Posts

Showing posts from January, 2017

நெஞ்சு சளி நொடியில் நீங்க திப்பிலி வைத்தியம் !

Image
நான்கைந்து நாட்களாக இருமலும் சளியும் வாட்டி வதைக்க ஆங்கில மருத்துவம் நாட மனமின்றி, மூலிகை வைத்தியம் ஏதும் இருக்குமா என அறிய நினைத்தேன். அபயம் வரும்போது ஆபத்பாந்தவராக எனக்குத் தெரிவது உமையாள் பாட்டிதான்! விரைந்தேன் உமையாள் பாட்டியின் குடிலுக்கு. “என்ன பாட்டி… எப்படியிருக்கீங்க?” பாட்டியிடம் நான் நலம் விசாரிப்பதற்குள் ‘கொள்… கொள்’ என்று அவ்வளவு இருமல்கள் இடைமறித்தன என்னை. “என்னப்பா இவ்வளவு நெஞ்சு சளிய வெச்சிக்கிட்டு டாக்டர்கிட்ட போகாம இருக்க? பாட்டி. கேட்டுக்கொண்டே வரவேற்றாள் வாயிலில். “அதான் உங்க கிட்ட வந்திருக்கேனே… ஏதாவது மருந்திருந்தா சொல்லுங்க பாட்டி.” இருமிக்கொண்டே கேட்டேன். “அதான் உன்னோட ஃபேவரெட் நாட்டுக்கோழி சூப்பு இருக்கே! பக்குவமா வீட்டுல வைக்க சொல்லி சாப்பிட வேண்டியதுதான…?” “ஐயோ அது தப்பு பாட்டி!” “ஏம்பா சைவம் படம் பாத்துட்டு சைவமா மாறிடலாம்னு முடிவெடுத்திட்டியா…?!” எனது அசைவ உணவு பழக்கத்தை நன்கறிந்திருந்த பாட்டியின் கேள்வியில் எள்ளல் இருந்தது. “சித்திரை திருவிழாவுக்காக ஊருல காப்பு கட்டியிருக்காங்க. திருவிழா முடியற வரைக்கும் அசைவம் சாப்பிடக் கூடாது. இந்த நெஞ்சு சளிக்கு ஒரு

சளி நீங்க சரியான வைத்தியம்..!

Image
மிளகை வறுத்து ( மிளகு ) பொடி செய்து பாலில் கலந்து குடிக்க மார்பு சளி சரியாகும். ஆரஞ்சு, லெமன் இரண்டும் சளிக்கு ரொம்ப நல்ல மருந்து. லெமன் ஜூஸ் டெய்லி ரெண்டு தடவை குடிச்சாலே சளி சரியாகிவிடும். பசும்பாலில் மஞ்சள்தூள் , குருமிளகுதூள் உடன் தேன் கலந்து இளம்சூட்டில் குடித்தால் சளி குறைந்து விடும். குறுமிளகு, துவரம்பருப்பு, உப்பு மூன்றையும் வெறும் வானொலியில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து சுடுசாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி நீங்கிவிடும். மார்பு சளி நீங்க வைத்தியம் (வீடியோ) Tags: Nenju Sali Neenga, Marbu salikku vaithiyam, sali kariya, sailkku maruthuvam.

மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் !

Image
மூட்டு முழங்கால் வாதம் என்பது என்னவென்றால், ஹெல்பர், கில்லர் என்ற மருந்தை அனுப்பிவிட்டு, சப்ரசர் என்ற ஒரு மருந்தை நம் உடல் அனுப்பாமல் இறந்தால் இந்த கில்லர் என்ற ஒரு மருந்து நோய்க்கிருமியை அழித்த பிறகு, நமது மூட்டு முழங்கால்களையும் அழிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ரோமேட்டேட் ஆர்த்தரெட்டீ என்ற நோயாகும். எவர் ஒருவர் உடலில் நாம் மேலே கூறிய ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கும் இந்த ஆர்.ஏ என்ற இந்த நோய் வராது. ஒரு வேலை வந்து விட்டால் இந்த ஐந்தையும் சரிசெய்வது மூலமாக நமது உடல் சப்ரஸ்ஸர் என்ற மருந்தை எப்பொழுது அனுப்புகிறதோ அன்று முதல் அவருக்கு அந்த நோய் குணமாகும். எனவே உடலில் நமது ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் நோய்க்கிருமியால் உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதருக்கும் நோய் வராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நோய்க்கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து நமது நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு, நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களும் சரியாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்வது மூலமாக நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் !

Image
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளம் தாய்மார்களின் கவலை எல்லாம் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது. இளம் தாய்மார்களின் கவலை போக்கவே இந்த கட்டுரை. குழந்தைக்கு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்தது முதல் ஒரு வருட காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்து. குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம். ஆனால் பால் சுகதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்று நோய்கள் உண்டாகக்கூடும். நான்காவது மாதம் : குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம். ஐந்தாவது மாதம் : குழந்தை பிறந்து