நெஞ்சு சளி நொடியில் நீங்க திப்பிலி வைத்தியம் !
நான்கைந்து நாட்களாக இருமலும் சளியும் வாட்டி வதைக்க ஆங்கில மருத்துவம் நாட மனமின்றி, மூலிகை வைத்தியம் ஏதும் இருக்குமா என அறிய நினைத்தேன். அபயம் வரும்போது ஆபத்பாந்தவராக எனக்குத் தெரிவது உமையாள் பாட்டிதான்! விரைந்தேன் உமையாள் பாட்டியின் குடிலுக்கு. “என்ன பாட்டி… எப்படியிருக்கீங்க?” பாட்டியிடம் நான் நலம் விசாரிப்பதற்குள் ‘கொள்… கொள்’ என்று அவ்வளவு இருமல்கள் இடைமறித்தன என்னை. “என்னப்பா இவ்வளவு நெஞ்சு சளிய வெச்சிக்கிட்டு டாக்டர்கிட்ட போகாம இருக்க? பாட்டி. கேட்டுக்கொண்டே வரவேற்றாள் வாயிலில். “அதான் உங்க கிட்ட வந்திருக்கேனே… ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்க பாட்டி.” இருமிக்கொண்டே கேட்டேன். “அதான் உன்னோட ஃபேவரெட் நாட்டுக்கோழி சூப்பு இருக்கே! பக்குவமா வீட்டுல வைக்க சொல்லி சாப்பிட வேண்டியதுதான…?” “ஐயோ அது தப்பு பாட்டி!” “ஏம்பா சைவம் படம் பாத்துட்டு சைவமா மாறிடலாம்னு முடிவெடுத்திட்டியா…?!” எனது அசைவ உணவு பழக்கத்தை நன்கறிந்திருந்த பாட்டியின் கேள்வியில் எள்ளல் இருந்தது. “சித்திரை திருவிழாவுக்காக ஊருல காப்பு கட்டியிருக்காங்க. திருவிழா முடியற வரைக்கும் அசைவம் சாப்பிடக் கூடாது. இந்த நெஞ்சு சளிக்கு ஒரு