Posts

Showing posts from October, 2018

பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள்

பூச்சிகள் மூலம் கீழ்க்காணும் நோய்கள் மிக எளிதாக மனிதனுக்கு பரவி துன்பத்தை கொடுக்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பது எப்படி? வந்த பிறகு அவற்றை குணப்படுத்துவது எப்படி? போன்ற விபரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். மலேரியா காய்ச்சல் டெங்கு காய்ச்சல் சிக்குன்குன்யா யானைக்கால் நோய் (லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ்) காலா அசார் மலேரியா காய்ச்சல் மலேரியா காய்ச்சல் என்பது நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பாராசைட்ஸ் என்ற ஓரு வகையான ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய். மலேரியா காய்ச்சல் பிளாஸ்மோடியம் விவாக்ஸ்(பி.விவாக்ஸ்), பிளாஸ்மோடியம்பால்ஸிபார்ம் (பி.பால்சிபார்ம்) பிளாஸ்மோடியம் மலேரியா(பி.மலேரியா) மற்றும் பிளாஸ்மோடியம் ஒவேல் (பி.ஒவேல்) எனப்படும் க்பாராசைட்டுகளால் ஏற்படுகிறது. மலேரியா காய்ச்சல், தொற்றும் தன்மை கொண்ட ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட அனோபிலிஸ் எனப்படும் ஒருவகை கொசு கடிப்பதினால் மலேரியா உருவாகிறது. நோயை தொற்றுவிக்கும் இவ்வகை கொசு ஒருவரை கடித்தால் கடித்த 10 முதல் 14 நாட்களில் மலேரியா காய்ச்சல் ஏற்படும். மனிதருக்கு இந்நோயை பரப்பும் இரண்டுவகை பாரசைட்டுகள் உள்ளன. அவை 1. பிளாஸ்மோடியம் விவாக்ஸ், 2. பிளாஸ்மோடியம் பால

சிறுநீரக நோயின் அறிகுறிகள்

எந்த நோயாக இருந்தாலும் அது நம் உடலில் வருவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும். அவை எந்த நோயின் பாதிப்பாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதனால் அந்த நோயின் தீவிரத்தை எளிதில் குறைக்க முடியும். அந்த வகையில் சிறுநீரக நோயின் அறிகுறிகள் எப்படி தோன்றும் என்பதை பார்க்கலாம். சிறுநீரக நோயின் அறிகுறிகள்? சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, எரித்ரோஃபோய்டின் எனும் ஹார்மோன் குறைவாக சுரக்கும். அதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வு நிலை உண்டாகும். சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம். கை அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், அது சிறுநீரக செயலிழப்பிற்கான ஒரு காரணமாக இருக்கலாம். சிறுநீரகத்தில் பிரச்சனை இருந்தால், ரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் சில நாட்கள் தொடர்ந்து உடலில் ஒருவித அரிப்பு உண்டாகலாம்.

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

Image
சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த 'டானிக்'! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள் அறிமுகம் அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைசெடி. நட்டபின் மூன்று (அ) ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும். இந்த வருடங்களில் அதன் வேர்கிழங்குகளும் வேர்களும் பரவலாக, முழுமையாக வளர்ந்திருக்கும். பயன்படும் பாகங்கள் - வேர்த்தண்டு கிழங்கு  மற்றும் வேர்கள். தண்டு கிழங்கு பூமியின் கீழ் 3-4 அடிகளில், பரவலாக கிடைக்கும். அதிமதுரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் எனப்படுகிறது. தென் ஐரோப்பிய பகுதிகள், சிரியா, இராத், துருக்கி, கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தென்னிந்தியாவிலும் பயிரிடப்படுகிறது. பழங்கால கிரேக்கர்களுக்கு அதிமதுரத்தைப் பற்றி தெரிந்திருந்தது. சீன வைத்தியத்தில் உடலை "புதுப்பிக்கும்" மருந

இரத்த அழுத்த த்தை குணமாக்கும் செலரி

​செலரி….. இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது. செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப் போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது. செலரியின் மருத்துவக் குணங்களுக்காக 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, கரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட்(Salad) செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப

வாய் புண் எளிதில் குணப்படுத்த

Image
பலருக்கும் உடல் சூட்டாலும் விட்டமின் சி குறைபாடு இந்த வாய் புண் ஏற்படுகிறது. இதை குணப்படுத்துவதற்கு பல வழிகள் இருந்தாலும் நம் இயற்கை முறையில் எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்று பலரும் அறியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. வாய்ப்புண் குணமாக வாய்ப்புண் நமக்கு ஏற்பட்டால் நம்மால் எந்த ஒரு உணவையும் சிரமம் இல்லாமல் உண்ணுவதற்கு ரொம்ப கடினமாக இருக்கும். அதுமட்டுமல்லாது வாயில் எரிச்சல் ஏற்படும் போன்றவற்றை நம்மால் உணர்ந்து உண்ண இயலாது. தோராயமாக ஒரு வாரத்திற்கு இது போன்ற பிரச்சினைகளை நாம் கட்டாயம் உணர கூடிய ஒரு விஷயமாகவே இருக்கும். இந்த பதிவின் வழியாக நாம் எளிய முறையில் எவ்வாறு வாய்ப்புண்ணை குணப்படுத்துவது. அதுமட்டுமல்லாது வீட்டில் உள்ள பொருட்களான இயற்கையான வழிகளில் இதை குணப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவின் வழியாக நாம் காணலாம். இயற்கை முறை : 1. ஆரஞ்சு பழம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதனால் கூட வாய் புண் எளிதில் குணமாகும். இதில் விட்டமின் சி நிறைந்து இருப்பதால் நம் வாய்ப்புண்ணை குணப்படுத்தக்கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. 2. வாய்ப் புண் ஏற்பட்ட பின் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு போட்டு வாயை