Posts

Showing posts from October, 2019

Beat Any Fungal Infections as You Study About Benefits of Tea Tree Oil for Yeast Infection

Image
Yeast infections are these days very common due to changing times. Skincare can sometimes take the back seat and if left untended to a large extent, could lead to penile and vaginal yeast infections. Although penile yeast infections are not that common, they are contracted and can be extremely tedious to deal with. Vaginal yeast infections are more common because women usually have yeast growing or present in their vaginal regions. Although the yeast is supposed to be helpful, it can at times lead to an infection. There are many different ways to treat yeast infection. Thanks to essential oils like Tea Tree Oil for Yeast Infections it is now easier to manage the complications caused by yeast infections. Types Of Yeast Infections There are a few types of yeast infection that can affect us, they are – Diaper Rash – This could affect babies or even women who use menstrual pads, due to the moisture or irritation that is caused by wearing these pads Vaginal yeast infection – At time the nat

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் !

டெங்கு காய்ச்சல் வந்து விட்டாலே, மக்கள் பயம் கொண்டு பீதி அடைகின்றனர். அது குணப்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றுதான். எனவே பீதி அடையாமல்,சரியான மருத்துவம் செய்து கொண்டால், அது வெகு விரைவில் சரியாகி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடலாம்.  நிலவேம்பு கசாயம் மட்டுமே அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வாக கூறப்பட்டுள்ளதால், அதை காய்த்து வடிகட்டி தினமும் பருகி வந்தால் நோய் வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்... டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்க

அரை அடி கூந்தலை ஆறடியாக வளர செய்யும் முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி? - Mudi valar mudhiyaar koondhal thailam

Image
கூந்தல் பராமரிப்பில் நம் தமிழர்கள் அந்த காலத்திலிருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருந்தனர். ஆறடி கூந்தல் என்று சும்மாவா சொன்னார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் நடந்து போனால் அந்த கூந்தல் வீதியை கூட்டி செல்லுமாம். அந்தளவிற்கு நீண்ட கூந்தலினைப் பெற்றிருந்தார்கள். அதை பராமரிப்பு அவ்வளவு சுலமானதாக அவர்களுக்கு இருந்ததிருந்த்து. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ஆறடி கூந்தலை அரை அடி கூந்தலாக மாற்றிக் கொண்டுவிட்டனர். காரணம் பராமரிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை. அல்லது அது பெரிய வேலையாக போய்விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர்.  சரி, கூந்தல் வளர, அடர்த்தியுடன் இருக்க "முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி?" என பார்ப்போம்.  முதியார் கூந்தல் தைலம் செய்வது எப்படி  முதியார் கூந்தலின் வேறு பெயர்கள் அவ்வையார் கூந்தல், குதிரைவாலி, அம்மையார் கூந்தல், மிரியார் கூந்தல் மற்றும்  சரண். முடி தைலம் செய்ய தேவையான மூலிகைகள் முதியார்கூந்தல் 150கிராம் கற்றாழை சோறு 150கிராம் வெந்தயம் 300கிராம் செம்பரத்தை பூ 80 முதியார் கூந்தல் தைலம் செய்முறை முதலில் முதியார்கூந்தலை பொடியாக நறுக்கி சோற்று கத்தாழை சோறுடன் கலந

மலச்சிக்கல், புற்றுநோய் தீர பீர்க்கங்காய்

பீர்க்கங்காயில் இத்தனை நன்மைகளா?  சாதாரண பிர்க்கங்காய் என்று தான் இவ்வளவு நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால் அது தரும் நன்மையோ ஏராளம். மருத்துவ குணங்களோ அதனுள் தாராளம். அடேங்கப்பா.. புற்றுநோய் வராமல் தடுக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தடுக்க கூடியது பீர்க்கங்காய். பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பீர்க்கங்காய், சிறுநீரை பெருக்கும் அற்புத மருந்து. கண் நோய்களை தீர்க்கும். உடல் எடையை குறைக்க கூடியது. அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். தோலை நீக்காமல் சமைக்க வேண்டும். நார்ச்சத்தை உடைய பீர்க்கங்காய் புற்றுநோயை தடுக்கும். நச்சுக்களை வெளியேற்றும்.  பீர்க்கங்காய் தோலை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பை லேசாக வறுக்கவும், பெருங்காயப்பொடி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் தோல், மிளகு பொடி, உப்பு சேர்த்து சட்னிபோல் தயார் செய்து சாப்பிடவும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. பீர்க்கங்காயை பயன்படுத்தி நீர்கடுப்பு, சிறுநீர் தா

நாட்பட்ட நோய்கள் குணமாக இயற்கை மருந்துகள்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! *  வெந்தயம்.    -  250gm *  ஓமம்               -  100gm *  கருஞ்சீரகம்  -  50gm * மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. இருதயம் சீராக       இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது. கண் பார்வை தெள

படர் தாமரை குணமாக பாட்டி வைத்தியம்

Image
கோடைக்காலங்களில் அதிகமாக ஆண்களைத் தாக்கக் கூடிய "தோல்வியாதி" படர்தாமரை. டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.  சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்: சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம். கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அர

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரீச்சை !

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. ச

கீழாநெல்லியின் அதிசய மருத்துவக் குணங்கள்

கீழா நெல்லியின் மருத்துவ குணங்கள் ! நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  மூலிகைகள்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'. இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும். கீழாநெல்லியின் இலைகளில் 'பில்லாந்தின்' என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும்

வறட்டு இருமல் - காரணிகள் - மருத்துவம்

வறட்டு இருமல் என்றால் என்ன ? கபம், சளி போன்ற எதையும் உண்டாக்காத, எரிச்சலூட்டும் ஒரு வகை இருமலே வறட்டு இருமல் எனப்படுகிறது. இது பொதுவாக தொண்டையில் இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் அல்லது கூச்ச உணர்வுடன் தொடர்புடையது. நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை ? வறட்டு இருமலுடன் தொடர்புடைய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு: மூச்சு திணறல். காய்ச்சல் மற்றும் நடுக்கம். தொண்டை வலி. இரவில் வியர்த்தல். எடை இழப்பு. உடற்பயிற்சி செய்வதில் பொறுமை குறைதல் (எளிதில் சோர்வு அடைதல்). சுவாசிக்கும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி. நெஞ்செரிச்சல். விழுங்குவதில் சிரமம். நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன ? வறட்டு இருமல் ஏற்படுவதக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு: வைரஸ் உடல்நலக்குறைவு (சளி, ஃபுளூ [இன்ஃபுளுவென்சா] அல்லது வைரஸ் காய்ச்சலுக்கு பிறகு வரும் இருமல் அல்லது நோய்த்தொற்றுக்கு பிறகு வரும் இருமல் [இதில் வைரஸ் நோயைத் தொடர்ந்து பல வாரங்களுக்கு இருமல் இருக்கும் ]). ஆஸ்துமா. கக்குவான் இருமல். குரல்வளை வீக்கம் (குரல்வளை அழற்சி) அல்லது சில வகையான நுரையீரல் நோய்கள் (திசு இடைநா