Posts

Showing posts from August, 2019

கல்லீரல் பாதிப்பு - அறிகுறிகள் - மருத்துவம் !

Image
நமது உடலில் இருக்கும் உறுப்புகளில் சிலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஏன் கல்லீரலுக்கு முக்கியத்தும் கொடுப்பதில்லை. உடல் உள்ளுறுப்புகளில் சிறுநீரகமோ, இதயமோ பாதிக்கப்பட்டால் இன்றைக்கு மாற்று அறுவைசிகிச்சை சாத்தியம். விழித்திரை பாதிப்படைந்தால்கூட மாற்றுவதற்கான மருத்துவத் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் கல்லீரல் பாதிப்படைந்து விட்டால் நம்மால் அவ்வளவு எளிதில் அதனை மாற்றிவிட முடியாது. கல்லீரலானது 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டால் கூட அது சீராகத் தன் பணியைச் செய்து கொண்டே இருக்கும். அதில் இருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துவிட்டால் கூட, சிறிது நாள்களில் தானே வளர்ந்துவிடும். ஆனால், இந்தக் கல்லீரலை நாம் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை. ஆனால் முழு கல்லீரல் பாதிப்படைந்துவிட்டால் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாதாம். கல்லீரலின் வேலை நாம் உண்ணும் உணவு செரிமானமாக்கவும், அதிலிருந்து சக்தியை சேமித்து வைக்கவும், கொழுப்பை உற்பத்தி செய்யவும் உதவும் கல்லீரல், குளுக்கோஸை தேவையான போது வெளியிடவும் செய்கின்றது. அதுமட்டுமின்றி நம் ரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது. இதனை சாதாரண வேலை என்று

தேவையில்லாத கருவை முன்கூட்டி தடுக்க

Image
துணிந்த பின் எண்ணுவதைவிட எண்ணித் துணிவது நல்லது. இப்போதைக்குக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானித்துச் செயல்பட்டால் வேண்டாத கர்ப்பத்தைத் தவிர்க்கலாம். இருபாலருக்கும் கருத்தடை முறைகள் உள்ளன. குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் ஆண்கள் ஆணுறை அணியலாம். குழந்தை வேண்டாம் என நினைத்தால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். பெண்களுக்குப் பல வகையான கருத்தடை முறைகள் உள்ளன. கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், காப்பர்-டி, நிரந்தர அறுவை சிகிச்சை முறை போன்றவை பொதுவாக வழக்கத்தில் உள்ளவை. கருத்தடை மாத்திரை நல்லதா? உறவின் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்னும் திருமணமாகி முதல் குழந்தையைத் திட்டமிடுவதற்கு முன்னும் மாத்திரைகள், ஆணுறை ஆகியவை சிறந்த தீர்வாக இருக்கும். மாதவிடாய்ச் சுழற்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து 21 நாட்கள்வரை இந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். ஒரு நாள் விட்டால் மறுநாள் இரண்டாகச் சேர்த்து சாப்பிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் தவறவிட்டால், இந்த முறையால் நாம் நினைக்கும் பாதுகாப்பு கிடைக்காம

முட்டைக் கரு இப்படி இருந்தால் சாப்பிடாதீங்க !

Image
முட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதில் எந்த நிறமான மஞ்சள் கரு நல்லது என்றால், அது ஆரஞ்சு நிறமுள்ள மஞ்சள் கரு தான். ஆரஞ்சு நிற மஞ்சள் கரு நல்லது ஏன்? முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான கோழியிடமிருந்து வந்திருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரியான கோழிகள் ஆரோக்கியமான புழு புற்களை மேய்ந்து, சூரிய வெளிச்சம் பெற்று இயற்கையான முறையில் அவை வளர்வதால் அவற்றின் முட்டைகள் ஆரோக்கியமாக இருக்கும். எனவே நாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையின் மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது. மேலும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் மஞ்சள் கரு இருந்தாலும், அது நல்லது. ஏனெனில் அது ஆர்கானிக் முட்டை என்று கூறலாம். மஞ்சள் நிறத்தில் உள்ள மஞ்சள் கரு ஆபத்தா? முட்டையின் மஞ்சள் கருமஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நல்லதல்ல. ஏனெனில் அவை முற்றிலும் குறைவான தரம் கொண்டவை. அந்த முட்டை ஹார்மோன் ஊசிகள் மூலம் வளர்க்கப்பட்டதாகும். தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம்? தினமும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 மு