Posts

Showing posts from March, 2016

தக்காளி சாதம் செய்வது எப்படி?

Image
தேவையான பொருட்கள் :  அரிசி - 2 கப் தக்காளி - 5 வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 ஏலக்காய் - 2 கிராம்பு - 3 புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு தண்ணீர் - 5 கப் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : முதலில் அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

Image
குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா? ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அப்பகுதியில் உள்ள தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும். தேன் கலோரி ஆற்றல் மிகுந்த ஒரு உணவாகும். மருத்துவ குணமுடையது. நீர்ம நிலையில் உள்ள தேன் கெட்டுப்போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச்சத்து நுண்ணுயிர்களை வளர விடுவது இல்லை. பதப்படுத்தாத தேனில் 14 முதல் 18 சதவீதம் வரை ஈரத்தன்மை இருக்கும். காயங்களில் தேனை தடவுவதால் அவை விரைவில் குணமடையும். தேனின் தனிப்பட்ட குணங்கள், ரசாயன பண்புகள் அவற்றை நீண்டகாலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்போது அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்து போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொ

பெண்கள் உடலியல் குறிப்புகள் !

Image
14 வயதை தாண்டும்போது இரண்டாவது பாலின அடையாளங்களாகிய உடலில் முடி வளர்வது என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கை. ஆனால் பருவ வயதைதாண்டிய பிறகு பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் வளரக்கூடிய முடி வளரும் தொல்லை இப்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. பெண்கள் மருத்துவம் பெண்களுக்கு மாதவிலக்கு நிரந்தரமாக நிற்கும் மெனோபாஸ் தருவாயில் (கிட்டத்தட்ட 45 வயதில்) தலைமுடி அதிமாக கொட்டுகிறது. தலையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி இல்லாமல் போகும் நிலை உருவாகிறது. இந்த பருவத்தில் பெண்களின் உடலிலுள்ள ஹார்மோன்களின் சீரற்றநிலையால் உடலில் தேவையற்ற இடங்களில் முடி நிறைய வளர்வதும் உண்டு. ஈஸ்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் பெண்களின் பாலின ஹார்மோன்கள். இந்த இரண்டு ஹார்மோன்களும் தான் பெண் பருவமடையும் காலத்தில் இரண்டாவது பாலின அடையாளங்கள் பெண்களின் உடலில் உருவாகுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விட்டால் அவர்களுக்கு பெண்களுக்குண்டான அங்க அமைப்புகள் அடையாளங்கள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக தோன்ற ஆரம்பிக்கும். பெண்களுக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சிறுநீரக மேற்பட்டை சுரப்பியிலும்

இயற்கை முறையில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி?

Image
நுரையீரல் ஆரோக்கியம் மனிதருக்கு மிக மிக முக்கியம். சுவாசம் சரிவர நடந்தால்தான் மற்ற உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். நுரையீரல் தொற்றால் இன்று அவதிபடுவோர் ஏராளம். சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பிரச்னை வராமல் இருப்பதும், அருகே இருப்பவருக்கு பிரச்னைகள் வருவதும் நுரையீரல் மற்றும் உடல் தொடர்பான குறைபாடுகள்தான். சரி.. இயற்கை முறையில் நுரையீரல் சுத்தம் செய்வது எப்படி என பார்ப்போம். இரண்டு நாட்களுக்கு முன்பு எந்த விதமான பால் பொருட்களையும் சாப்பிடாமல் அறவே ஒதுக்க வேண்டும்.  ஏனென்றால் பாலினால் உண்டாகும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.  இதற்கு முதல்நாள் சுக்குமல்லி தேநீர் போன்ற எதாவது மூலிகை டீயைக் குடிக்கலாம். இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நுரையீரலுக்கு உடலில் உள்ள மற்ற உறுப்புகள் கூடுதல் வேலை தராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்  இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து காலை உணவுக்கு முன் குடிக்கவும். பின்பு சில மணி நேரங்களுக்கு பிறகு 300 மில்லி கிரேப்பூரூட் பழத்தின் சாறு குடிக்கவும். கிரேப்பூரூட் கிடைக்காவிட்டாலோ அல்லது சுவை பிட

வெண் புள்ளி மறைய இயற்கை மருத்துவம்

Image
வெண்புள்ளி விரைவில் மறைய வேண்டுமா? கண்டிப்பா இதை செய்து பாருங்க.. நீங்க எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே குணமாகிடும். தேவையான மூலிகைகள் 1. வேப்பம் கொழுந்து 2. மோர் (வீட்டில் தயாரித்தது) 3. கஸ்துரி மஞ்சள் வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும். உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம். தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட

டான்சில் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

Image
டான்சில் என்பது தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி. தொண்டையில் சதை வீங்குவதை டான்சில் என்று மக்கள் பொதுவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் டான்சில் தொல்லை தரும் என்று தெரிந்துவைத்திருக்கிறார்கள். இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். டான்சில் பிரச்னை நீங்க டான்சில் என்பது ஒரு நிணநீர்ச் சுரப்பி . இது இயற்கையாகவே நம் வாய்க்குள் மூன்று இடங்களில் உள்ளது. தொண்டையில் உள்நாக்குக்கு இரண்டு புறமும் உள்ள டான்சில், நாக்குக்கு அடியில் உள்ள டான்சில், மூக்குக்குப் பின்னால் உள்ள டான்சில் என மூன்று வகைப்படும். இவை நம் சுவாசப் பாதைக்கும் உணவுப் பாதைக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகின்றன. தொண்டை டான்சில் நாம் உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் கிருமியோ, வேண்டாத உணவோ அல்லது புதிதாக ஒரு பொருளோ உடலின் உள்ளே போகும்போது, அவற்றிலிருந்து துளியளவு ‘சாம்பிள்’எடுத்து ஆராய்ந்து, அது பற்றிய தகவல்களை உடனே மூளைக்குத் தெரிவிக்கிற வேலையைத் தொண்டையில் உள்ள டான்சில்கள் செய்கின்றன. அதாவது, ஒரு வாயிற்காவலர் அலுவலகத்துக்கு வரும் நபரைத் தீர விசாரித்து, அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம்

வெட்டுக்காயம் - முதலுதவி குறிப்புகள்

Image
ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டு, அதகளவு இரத்தம் வெளியேறினால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி இது. முதலில் நல்ல தூய்மையான துணியை வைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். அந்த துணியை மீறி இரத்தம் வெளிப்பட்டதால் அதன் மீது மற்றொரு துணியை வைத்து நன்றாக அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். வெட்டு காயம் முதலுதவி இரத்தம் நிற்கும்வரை பிடித்திருந்துவிட்டு, நின்றவுடன் அதன் மீது Band aid போட்டு ஒட்டிவிட வேண்டும். இதெல்லாம் ஒரு சில நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வெட்டுப் பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிய சிறிய சிராய்ப்பு போன்ற காயங்கள் என்றால், இரத்தம் தானாகவே கசிவது நின்றுவிடும். அந்த காயத்தின் மீது antibiotic மருந்தில் பஞ்சை நனைத்து சுத்தம் செய்து காயத்திற்கு மருந்தி தடவி கட்டுப் போடலாம். ஆழமான வெட்டு காயம் என்றால் கட்டாயம் மேற் கூறிய முதலுதவியை செய்துவிட்டு, சரியான சிகிச்சை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.