Posts

Showing posts from September, 2019

சிறுநீரக கற்கள் போக்க சிறந்த இயற்கை மருந்து !

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.  இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது. பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.  தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேள

எந்த வித நோயும் தீர்க்கும் பேரீட்சை !

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!! பார்வை கோளாறு: பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக

மழைக்கால சளி தீர இயற்கை வைத்தியம் !

சளி தொல்லை பிடித்தது. எப்பொழுது தும்மல் வரும்? எப்பொழுது இருமல் வரும்? எப்பொழுது தலைவலிக்கும் என தெரியாது. நேரங்காலம் பார்த்தெல்லாம் இது வருவதில்லை. பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்திருந்தால், தும்மல் மூலம் காற்று வழியாக கிருமிகள் பரவி வந்து உங்களையுந் தொற்றிக்கொள்ளும். பாடாய் போன சளித்தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி? இதோ அதற்கான சரியான வைத்தியம் உள்ளது. இதைப் பின்பற்றினால் குணம் நிச்சயம். என்ன ஏதென்று பார்ப்போமா? இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து குணப்படுத்தலாம். 1. 2 டீஸ்பூன் இஞ்சி சாறு, 2 டீஸ்பூன் தேன் இந்த இரண்டை கலந்து மூன்று வேலை குடித்துப் பாருங்கள். 2, 3 நாட்களுக்கு இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் உங்களை பிடித்த சளி போயே போச்சு. 2. கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் சுக்குத்தூள் கலந்து குடிச்சிப் பாருங்க. சளிக்கு இதமா இருக்கிறதோட, சீக்கிரமாகவே குணமாகிடும். 3. 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் இரண்டையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலே போதும். அப்புறம் கண்டிப்பா சளி உங்களை நெருங்கவே நெருங்காது. 4. வல்லாரை

தைராய்டு பிரச்னை தீர்க்கும் உணவுகள் !

Image
இன்று தைராய்டு சுரப்பி பிரச்னையால் பாதிப்படுபவர்கள் ஏராளம். காரணம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமைதான். அது மட்டுமல்லாமல் நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகள். போதுமான அயோடின் உடலுக்கு கிடைத்தால் பெரும்பாலும் இந்த "தைராய்டு" குறைப்பாட்டை நிவர்த்தி செய்திடலாம். என்னென்ன உணவுகளில் என்னெத்த சத்துக்கள் உள்ளது? எதை சாப்பிட்டால் தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் குணமடைவார்கள் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.  தைராய்டு குறைபாட்டை சரி எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்  1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம் ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. 2) காளான் : செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 3) பூண்டு : செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்று

ரத்த குழாய் அடைப்பு போக்கும் பானகம் !

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச் சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம். தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள். தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார். தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார். மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார். நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார். ஆச்சரியப்பட்ட