Posts

Showing posts from February, 2019

சிறுநீரகம், கல்லீரல் அழுக்குகளை நீக்கும் பானம்

நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் (toxins) தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். நம் உடலினுள் டாக்ஸின்களானது கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றில் தான் அதிகம் சேரும். ஏனெனில் இவைகள் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முக்கிய பணிகளைச் செய்கின்றன. இதை சுத்தம் செய்ய ஒரு சில பானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பானங்களைத் தயாரிக்கலாம். மல்லி பானம் தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் மல்லி விதைகளைப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது ப்ரௌன் நிறத்தில் மாறியதும், அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி குளிர வைத்தால், பானம் தயார். குடிக்கும் முறை: மல்லி நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்போ குடிக்க வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் மட்டும் தான் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு சருமம் என்றால் மல்லி நீரை தினமும் குடியுங்கள

குழந்தைகளை சாப்பிட வைக்க சூப்பர் டிப்ஸ் !

உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம். உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டு என்பது ஒரு கற்றல் போல தான். எனவே குழந்தைகள் தானாக சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில் அவர்கள் அதையும் ஒரு விளையாட்டை போல கையாளுவார்கள். இதன் மூலம் உணவுப் பொருளின் அளவு, வண்ணம், வடிவம், எடை போன்ற விஷயங்களை அவர்கள்  கற்றுக் கொள்வார்கள். குழந்தையை தானாக சாப்பிட வைப்பது என்றால் என்ன? பொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும்.  திட உணவை கொடுத்தல் -(BLW-Baby Led Weanin

குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு முறை

 குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஆரோக்கியமான விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியது  அவசியம். குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும். அதேபோல், பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது கிடையாது. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான  வ

குழந்தைகளின் நெஞ்சு சளி போக்க வீட்டு வைத்தியம் !

நெஞ்சு சளி பிடித்துக் கொண்டால் இருமி , இருமி நெஞ்சே எரிச்சல் அடைய ஆரம்பித்துவிடும். அதுவும் குழந்தைகளுக்கென்றால் சளி கரையாமல் மூச்சு விட சிரமபடுவர். நெஞ்சில் சளி கோர்த்துக்கொண்டு "கர்கர்" என ஒரு வித சப்தம் வரும். என்னதான் மருத்துவரிடம் சென்றாலும், உடனடியாக அதற்கு தீர்வு கிடைக்காது. குழந்தைகளுக்கு தூங்க வைப்பதற்கான மருந்துகள் கொடுப்பார்கள். சளியால் பிள்ளைகள் தூங்கும்போது மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரம்பட்டு வாயில் மூச்சு விடுவர். இதற்கெல்லாம் இயற்கையில் அருமையான "வீட்டு வைத்தியம்" உள்ளது. சளி மற்றும் இருமலை போக்க நிறைய வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கு ஏற்றது என்ன என்பதை சோதனை செய்து இங்கு தந்துள்ளேன்… கவனிக்க : ஒரே நேரத்தில் எல்லா மருந்துகளையும் பின்பற்ற வேண்டாம். இதில் குறிப்பிட்டுள்ள எல்லாம் உங்கள் தகவலுக்கு தான். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்கும் என்பதால் அவர்களின் உடலுக்கு ஏற்றது எது? அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது எது என்பதை தெரிந்து கொண்டு எச்சரிக்கையோடு பயன்படுத்துங்கள். பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ

குழந்தைகளுக்கான உணவு பட்டியல் !

சாப்பிட மறுத்து ஓடும் குழந்தைகள் பின்னாடி ஓடுபவரா நீங்கள்… சாப்பாட்டை ஊட்டவே பெரிய போராட்டமாக இருக்கிறதா… போதிய ஊட்டச்சத்துகள் இல்லாமல் குழந்தை வளர்கின்றதா… சரியாகச் சாப்பிடாத பிள்ளைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா… இதோ உங்களுக்கான பதிவு இது. சின்னச் சிறிய குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது… எந்த மாதிரி உணவைத் தரலாம் போன்ற பயனுள்ள செய்தியைச் சொல்ல இருக்கிறோம். எவ்வளவு கலோரிகள்? சிறு குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1000-1400 கலோரிகள் வரை தேவைப்படும். இதுவே உங்கள் குழந்தை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தால் கலோரிகளின் தேவையும் அதிகரிக்கக்கூடும். இதனால், கலோரிகளை மனதில் போட்டுக்கொண்டு குழப்பிக்க வேண்டாம். பொதுவாக, குழந்தைகளின் உணவுப் பழக்கம் ஒரே மாதிரி இருக்காது. ஒரு நாள் நல்ல பசியுடன் நன்றாகச் சாப்பிடுவார்கள். மறுநாள் சாப்பாடு வேண்டாம் என அழுகவும் செய்வார்கள். ஆதலால், உணவைக் கொடுக்கும்போது கலோரிகளைக் கணக்கிட அவசியமில்லை. அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுக் கொடுக்கிறீர்களா என்பதே முக்கியம். குழந்தையின் வயதுக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை ஏதாவது ஒரு வகையில் கொட

வியாதிகள் குறித்து தெரிந்துகொள்ள வெப்சைட் !

சில நோய்களின் அறிகுறிகள் சாதாரணமாக இருக்கும். அதைப் பற்றிய எச்சரிக்கை யாருக்கும் இருக்காது. பரபரப்பான உலகில் இயங்கி கொண்டிருக்கும் நமது உடலை பற்றிய அக்கறை அதிகம் இருப்பதில்லை. சாதாரண தலைவலி என்றால் கூட மருந்தகத்தில் அதற்கென உள்ள மாத்திரையை வாங்கி போட்டுக் கொண்டு சர்வ சாதாரணமாக அந்த நாளை கடத்தி விடுகிறோம். உண்மையில் அதுபோன்று செய்வது அபத்தமானது, நமது உடலுக்கு சில பக்க விளைவுகளை  ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட நேரமின்மை காரணமாக அவ்வாறு செய்து விடுகிறோம். இதனால் என்ன பெரிதாக ஆகிவிடும் என்ற அசட்டைதான் அதற்கு முக்கிய காரணம். உடலில் சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு வரப்போகிற நோய் பற்றி முன்னறிவிப்பு செய்ய உடல் எப்பொழுதும் மறந்த்தில்லை. ஆனால் நாம்தான் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அப்படி தென்படுகிற அறிகுறிகளை வைத்து உங்களுக்கு எந்த நோய் வரலாம், எதற்கான அறிகுறிகள் என்பதை ஒரு இணையதளம் வழங்குகிறது. அந்த இணையத்தளத்தின் மூலம் உங்கள் உடல் உபாதைகளை குறிப்பிட்டு தேடினால், எந்த நோய்க்கான அறிகுறிகள் அவைகள் என தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நோய்கள் பற்றிய தேவையில்லாத பயத்தை போக்கலாம். ! மேலும்