டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பிக்க
வெயில் காலம் முடிந்து, மழை துவங்கும் காலத்தில் வரக்கூடிய நோய்களில், ' டெங்கு ' காய்ச்சலும் ஒன்று! வைரஸ் கிருமிகளால் பரவுவதாக குறிப்பிடப்படும் இந்நோய்க்கு, நவீன மருத்துவத்தில் கூட மருந்து கிடையாது. நிலவேம்பு மற்றும் ஆடாதொடை கஷாயம் இரண்டுமே, டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கக் கூடியது. நிலவேம்பு சூரணம், 5 கிராம், ஆடாதொடை சூரணம், 5 கிராம் எடுத்து, 400 மி.லி., தண்ணீரில் காய்ச்சி, அதை, 100 மி.லி.,யாக வற்ற வைத்து, வடிகட்டி, காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், டெங்கு வராமல் தடுக்கலாம். இக்கஷாயம், கசப்பாக இருக்கும் என்பதால், குடித்து முடித்ததும், சர்க்கரையை எடுத்து வாயில் போடக் கூடாது. அது, மருந்தின் வீரியத்தைக் குறைத்து விடும். அதற்கு பதில், ஒரு மிளகை மென்று, ஒரு தேக்கரண்டி தேனைக் குடித்தால், உடனே, கசப்பு போய்விடும். தவிர, துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், டெங்கு மட்டுமின்றி, இந்த சீசனில் வரக்கூடிய எல்லா ஜுரங்களையும் அது, கட்டுப்படுத்தும். உணவில் சின்ன வெங்காயம், மஞ்சள், ஓமம், சீரகம் இவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், இயற்கையாகவே, நோய் எதிர்ப்பாற்றல்