Posts

Showing posts from March, 2020

ப்ளட் கொலஸ்ட்ரால் வேகமாக கரைய உதவும் உணவுகள் !

Image
இரத்தில் உள்ள அதிகபடியாக கொழுப்புகளை கரைக்க நம் உண்ணும் உணவுகளே நமக்கு உதவுகின்றன. அப்படிபட்ட உணவுகள் இங்கு பல உண்டு. அவைகள் என்னென்ன? எப்படியெப்படி எடுத்துக்கொண்டால், அது BLOOD CHOLOSTEROL ஐ குறைக்கிறது என்பை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாக ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். தக்காளி உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக் அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது. இஞ்சி மற்றும் பூண்டு இஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும் சாப்பிடலாம். சீரகம் 1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன் மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம். தயிர் தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும

வேர்க்கடலை மற்றும் அதன் பயன்கள் verkadalai payangal HEALTH TIPS

Image
இதைப் படிப்பதற்கு முன்பு சாதாரண வேர்க்கடலைதான என்று பலபேர் நினைத்திருப்பீர்கள். ஆனால் இது பல மடங்கு சத்துமிக்க நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இதில் அடங்கியிருக்கிற சத்துக்கள், மருத்துவ குணங்களை ஆராய்ந்தால் மலைத்துப் போய் நிற்பீர்கள். அந்தளவிற்கு மகத்துவம் வாய்ந்தது. பாதாம் பருப்பை விட பல மடங்கு பயன்கள் மிக்க பொருள் இது.. நிலக்கடலை உணவு மிகவும் சுவையாக இருக்கும் இது ஒரு விஷயம் ஆனால் அதே நேரத்தில் உடல் மிகவும் பயனுள்ளதாக மற்றும் ஒரு நபர் வேர்கடலை பயன்படுத்துகிறது என்றால், அவரது உடலின் பல நோய்கள் முடிவுக்கு. நுரையீரல் நுண்ணுயிர் மூலம் எந்த நோய்கள் அகற்றப்படுகின்றன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மலச்சிக்கல் நோயை நீக்கவும் வயிற்றில் நிறுத்துவதும் உள்ளது வேர்கடலை சாப்பிட அதே மலச்சிக்கல், எனவே வாரம் பிரச்சனை ஒரு நபர், நாள் 1 வாரத்தில் இருந்து வேர்கடலை சாப்பிட வர அந்த நபர் தொடர்புடைய மலச்சிக்கல் பிற பிரச்சினைகள் பிரச்சினை இருந்தால் ஒரு முறை வேர்க்கடலை பயன்படுத்த உறுதி. உடல் சக்தியை அதிகரிக்க பயனளிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்த உடல் வலிமை, மற்றும் பல மக்கள் உங்கள் உடலின் ஆற்றல

இந்த பூ மட்டும் போதும். உங்க சர்க்கரை வியாதி கட்டுக்குள் வந்திடும் !

Image
40 வயதிற்கு மேல் அனைவருக்கும் சர்க்கரை வியாதி என்பது எழுத்தபடாத விதியாகவே இந்திய வாழ் மக்களுக்கு ஆகி விட்டது. 35 வயது முடிந்து விட்டாலே வாழ்க்கையில் அனைத்துமே முடிந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். காரணம், சுற்றுச்சூழல் மற்றும் உணவுமுறைகள், வாழ்வியல் மாற்றங்கள் தான். சர்க்கரை நோய் வருவதோடு மட்டுமல்லாமல், அது சொல்லாமல் கொள்ளாமல் உடலுறுப்புகளை சேதப்படுத்தவும் வழி வகுப்பதால்தான், கை கால் மரத்து போதல், இரத்த ஓட்டும் இல்லாமல், புதிய செல்கள் உருவாகாத நிலைமையில் மூட்டு, கைகால்களை நீக்கும் அளவிற்கு கடுமையானதாக மாறிவிடுகிறது. நவீன மருத்துவத்தில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, புண் ஆன கால், கைகளை வெட்டி எடுப்பது மட்டுமே தீர்வாக காணப்படுகிறது. அப்படி இல்லாமல் இயற்கை உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை மிக எளிதாக கட்டுக்குள் கொண்டு , இயல்பான வாழ்க்கை வாழலாம். அந்த வகையில் பயன்படும் ஒரு இயற்கை உணவு தான். வாழைப்பூ. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத

உடல் சூடு தனிய மோர்/தயிர் எது சிறந்தது?

Image
பொதுவாகவே நம்மில் பலருக்கு வெயில் அதிகமாக இருக்கும் கோடைகாலங்களில் உடல் சூட்டை தணிக்க தயிர் சிறந்ததா அல்லது மோர் சிறந்ததா எனும் குழப்பம் உண்டு அதற்கான சரியான பதிலை மருத்துவர்கள் கூறீயுள்ளனர் அதைப் பற்றி இந்த பதிவில் காண்போம் வெயில் காலத்தில் உடல்சூட்டை தணிக்கவோ, வயிறு தொடர்பான கோளாறுகளுக்கோ அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர்சாதம். அதே நேரத்தில், தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சி தராது. சூட்டைக் கிளப்பிவிடும் என்பது வேறு சிலரின் கருத்து. அதோடு தயிர்சாதம் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது உண்மையே என்று ஆமோதித்துள்ள மருத்துவர்கள் சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர். தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்க

கொரோனாவுக்கு தடுப்பூசி.. முழுவீச்சாக ஈடுபட்டுள்ள தமிழர்!

Image
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸூக்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார். வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஸ்டாலின் ராஜ் கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவருடன் 5-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பைக் என்ற புரோட்டினை குளோன் செய்து வைரஸிற்கான ஆண்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Biological Safety Levels (BSL) 3 (உயிரியல் பாதுகாப்பு நிலைகள் 3) என்ற ஆய்வகங்கள் இங்கு இல்லாதது தடுப்பூசி கண்டறியும் பணிகளில் கால தாமதம் ஏற்படச் செய்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

புட் பாய்ஸனால் அவதிபடுபவர்கள் கவனத்திற்கு!

Image
ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் எவ்வளவு பெரிய புட் பாய்ஸன் ஆக இருதாலும் இது சரிசெய்துவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. ஆகவே புட் பாய்ஸனால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்தது. இது குடிப்பதால் வயிற்றுவலி குணமாவதுடன் வயிற்றுப்போக்குக்கும் நல்ல குணம் கிடைக்கும்.

சளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!

Image
சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை. உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே வைக்கின்றோம். இத்தகைய சளித் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போம். பூண்டு சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும். தேங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெயை மார்பு மீதும், முதுகுபுறமும் தடவினால் சளி, இருமல் குறையும். முள்ளங்கி சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது. ஏல

உலகில் இதுவரைக்கும் வந்த கொடிய வைரஸ் களும், அது காவு கொண்ட உயிர்பலிகளும் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !

தொற்று நோய் என்ற வார்த்தைக்கு அறிவியலாளர்களும் , விஞ்ஞானிகளும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அர்த்தத்தை வழங்கி வருகின்றனர், ஆனால் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால் , ஒரு புவியியல் பிராந்தியத்தில் வழக்கத்தை விட மிக அதிகமான பாதிப்பை உண்டாக்கும் விரைந்து பரவக்கூடிய ஒரு நோய் தொற்று நோய் என்பதாகும்.காலரா , பிளேக் , பெரியம்மை , இன்ப்ளூயன்சா போன்றவை மனித வரலாற்றில் அதிகமான உயிரைக் குடித்த நோய்களாக அறியப்படுகின்றன. இந்த நோயின் தாக்கம் பல நாட்டு எல்லைகளைக் கடந்து ஒரு தொற்று நோயாக பரவி இருந்தன. குறிப்பாக பெரியம்மை, தன்னுடைய வரலாற்றில் 12,000 ஆண்டுகள் அச்சுறுத்தி கிட்டத்தட்ட 300-500 மில்லியன் மக்கள் உயிர் இழந்திருக்கின்றனர்.சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒரு கிருமி எபோலா வைரஸ் . இது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கி உள்ளது. ஒருநாள் இல்லை ஒருநாள் இதுவும் ஒரு தொற்று நோயாக மாறலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. எனவே இந்த பட்டியலில் இந்த கிருமி பற்றிய தகவல் இடம்பெறவில்லை. ​HIV / எயிட்ஸ் (உச்சக்கட்டம் 2005-2012) இறப்பு எண்ணிக்கை - 36 மில்லியன் காரணம் - HIV / எயிட்ஸ் காங்

நீரில் ஊற வைத்த பாதாம் தரும் பயன்கள் !

Image
பாதாம் பயன்கள் ஊற வைத்த பாதாமில் இவ்ளோ இருக்கா அட இவ்வளவு நாளா தெரியாமலே போயிடுச்சே (Badam benefits in tamil)..! ஆமாங்க, பாதாமில் (Badam benefits in tamil) அளவுக்கு அதிகமான சத்துக்கள் இருக்குனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதை ஊற வைத்து சாப்பிட்டால் அதிகமான பலன் இருக்குனு உங்களில் யாருக்காவது தெரியுமா ?. இதை தெரிஞ்சிகிட்டிங்கனா, இவளோ நாளா இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோம்னு வருத்தப்படுவீங்க. அதனாலே இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். காலை எழுந்தவுடன் இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்..! பாதாம் (Badam) பயன்படுத்தும் முறை : தினமும் நைட் நீங்க தூங்க போவதற்கு முன்னாடி 7 பாதாம் (Badam benefits in tamil) எடுத்துக்கோங்க . ஒன்னுமில்லை அதை சாதாரண நாம குடிக்க யூஸ் பண்ற நீரிலே ஊற வைத்துவிட்டு தூங்கிடுங்க. மறுநாள் நாள் காலை எழுந்ததும் ஊறவைத்த 7 பாதாமை (Badam) எடுத்து அதனுடைய தோலை நீக்கி விட்டு தினமும் சாப்பிடுங்க. எதற்காக தெரியுமா நாம் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். நாம் தோலை நீக்காமல் சாப்பிடும் பொழுது ஊறவைத்த பாதமானது (Badam) சற்று செரிமானம் ஆக சிறித

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்.!

Image
கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும். பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ' உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும். தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதய நோய் வராமல் நம்மை காப்பாற்றும். ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்"சி' கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும். சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம் வலுப்பெறும். உப்பு இதயத்

ஆரோக்கியமான நுரையீரல் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.!

புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதனால், நுரையீரலை சுத்தப்படுத்தும் பழங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் உணவுகள் மற்றும் சுவாசத்தை சீராக்கும் உணவுகள் ஆகியவற்றை புகைப்பிடிப்போர் கட்டாயம் உண்ண வேண்டும். மாதுளை: மாதுளைப் பழங்கள் உடற்கூறுக்குறைகளை நீக்கவல்லவை. மேலும் நுரையீரலில் கட்டிகள் தோன்றுவதைத் தடுக்கக் கூடியவை. மூச்சுப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான உணவு இது. இதன் சாறு பல்வேறு உடல் நலம் தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது. வெங்காயம்: வெங்காயம் கொஞ்சம் வாடை உள்ளது தான் மறுப்பதற்கில்லை. ஆனால், இதன் மணம் நுரையீரலை சீராக்குவதில் மிகச்சிறந்த ஒன்று. புகைப்பிடிப்போர் கண்டிப்பாக வெங்காயத்தை உண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிள்: ஆப்பிள்களில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவையனைத்தும் சுவாச நலனில் நல்ல முன்னேற்றத்தைத் தரக்கூடியவை. கேரட்: கேரட்டுகள் சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதில் ஒரு ஆச்சரியமான முறையில் உதவுகின்றன. இவற்ற

ஹேர் டை உடலுக்கு ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ! இது தெரிஞ்சா ஹேர்டை உபயோகிக்கவே மாட்டீங்க !

Image
நமது உடலில் சுரக்கும் 'மெலனின்' என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை 'டிரையோஸின்' என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்தான். சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம். சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது. தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்

இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

Image
1. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. 2. இருதயம், கல்லீரல், சிறுநீரகம்,கண்கள் மற்றும்இரத்த நாளங்களில்உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது. 3. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம்,குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. 4. பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும். 5. நீர்க்கடுப்பு: ஏப்ரல், மே, ஜூன் ஆகிய இரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும். 6. சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்புஉண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர, 5 நாளில் அவை நீங்கும்.. 7. உடம

பூச்சி கடி தொழுநோய் தீர பூவரசன் இலை !

Image
பூவுக்கெல்லாம் அரசன் என்பதால் இது பூவரசு என்று பெயர் பெற்றது. நூற்றாண்டு கடந்து வாழக்கூடிய மரங்களுள் பூவரசு மரமும் ஒன்றாகும். இந்த பூவரசு மரத்தை இன்றும் கிராமங்களில் வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதை நம்மால் காண முடியும். இதன் இலை, பூ, காய், விதை, மரப் பட்டை என அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் உணவில் உப்பின் அளவு குறைக்க வேண்டும். பூவரசு மரப் பட்டையை பொடித்து அத்துடன் சந்தனத்தூள் அல்லது வில்வக் கட்டை தூள் கலந்து முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவடையும். பூவரசங் காயை இடித்து சாறு பிழிந்து அந்த சாறை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையும். பூவரசு மரப் பட்டையுடன், பூவரசன் காய், பூவரசன் பூவை இடித்து பொடியாக்கி காலை மற்றும் மாலை என இரு வேலையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர தோல் நோய்கள் நீங்கும். பூவரசு மரத்தின் வேர் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருந்து 50 மி.லி நீர் எடுத்து அத்துடன் 10 மி.லி விளக்கெண்ணெய் சேர்த்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வர மூல நோய் குணமாகும். சர்க்கரை நோய் இர

உடல் இளைக்க வைக்கும் வாட்டர் தெரபி !

Image
water therapy உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண் ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண் ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப் படுத்துவது தான் வேத னையான வேடிக்கை. செலவே இல்லாத தண்ணீரா? என்று திரு ப்பி கிண்டல் அடிக்கா தீர்கள். சென் னையில் உள்ளவர்கள் பெரும்பா லோர், ஏதோ தனி யாரிடம் வாங்கி சாப் பிடும் “கேன் வாட்டர்’ தான் நல்ல பாது காக்க ப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட் டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போ தும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது. அதென்ன “வாட்டர் தெரபி?.’ நாம் சாப் பிடும், குடிக்கும் எதுவாக இருந்தா லும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச் சாரங்களை வெளியேற்றி, சத்துக் களை, திரவ வடிவில் ஏற்று உட லின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால் சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர் கிறது. தொண்டை வரை காரமாகவோ, இனி ப்பாகவோ இருக்கும் எதுவும் உட

வீட்டிலிருக்கும்போதே தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

Image
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற

15 நிமிட உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் !

Image
அக்காலத்திலேயே பாரதியார் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து தமது பாடலில் குறிப்பிட்டிருப்பார். மாலை முழுவதும் விளையாட்டு என. ஒருவர் எந்த ஒரு நோய் நொடியின்றி, அதிக எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாள் உயிர்வாழ கண்டிப்பாக "உடற்பயிற்சி" தேவை.  நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. தினமும் 15 நிமிட உடற்பயிற்சி செய்வதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம். தினமும் 15 நிமிட உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பது கிடையாது 15 நிமிடம் செய்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொண்டால் மனிதனின் இறப்பு விகிதம் 22 சதவீதம் குறையும். ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் சர்க்கரை நோய் வராது. இவ்வாறு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் உடல் எடை அதிகரிக்காது. எடை சீராக இருக்கும். தினமும் அதிகாலை 15 நிமிடம் நடைபயி

ஆண்மை குறைபாடு நீக்கும் வெண்டைக்காய்

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்…’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல… முழுக்க …முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல…மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு. அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு ம

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் மற்றும் கால அளவுகள்

Image
உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை. எப்போது, எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்? உடற்பயிற்சி இன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள். இத்தகைய நோய்கள் ஒருமுறை தாக்கினால் அதன் பாதிப்பு ஆயுள் வரை கூடவே இருக்கும். எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை என்பவர்கள் பின்னால் தங்கள் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனைகளில் பழியாய் கிடந்து தீர்க்க நேரும். உடல் இயக்கக் குறைவால் வரும் இத்தகைய நோய்கள் தான் மிகவும் அதிக மருத்துவச் செலவு ஏற்படுத்தக்கூடியதும் கூட. உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயி

மழைக்கால நோய்களும், காக்கும் முறைகளும்

மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். மழையில் நனைந்தபடி விளையாட சென்று விடுவார்கள். பின் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார்கள். மழைக்கால நோய்களும், காக்கும் முறைகளும் மழைக்கால நோய்களும், காக்கும் முறைகளும் மழைக்காலம் வந்துவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். மழையில் நனைந்தபடி விளையாட சென்று விடுவார்கள். பின் இருமல், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவார்கள். அவர்களை பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் மழைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சட்டை அணியாமல் இருக்க கூடாது. வயதானவர்கள் குளிர்ந்த நீரில் குளித்து நிமோனியா, காய்ச்சல் போன்ற பல்வேறு இன்னலுக்கு ஆளாகிறார்கள். குளிரினால் ரத்தக்குழாய்கள் சுருங்கி மயக்கம், இதயமாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகவே மழைக்காலத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். நூல் ஆடை அல்லது கம்பளி ஆடைகளை அணிய வேண்டும். குளிரில் செல்வதை தவிர்க்க வேண்டும். மழை வந்தால் கிருமிகளுக்கும் கொண்டாட்டம் தான். தேங்கிய மழைநீரில் கொசுக்கள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செ

குழந்தை விரல் சூப்புவதை நிறுத்த

Image
குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம். குழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள் குழந்தைகள் வாயில் விரல் வைப்பதை தவிர்க்கும் இயற்கை வழிகள் குழந்தைகள் கருவிலிருக்கும் போதிலிருந்தே வாயில் கை வைக்க துவங்கிவிடுகின்றனர் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளனர். அது குழந்தைகளுக்கு வசதியாக இருப்பதாக உணர்கிறார்கள். அது அவர்களை ஓய்வெடுப்பதாக உணர செய்கிறது. குழந்தைகள் ஓய்வெடுக்கும் போதும், பயப்படும் போது, சலிப்பாக அல்லது தூக்கமாக உணரும் போது கையை வாயில் வைப்பதாக சொல்கிறது ஒரு ஆய்வு. ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது சிறந்தது. குழந்தைகள் கையை வாயில் வைப்பது உணர்வுபூர்வமாக நல்லது. அதற்காக அதை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அதை மாற்றுவது மிக கடினம். அதை மாற்றுவதற்கான வழிகளை பார்ப்போம். 1 வேப்பிலையை அரைத்து குழந்தையின் விரலில் தடவி விடவும். அதன் கசப்பு சுவையால் உங்கள் குழந்தைகள் வாயில் விரல் வைக்கமாட்டார்கள். அப்படியே வைத

குழந்தையிடம் எப்படி பேச வேண்டும் தெரியுமா?

Image
பெற்றோரின் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன. உங்கள் இக்கவலையை போக்க குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன, அதிலும் குறிப்பாக வாலிப வயதினரை! கவலை வேண்டாம். உங்கள் இக்கவலையை போக்க சில வழிகள்... குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்காது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடுங்கள். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று வினவி அவர்தம் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் அனைத்து உணவையும் குப்பையில் கொட்டுவதில்லை. ஆகையால் உணவு உண்பது குறித்து உபதேசிக்காமல், சுருக்கமாக எடு

குழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள்

Image
விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு வளர்ச்சி தரும் விளையாட்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனிதர்களின் ஊக்கசக்தியாக இருந்து வருபவை விளையாட்டுகள் தாம். வீரம், உடல்திறன் மற்றும் பண்பு வளர்க்க, மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு உதவுகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விளையாடுகின்றனர். எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும், மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு உடல் வளர்ச்சிக்கும் உள்ளத்து மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. விளையாட்டுகளை நாம் விளையாடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் வைத்துக்கொள்ளலாம். கைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஓட்டம், வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கபடி மற்றும் நீச்சல் என பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் உள்ளது. வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை இன்றும் சிற்றூர்களில் க

தலை அரிப்பை போக்க உதவும் இயற்கை சிகிச்சை

Image
இப்பொழுதெல்லாம் தலைக்கு கண்டதையும் போட்டு தேய்த்துக் குளிக்கிறார்கள். தலை முடியை பராமரிப்பதில் காட்டும் சுணக்கம்தான் அதற்கு காரணம். உடனடியாக தலையில் பொது பொதுவென்று நுரை தள்ளி, நீரில் அழுக்கு அடித்துச் செல்ல வேண்டும். அவ்வளவுதான் இன்றைய அவசர உலகத்தில் அனைவருக்கும் தேவை. அதன் பிறகு தலை மற்றும் தலை முடிக்கு ஏற்படும் பின் விளைவுகள் பற்றி ஏதும் கவலைபடுவதும் இல்லை. சட்டைசெய்வதும் இல்லை. இதனால் மிக இளவயதிலேயே நரைத்த முடி , வெள்ளை தலை, அரிப்பு, பொடுகு, முடி உதர்வு மற்றும் சொட்டை தலை பிரச்னைகளை இளம் சந்த்தியினர் சந்திக்கின்றனர்.  பொதுவாகவே தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர் டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இங்கே நான் சொல்லும் வழிகளை சரியாகப் பின்பற்றினாலே உங்கள் கூந்தல் பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். முதலில், கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும். அதற்கான சிகிச்சை இது... டீயை வடிகட்டி... அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம

இளநரையைத் தடுக்க எளிதான வழிகள் !!

Image
வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்கஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். நரை முடி வருவதை தடுப்பது எப்படி? இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி. ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது. உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது. ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்து