  1. போதுமான தண்ணீர் குடிப்பது 2. சத்தான உணவு 3. தினம் ஒரு பழம் 4. உடற்பயிற்சி 5. நல்ல தூக்கம் 6. செல்போன் தவிர்ப்பது 7. உடல் எடை பேணுவது 8. மருத்துவ பரிசோதனை 1. போதுமான தண்ணீர் குடிப்பது ஒரு மனிதனுக்கு உணவில் முதல் தேவை தண்ண

45 கோ டி சம்ப ளம் வாங்கும் தல அஜித் தின் முதல் சம்பளம் எவ்வ ளவு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க !!!

Image
  பல ஆண்டுகளாக தமிழ் திரையு லகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என அன் பாக அழைக்க ப்படும் அஜித் காதாநா யகர்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து நடித்து வருபவர். தற்போது அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தை இளம் இயக்குனராக எச்.வினோ த் இய க்கி வருகிறார். அஜித் பல இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து ள்ளார் என்பதும் புதிய இயக்குனர் களுக்கு வாய்ப்பளித்து அவர் களது வெற்றிக்கு பல முறை காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் (Bollywood) முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் இதற்கு முன்னர் ‘நே ர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கி னார். அதைத் தொட ர்ந்து அஜித் ந டிக்கும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூரே இயக்கி வருகிறார். அஜித் தற்போது தான் நடிக்கும் படங்களுக்கு 40-50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன் திறமையின் உ தவியால் புக ழின் உச்சத்திற்கு சென்றுள்ள அஜித், இந்தத் து றைக்கு முதன் முறையாக  வந்தபோது  வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?  அஜித்தின் முதல் சம்பளம் 2,500