Posts

Showing posts from November, 2015

மழைக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற பசலை கீரை சூப்

Image
பசலைக்கீரை சூப் (உடல் ஆரோக்கியம்) மழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரையை பொரியல், கடையல் என்று செய்து சுவைத்து போர் அடித்திருந்தால், அதனை மாலை வேளையில் சூப் செய்து குடியுங்கள். பசலை கீரை சூப் தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 டீஸ்பூன் பட்டை - 1 சிறிய துண்டு பிரியாணி இலை - 1 கிராம்பு - 4 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 3 பற்கள் பசலைக்கீரை - 3 கப் (பொடியாக நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மிளகு - தேவையான அளவு சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் - 1/2 கப் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் பசலைக்கீரை சேர்த்து 5-7 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி விட வேண்டும். பிறகு அதில் உள்ள பட்டை, பிரியாணி இலை, கிராம்பு ஆகியவற்றை எடுத்துவிட்டு, மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு நன்கு மெ

வெந்‌நீர் குடிப்பதால் ஏற்படும் ந‌ன்மைக‌ள்

Image
மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வரவேண்டும். வெந்நீர் குடிப்பதன் நன்மைகள் கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் ‌வீ‌க்க‌ம் குறையும். பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வை‌த்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும். தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

டெபிட் கார்ட், கிரய பத்திரம் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி?

Image
டெபிட் கார்ட், கிரய பத்திரம் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், எவ்வளவு செலவாகும் என்பதைப் பார்ப்போம். கிரயப் பத்திரம்: கிரயப் பத்திரம் பெற பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளரை அணுக வேண்டும். காவல்துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தர வேண்டும். ஆவணக் கட்டணம் ரூ.100. இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.20 கட்ட வேண்டும். ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். டெபிட் கார்டு: டெபிட் கார்டு திரும்பப் பெற சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுக வேண்டும். கணக்குத் தொடர்பான விவரங்கள் தர வேண்டும். இதற்குக் கட்டணம் ரூ.100. வங்கியைப் பொறுத்து ஓ

வீட்டு மனை பத்திரம் பதிவு செய்வது எப்படி?

Image
கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை வைத்து விரும்பிய இடத்தில் வீடு, நிலம், காலி மனை போன்ற சொத்தை கிரையமாக வாங்குவோம். அதை நாம் முழுமையாக அனுபவிக்க பதிவு செய்ய வேண்டும். வீடு மற்றும் வீட்டு மனை வாங்கும் போது மூலப்பத்திரத்தை வைத்து கண்டிப்பாக வில்லங்கம் பார்க்க வேண்டும். ஏன் என்றால் வீடு, வீட்டு மனையை வங்கி கடன் அல்லது வேறு ஏதாவதுக்கு அடமானம் வைத்திருக்கலாம். சொத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என பிரித்து சதுர அடிக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரையம் என்றால் சொத்தின் மதிப்பில் இருந்து 8 சதவீதத்திற்கு பத்திரம் வாங்கி அதனை அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தரிடம் கொடுத்து சரியான முகவரியுடன் சர்வே எண், நான்குமால் பட்டா எண், வீட்டு வரி ரசீது, குழாய் வரி, மின் இணைப்பு எண் ஆகியவற்றை எழுதவும். இத்துடன் வீட்டு வரி ரசீது, மூலப்பத்திரம், சர்வே எண், பட்டா எண் ஆகியவற்றின் நகல் மற்றும் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப சேர்க்கை படிவத்தில் எழுதி பத்திரத்துடன் இணைத்து பதிவு செய்ய வேண்டும். வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகிய நகல் ஆகியவற்றை இணைத்து சார் பதிவ

பத்திரம் இருந்தால் போதுமா? பட்டா கண்டிப்பா வேணும்..!

Image
நீங்கள் புதிதாக வீடோ, மனையோ என சொத்து வாங்கி யிருக்கிறீர்களா? அந்தச் சொத்தை பத்திரவுப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த ஆவணத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறீர்களா? பத்திரவுப் பதிவு மட்டும் இருந்தால் போதுமா? அந்தச் சொத்துக்குரிய பட்டா வைத்திருக்கிறீர்களா? பத்திரம் - பட்டா - பதிவு சொத்துகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது. அது சொத்து வாங்குவதன் முதல் படிதான். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும். சரி, சொத்துக்கான பட்டாவை யாரிடம் எங்கே பெறுவது? பட்டா வழங்குவது வருவாய்த் துறைக்குக் கீழ் வருகிறது. எனவே வருவாய்த் துறையில்தான் பட்டாக்களைப் பெற வேண்டும். பட்டா பெறுவதற்கு அந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) மனுக்களை வழங்க வேண்டும். நீங்கள் அளிக்கும் மனுவுடன், ஆவணங்களின் நகலை அளிக்க வேண்டும். மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மனுவின் மீது தனது அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப

இரத்த சோகையின் அறிகுறிகள் | இரத்த சோகை தீர

Image
இரத்த சோகை “டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க” என்று வேண்டுகோள்களும், “டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு. அதனால ஒரு பாட்டில் ரத்தம் ஏத்திக்கிட்டேன். இப்ப நீர் பிரியல ஆனா மூச்சுவாங்குது” என்று சொல்லிக்கொண்டு வருகின்ற நோயாளிகளை நிறைய சந்திக்க முடிகின்றது. இது எதனால்? சோகை என்றால் என்ன? இரத்த சோகை என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறியாததன் விளைவுகள்தான் மேலே சொன்ன உரையாடல்கள்! மருத்துவம் செய்து கொள்வது எவ்வளவு தேவையானதோ அதைப் போலவே அதைப்பற்றி அறிந்துக் கொள்வதும் அவசியமானது. அந்த வகையில் நாம் முக்கிய வரலாற்றுப் பதிவுகள் சிலவற்றைப் பார்ப்போம். இந்திய மருத்துவத் தந்தை சுஸ்ருதா, சோகையினை அது ஒருவகையான பண்டுரோகம் அல்லது மஞ்சள் காமாலை என்கிறார். அது கபம் அல்லது சளியால் உண்டாவது என்றும் கண்களும், தோலும், நகங்களும் வெளிறிக் காணப்படும் என்றும் விவரிக்கின்றார். அது போலவே சரகர் என்ற இந்திய முன்னோடி மருத்துவர், பண்டுரோகம் என்ற இந்த நோய் உணவுப் பழக்கவழக்கத்துடன் தொடர்பு உடையது என்று குறிப்பிடுகின்றார். கி.மு. 280களில் வான்சூகூ என்ற சீன மருத்த

மைக்ரோ வேவ் ஓவன் சமையல் உடலுக்கு நல்லதா?

Image
ஆச்சரியம் தான்பா… ரெண்டே ரெண்டு நிமிஷம்… பொறியலைச் செய்து விட்டேன்… காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆகுது பார்…’ என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா..? மைக்ரோ வேவ் ஓவன் “கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க…’ – இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், “அதெல்லாம் ஒண்ணுமில்லே… மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க… அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க…’ என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா… மேலே படியுங்கள்! மைக்ரோவேவ் ஓவன்களில், மின் – காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பே, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் – எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூ லக்கூறும், நேர் திசை – எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூ லக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன. சுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று ம

நீண்ட நேரம் உட்கார்ந்தால் உயிருக்கு ஆபத்து!

Image
நீண்ட காலம் வாழ ஆசையா… இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள். ஆம். ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினருக்கு ஆயுள் குறைய வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தால் ஆபத்து ஆஸ்டிரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது.

மாரடைப்பை தடுக்கும் நார்சத்து உணவுகள்

Image
அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி  இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடைய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. நார்ச்சத்து,பெரும்பாலும் அதிகமாக பழங்களிலும் காய்கறிகளிலும் மற்றும் முழு தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும், அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். எனினும் பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை நார்ச்சத்தை அதிகம் எடுத்துக்கொள்வதற்கான வழிகள்: உங்களுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்துக்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.அதில் முக்கியமானது காய்கறிகள் அதிகம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது. அது சாண்ட்விச்சோ, பிஸ்ஸாவோ அல்லது பஸ்தாவோ எதுவானாலும் அதில் காய்கறிகளை தாராளமாக சேருங்கள்.உங்களது சாப்பாட்டு தட்டில் பாதியளவு ஸ்டார்ச் எனப்படும் மாவு சத்து அல

இரவு நேரத்தில் அசைவம் சாப்பிடலாமா?

Image
இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவம் இரவில் சாப்பிடலாமா? அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது.மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும் பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப்பழங்கள் சாப்பிடலாம். எனினும் பொதுவாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே சிறந்தது.

விந்தணு குறைபாடு ஏற்படுத்தும் செல்போன்கள்

Image
மனிதர்கள் தங்களின் காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறையும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. விந்தணு குறைபாடு ஆண்களுக்கு காற்சட்டைப் பையில் செல் போன்களை வைப்பதால் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கையிலும், வீரியமான செயற்பாட்டிலும், குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்களை பத்து வெவ்வேறு ஆய்வுகளின்படி ஆராய்ந்து அதன் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல் போன்களில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மாத்யூஸ் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று மற்ற விந்தணு ஆய்வாளர்கள

புற்று நோய்க்கு தக்காளி மருந்து

Image
உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புற்று நோய்க்கு மருந்து சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.  உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள். பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்ற

கொசு தொல்லையா? கொடுத்துள்ளோம் தீர்வு

Image
இ‌ப்போது பல இட‌ங்க‌ளி‌ல் மு‌க்‌கியமான‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் பலரு‌ம் கொசு‌த் தொ‌ல்லைதா‌ன் எ‌ன்று ஒரு சேர கூறுவா‌ர்‌க‌ள். கொசுவை விரட்ட கொசு கடி‌ப்பதை ‌விட, அதனா‌ல் பரவு‌ம் நோ‌ய்க‌ள் எ‌ண்‌ணிலட‌ங்காதவை. த‌ற்போது ‌டெங்கு, சி‌க்க‌ன் கு‌னியாவு‌‌ம், மலே‌ரியாவு‌ம் பர‌வி வருவதா‌ல் கொசு எ‌ன்றாலே பய‌த்தை ஏ‌ற்படு‌த்து‌கிறது. கொசு‌க்களை ஒ‌ழி‌க்க ப‌ல்வேறு முறைக‌ள் இரு‌ந்த போது‌ம் அனை‌த்‌தி‌ற்கு‌ம் ஒரு ‌பி‌ன் ‌விளைவுக‌ள் உ‌ள்ளன. ஆனா‌ல் ‌பி‌‌ன் ‌விளை‌வி‌‌ல்லாத ஒரு முறை ந‌ம்‌மிட‌ம் உ‌ள்ளது. அதாவது, நொ‌ச்‌சி இலைகளை காயவை‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். அதனை ‌சி‌றிதளவு எடு‌த்து நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் இ‌ட்டு அ‌தி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகை ‌வீடு முழுவது‌ம் பரவுமாறு செ‌ய்யு‌ங்க‌ள். இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌வீ‌ட்டி‌ற்கு வரு‌ம் அ‌த்தனை கொசு‌க்களு‌ம் அ‌ழி‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் யாரு‌க்கு‌ம் ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படாது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு

Image
ஜீரணம் கெட்டுப் போனதன் காரணமாக உடலில் உருவாகும் கெட்ட க்ளூகோஸை (சர்க்கரையை) உடலானது உபயோகப்படுத்தாமல் கழிவாகச் சிறுநீர் வழியாக அதிகப்படியாக வெளியேற்றும் செயலைச் சர்க்கரை நோய் என்று கூறி, அந்தக் கழிவுகளைத் திரும்பவும் உடலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் வேலையைச் செய்கின்றன சர்க்கரைக்கான மருந்து மாத்திரைகள். சர்க்கரை நோய் குணமாக உடல் நிராகரிக்கும் கெட்ட சர்க்கரையைத் திரும்பவும் திணிக்கும்போது உடல் அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை கழிவாக உடல் முழுவதும் ஒவ்வொரு அணுவிலும் தேங்கி, பல்வேறு நோய்களாக வெளிப்படுகின்றன. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்கில் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண்டாலும், சொல்ல முடியாத பிரச்சினைகள் தோன்றுகின்றன. உடலில் இருந்து வெளியேற முடியாமல் நாட்பட்டுச் சேரும் இந்தக் கெட்ட குளூகோஸ் கழிவு, உடலில் தங்கி என்னென்ன நோய்களைத் தோற்றுவிக்கிறது தெரியுமா? சிறுநீரகச் செயல் இழப்பு, இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், தலைவலி, தலைபாரம், கண், காது சம்பந்தமான தொந்தரவுகள், இடுப்பு வலி, முதுகு வலி,

ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம்

Image
ஜீரணசக்தியை அதிகபடித்துவதால் இதனை சிறியவர் முதல் பெரியவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பெரிய அளவில் ஆப்பிள்கள் வழங்கப்படும். அது அம்மாவின் குழந்தை பிறப்பதற்கு முன்னர் ஆப்பிள்கள் சாப்பிட்டால் ஒரு குழந்தை குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் என்று கூறப்படுகிறது . ஆப்பிள் - நன்மைகள் 1. வைட்டமின் A இரத்த கொழுப்பை குறைக்கிறது, தோல் தோற்றத்தை அதிகரிக்கிறது எலும்புகள் வலுப்படுத்த. ஆக்சிஜனேற்ற பண்புகள் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நோய்கள் விரட்ட உதவும். அதே நேரத்தில் அது, பாக்டீரியா ஒட்டுண்ணி மற்றும் வைரஸ் தொற்றுகளுடன் போராடும். 2. வைட்டமின் E ஆப்பிளில் வைட்டமின் E தோல் மற்றும் முடியை பராமரிக்க பொறுப்பேற்கிறது. 3.நார்ச்சத்து ஆப்பிள் ஒரு கரையக்கூடிய நல்ல நார்ச்சத்து நிறைந்துள்ளது. 4. கார்போஹைட்ரேட் வைட்டமின் ஏ.சி நிறைந்துள்ளது. 5. பித்தப்பையில் உருவாகும் கற்களை கரைத்து வெளியேற்றும். 6. கெட்ட கொழுப்பை கரைப்பதால் இது இதயத்திற்கு நல்லது. 7. வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும்.  அல்சரை குணப்படுத்தும். 8. கண் புரை நோய் வராமல் தடுக்கும். 9. வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் B9, வைட்ட

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌ | இயற்கை மருத்துவம்

Image
சா‌ய்ங்காலம் ஆனா சுக்கு காபி குடிக்கலாம். சுக்கு காபின்னா சுக்கை பால்ல தட்டிப்போட்டு குடிக்கிறது இல்ல. சுக்கு, மிளகு, கொத்தமல்லி (தனியா), ஏலக்கா‌ய் எல்லாத்தையும் பவுடராக்கி வச்சிக்கிடணும். தண்ணியில தேவையான அளவு பொடியை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். அதோட கருப்பட்டி சேர்த்துக்கோங்க. தூதுவளை, துளசி இலை, ஆடாதொடை இலை, ஓமவல்லி இலை கிடைச்சதுன்னா சேர்த்துக்கோங்க. கூடுதலா வேற சில நோ‌ய்களும் விலகிப்போயிரும் டெங்கு காய்ச்சல் . முக்கியமா... ஜீரணக்கோளாறு, சளித்தொல்லை எல்லாம் வந்தேனா பாருன்னு தலைதெறிக்க ஓடிரும். இந்தமாதிரி சளித்தொல்லை உ‌ள்ள நேரத்துல தலையணைக்கு‌ள்ள நொச்சி இலையை வச்சி தூங்கினா நிம்மதியா தூக்கம் வரும். இது எல்லாமே நான் அனுபவிச்சு பார்த்தது. கைமேல் பலன் கிடைச்சிருக்கு. ம்ஹ¨ம்.. இப்பிடில்லாம் செஞ்சா சரியாயிருமாக்கும்னுநம்பிக்கை இல்லாம பேசுறவங்க நிறையபேர் மத்தியில இதை நான் செஞ்சிட்டு வர்றேனா பார்த்துக்கோங்க. அடுத்ததா மனுஷனை பாடா‌ய்ப்படுத்துறது இடுப்புவலி, கழுத்துவலி, சுளுக்குனு பட்டியல் நீளும். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கைகண்ட மருந்து நிறையவே இருக்கு. சிலநேரம் காரணமே இல்லாம திடீர்னு க

கம்ப்யூட்டர் - கழுத்து வலி - தீர்வுகள்

Image
நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால் தீவிர கழுத்து வலியை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், பதினெண் பருவத்தினரும் அதுபோன்று அதிக நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதால், கழுத்து வலிக்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்தால் கழுத்து வலி வரும் இளம் வயதினருக்கு தலைவலி மற்றும் கழுத்துவலி அதிக அளவில் பரவி வருவதற்கு கணினி முன் அமர்வதே என்பது ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும், அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் ஆயிரத்து 73 உயர் நிலைப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு மணி நேரம் கணினி முன் மாணவர்கள் அமர்ந்துள்ளனர் என்பது குறித்தும், தலைவலி, கழுத்து வலி ஏற்படுவோரின் விகிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 50 விழுக்காட்டினருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியில் சேரும் மாணவர்களில் வாரத்திற்கு 9 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு கணினி முன

எல்லா நோய்களையும் தீர்க்கும் ஈசி யோகா

யோகா எ‌ன்றா‌ல் ஏதோ நம‌க்கெ‌ல்லா‌ம் வராது, அத‌‌ற்கெ‌ல்லா‌ம் நேரம‌் என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் ஒரு செயல் அல்ல நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும். நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம். காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது. வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும். நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது. ரத்த

வாய் துர்நாற்றம் போக்கும் துளசி

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண

கழுத்து வலி நீங்க நாட்டு வைத்தியம் !

மனிதனை பாடாய்ப்படுத்தும் வலிகள் பல. அதிலும் இந்த கழுத்து வலி இருக்கிறதே..! அது வந்து அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும். நான் சொல்லக்கூடிய பெரும்பாலான வைத்தியம் எனக்கு நானே செஞ்சு பார்த்துட்டு அதுக்கு அப்புறமாதான் மத்தவங்களுக்கு சொல்லுவேன். சில நோய்கள்... தெரிஞ்சவங்களுக்கு வந்து செஞ்சு பார்த்துட்டு சொல்லிட்டு இருக்கேன். சமீபத்துல எனக்கு கழுத்து வலி வந்தது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் பின்னோக்கி போவோமா? பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி கழுத்து வலி வந்திச்சி. தெரிஞ்ச டாக்டர்கிட்ட போய் பார்த்தேன். கழுத்து எலும்பு தேஞ்சிருக்கு. சில எக்சசைஸ் பண்ணினா சரியாயிடும்னு சொன்னார். எலும்பு தேயுற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய வேலை பார்க்கல. ஆனா அடுத்து வந்த நாட்கள்ல இதே கழுத்து வலி வந்திச்சி. அதை இப்போ புரிஞ்சிகிட்டேன். தலையணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவங்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வலி இருக்குறதா கேள்விப்பட்டிருக்கேன். ஆகவே கழுத்து வலி வந்தா முதல்ல தலையணை வச்சி தூங்குறத நிறுத்துங்க. சமதளமா தரையில பாய் விரிச்சி தூங்குங்க. அடுத்ததா நொச்சி இலையை நல்லெண்ணையில போட்டு காய்ச்சி அதை தலைக்கு

முதுகு வலி காரணங்கள் மற்றும் தீர்வுகள்

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பிபிஓ, நுகர்வோர் சேவை என பல மணி நேரத்திற்கு ஒரே இடத்தில், இருக்கையில் அமர்ந்தவாறே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. அதனால் முதுகுவலி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால், முதுகு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக தொலைவுக்கு இருசக்கர வாகனத்தில் பயணிப்பது, குறைந்த தொலைவே ஆனாலும் பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும்போது ஷாக்அப்சார்பர் (shock absorber) உடலில் ஏற்படும் பாதிப்பு, ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து எழுத்துப் பணியிலோ அல்லது கணினி முன்போ அமர்ந்து வேலை செய்தல் என முதுகு வலிக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுவோரைப் பற்றிப் பார்ப்போம். எங்கும் கணினி; எதிலும் கணினி என்றாகி விட்ட நிலையில், கணினியில் பணியாற்றுவோர் அது எத்தகையப் பணியாக இருந்தாலும் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையை விட்டு எழுந்து தேநீர் அருந்தச் செல்வது, சிறுநீர் கழிக்கச் செல்வது என எழுந்து செல்ல வேண்டும். தவிர இருக்கையின் உயரம் ஒரே சீராக, உங்களின் உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முதுகு வலி ஏ

நிம்மதியான தூக்கத்திற்கு இப்படி செய்யுங்க !

Image
பலரு‌ம் ‌நி‌ம்ம‌தியான தூ‌‌க்க‌ம் இ‌ன்‌றி அவ‌தி‌ப்படு‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர்களது நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள்தா‌ன் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் உணர வே‌ண்டு‌ம். செம தூக்கம் போட ஆசையா எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அ‌ல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 ம‌ணி‌க்கு‌ள் தொலை‌க்கா‌ட்‌சியை அணை‌த்து ‌வி‌ட்டா‌ல்தா‌ன் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தூ‌க்க‌ம் உ‌ங்களை‌த் தழுவு‌ம். குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது ந‌ல்லது. வெ‌ளி‌ச்சமே இ‌ல்லாம‌ல் இருளாக இரு‌ப்பது‌ம் ச‌ரிய‌ல்‌ல. படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமான, சு‌த்தமான அறையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். தூ‌ங்குவத‌ற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள். படுப்பதற்கு இரண்டரை மணிநேர‌த்‌தி‌ற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு எ‌ளிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி அ‌ல்லது உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

குழந்தைகள் தூ‌க்க‌த்‌தி‌ல் ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்பதை தடுப்பது எப்படி?

பொதுவாக படு‌க்கை‌யி‌ல் ‌சி‌று‌நீ‌ர் க‌ழி‌ப்பது எ‌ன்பது எ‌‌ல்லா‌க் குழ‌ந்தைகளு‌க்குமே இரு‌க்கு‌ம் ஒரு ‌வியா‌திதா‌ன். இ‌தி‌ல் பய‌ப்படவோ, கவலை‌ப்படவோ ஒ‌ன்று‌ம் இ‌ல்லை. ஆனா‌ல், 5 வயதை‌த் தா‌ண்டிய ‌பிறகு‌ம் படு‌க்கை‌யி‌ல் ‌சிறு‌நீ‌ர் க‌‌ழி‌த்தா‌ல் அது மன‌ப் பத‌ற்ற நோ‌யி‌ன் அ‌றிகு‌றியாக இரு‌க்கலா‌ம். இரவு தூ‌ங்க‌ச் செ‌ல்வத‌ற்கு ம‌ன்பு ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்து‌வி‌ட்டு படு‌ப்பது, இர‌வி‌ல் தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்தாம‌ல் இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை செ‌ய்யலா‌ம். மேலு‌ம், அவ‌ர்‌க‌ள் தூ‌ங்‌கிய ‌பிறகு தூ‌க்க‌த்‌தி‌னிடையே 2 முறை அவ‌ர்களை எழு‌ப்‌பி ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்க வை‌ப்பது போ‌ன்ற ப‌யி‌ற்‌சிகளை‌ச் செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் 10 வயது‌க்கு மேலு‌ம் இ‌ந்த ‌பிர‌ச்‌சினை தொட‌ர்‌ந்தா‌ல், குடு‌ம்ப மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை‌யி‌ன் பே‌ரி‌ல், மன நல மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டியது ந‌ல்லது. உடனே இது ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை எ‌ன்று ‌நினையாம‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் மன‌ப்பத‌ற்ற‌த்தை‌க் குறை‌க்க வ‌ழி செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

மது அடிமைகளை மீட்க மாத்திரை

மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது. நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீதம் எடுத்துக்கொண்டால் மது குடிக்கத் தூண்டுகின்ற உணர்வை குறைத்துக்கொள்ளமுடியும். உளநல ஆற்றுப்படுத்தலோடு (counselling) சேர்த்து இந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பின்படி, ஆண் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7.5 யுனிட்டுகளும் (5 % ஆல்கஹால் கொண்ட பியரில் 3 பைண்டுகள்) பெண் ஒருவர் 5 யுனிட்டுகளும் (5 % ஆ

பெண்கள் சிறு நீரை அடக்கி வைக்கலாமா?

பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்) நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வல

உடல் சூட்டை தனிக்க எண்ணெய் குளியல்

Image
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு அருகிவிட்டது. இது சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பழக்கமல்ல; நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்: இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும். ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும். தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும். தலைவலி, பல்வலி நீங்கும். தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும், உடல் பலமாகும், சோம்பல் நீங்கும், நல்ல குரல் வளம் உண்டாகும். சுவையின்மை நீங்கும். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை: நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்ட

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து?

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமப்புறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல்: இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… தேள் கடி மருந்துகள்: எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்

இள நரையை போக்க இயற்கை வழிகள்

இள நரையை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகளை காண்போம். இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக  கருதப்படுகிறது. மேலும் பலரும் இள நரையை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர,  நிரந்தரமாக மறையாது. அதுமட்டுமின்றி, இள நரையை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும்.  எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் இள நரையை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் :  தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும். நெ

வெள்ளை முடியை கருமையாக்கும் சோற்றுக் கற்றாழை

சித்த மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு தனி மரியாதை உண்டு. எளிதாக கிடைக்க கூடிய இந்த சோற்றுக்கற்றாழை பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. இந்த சோற்றுக் கற்றாழை கண் திருஷ்டி உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகளின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படும். மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி ஒட்டாமல் இருப்பதற்க்காகவும் இந்த சோற்றுக்கற்றாழை கட்டி தொங்கவிடப்படும். கற்றாழையின் பிசின் போன்ற சோற்றை தலையில் தேய்த்து  30 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு முதலியவை குணமாகும். சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே கொஞ்சம் வெந்தயத்தை வைத்துவிட்டு மூடி விடவும். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து அதை தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாகும். காய்ந்த கற்றாழையை நெருப்பில் கருக்கி அதை தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வந்தால் விரைவில் புண் குணமடையும். கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து அதை இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை நெருப்பில் வாட்டி உடல் தாங்கும் வெப்பத்தில் அடிப்பட்ட இடத்தில் இதை

கண்கள் பராமரிப்பு இயற்கையான வழிகளில்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க ஆனால் அகத்தின் மட்டுமல்ல முகத்தின் அழகு கூட கண்களில் தெரியும். நம் எண்ணங்களை, சிரிப்பு, துக்கம், அழுகை என நவ ரசங்களையும் பிரதிபலிப்பதில் கண் முக்கிய பங்குவகிக்கிறது. கண் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையான ஒன்று. கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால் நம் உலகமே இருட்டாகிவிடும் போல் இருக்கும். இந்த கண்களை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது நம் நல்வாழ்வுக்கு மிக முக்கியம். இந்த கண்கள் புத்துணர்வோடு இருந்தால் தான் நாமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியும். உங்கள் கண்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள். * கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம். * கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது. * பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். * போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும். * மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்கள

புற்று நோயை குணப்படுத்த தூதுவளை

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது புற்று நோய், ஆஸ்துமா, இரத்த சோகை, தாம்பத்ய குறைபாடு, இருமல் முதலிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். * தூதுவிளங்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு குளிர் மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் குறையும். மேலும் நுரையீரல் வலுவடையும். * தூதுவளைப் பொடியை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். * தூதுவளைப் பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தம் விருத்தி அடையும். * தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தினால் வாயு பிரச்சனை சரியாகும். மூலரோகப் பிணிகள் குறைந்து தாம்பத்ய உறவு மேம்படும். ஆஸ்துமா நோயாளிகள், வெறும் வயிற்றில் காலை வேளையில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கலாம். * தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். * தொண்டைப் புற்று நோய், கருப்பை புற்று நோய், வாய்ப்புற்று

இயற்கை வயாகரா முருங்கை

ஆண்மையை அதிகரித்து விந்து விருத்தி செய்வதில் முருங்கையை விட சிறந்த மருந்து ஏதுமில்லை. முருங்கையை மற்ற மருந்து பொருளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது வயகராவை விட பல மடங்கு பயனளிக்கும். இந்த முருங்கை வயகராவை தான் பழனிசித்தர் அந்த காலத்தில் உண்டு போகர் என்று பெயர் பெற்றாதாக கூறப்படுகிறது. போகம் என்றால் உடலுறவு என்று பொருள் இவர் இந்த முருங்கை வயகராவை உண்டு அதிகமுறை உடலுறவு செய்து நல்ல உடல் கட்டுடன் விளங்கியதால் இவருக்கு போகர் என்று பெயர் வந்தது. போகர் என கூறப்படும் பழனிசித்தர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என பார்ப்போம். முருங்கையின் அனைத்து பகுதிகளையும் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. ஆண்தன்மை அதிகரிக்க: * முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப்பூ இரண்டையும் சம அளவில் சேர்த்துக்கொள்ளவும். * அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை வதக்கி, பொரித்து எடுக்கவும். * வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும். * இதை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் ஆண்தன்மை அதிகரிக்கும். * இந்த முருங்கை வயகரா மூலம் விறைப்பு நீடிக்கும், வே

கரும்புள்ளிகளை அகற்ற வைத்திய குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அந்த முகத்தின் அழகில் கரும் புள்ளிகள் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும் இந்த கரும்புள்ளிகளை பல்வேறு வகைகளில் எப்படி அகற்றலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். * பாதாம் பருப்பு மற்றும் ரோஜ இதழை அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வர கரும்புள்ளிகள் மறையும். * பாலுடன் கோதுமை தவிடை கலந்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் கரும் புள்ளி காணாமல் போய்விடும். * வெள்ளரிச் சாறை முல்தானி மட்டியுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதே போல் செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும். * எலுமிச்சை பழச்சாறு மற்றும் கடலெண்ணெய் சம அளவு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். * முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும். * சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்களை சம அளவு எடுத்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள

மழைக்காலங்களில் என்ன உணவுகளை சாப்பிடலாம்?

மழைக்காலம் வந்துவிட்டால் போதும் சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி, தலைவலி என மழைக்கால நோய்கள் வந்துவிடும். மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். எனவே மழைக்கலத்தில் எந்த மாதிரியான உணவை எப்படி சாப்பிடலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து  சாப்பிடுவது நல்லது, இது சளி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும். மழைக்காலங்களில் எல்லாவிதமான காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால், நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில்  உணவில் சேர்த்துக் கொள்வதை தண்ணீர் சத்து ஒத்துக்காதவர்கள் தவிர்க்க வேண்டும். பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை  ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது. மழைக்காலங்களில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப் போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும் டப்பாவில் சிறிது சர்க்கரை  துகள்களை போட்டு வைக

நெஞ்சு சளி, இருமலுக்கு மருந்து

இயற்கையை மீறி எதுவும் நடக்காது. எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்-இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும். தேவையான பொருட்கள். பால் -1 கப் மிளகு - 10 மஞ

இருமல் நீங்க இயற்கை வைத்தியம்

Image
பேசினால் இருமல் வருகிறது, சிரித்தால் இருமல் வருகிறது, குளிர் அடித்தால் இருமல் வருகிறது. இப்படி சகலத்துக்கும் இருமல் வருகிறது என்று புலம்பும் அளவிற்கு இருமல் பாடாய் படுத்தும். அதற்கான சிறந்த வழிமுறைகள் நம் கைகளிலேயே இருக்கிறது.  சுத்தமான, மஞ்சள் (2 கிராம்) போட்டு காய்ச்சிய பாலை தினமும் 2 வேளை, 15 நாட்கள் குடித்து வரவும். கிருமி நாசினியான மஞ்சள், இருமலை தூண்டும் பாக்டீரியாவை தாக்கும். இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும். பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும்.  இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. நாட்பட்ட இருமலுக்கு பூண்டை (2 பல்) நசுக்கி, ஒரு டம்ளர் பாலிலிட்டு காய்ச்சவும். பாதியாக சுண்டியதும்,

வயிற்று வலிக்கு வீட்டு மருத்துவம்

1.  கசகசாவை தூள்செய்து சர்க்கரை 4 கிராம் பொடி செய்து 3 வேளை சாப்பிட வயிற்று வலி நீங்கும். 2.  சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும். 3.  குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும்.  கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம். 4.  நாயுருவி செடியை பறித்து சுத்தம் செய்து நீர் விடு காய்ச்சி பக்குவம் வந்தவுடன் இறக்கி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு காலை, 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வயிற்று நோய் குண்மாகும். 5.  வேப்பிலையை தண்ணீரில் கொதிக்கவைத்து கஷாயம் செத்து பருகினால் நூல் புழு வறிற்று உபாதை உண்டு பண்ணும் புழுக்கள் மடிந்து  வெளியேறும். 6. குப்பைமேனி, பூண்டு அரைத்து சாறு எடுத்து குழந்தைகளூக்கு கொடுக்க வறிற்று பூச்சிகள் ஒழியும்.

விரைவில் கருத்தரிக்க செவ்வாழை பழம்

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என

பல்லி, எலி, எறும்புகளை விரட்ட | வீட்டுக் குறிப்புகள்

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள் வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை. நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம். காபித்தூள் சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும். நாப்தலின் உருண்டைகள் நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சி