சக்கரை வியாதி சட்டென தீர குறிப்புகள் !
இப்போது நாட்டில் பெரும்பாலனவனை ஆட்டிப் படைப்பது சர்க்கரை நோய் தான். 30 வயதிற்கு பிறகு இந்நோய் இளைஞர்களை கூட ஆட்டி படைக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் தான். பாஸ்புட் கலாச்சாரம் ஆகிவிட்ட இந்த காலத்தில் நோய்களும் விரைவாக நம்மை தாக்கி ஆட்டுவிக்கிறது. குறிப்பாக சர்க்கரை வியாதி . சர்க்கரை வியாதி ஏன் வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன? பரம்பரை மூலம் வரலாம். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி க்கு நோய் இருந்தால் மரபுவழி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. 1 to 5% சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கண்டிப்பாக வரும் என்று சொல்ல முடியாது. சர்க்கரை வியாதி எப்படி வருகிறது? நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்