சிறுநீரகம், கல்லீரல் அழுக்குகளை நீக்கும் பானம்
நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் (toxins) தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும். நம் உடலினுள் டாக்ஸின்களானது கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றில் தான் அதிகம் சேரும். ஏனெனில் இவைகள் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முக்கிய பணிகளைச் செய்கின்றன. இதை சுத்தம் செய்ய ஒரு சில பானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பானங்களைத் தயாரிக்கலாம். மல்லி பானம் தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் மல்லி விதைகளைப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது ப்ரௌன் நிறத்தில் மாறியதும், அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி குளிர வைத்தால், பானம் தயார். குடிக்கும் முறை: மல்லி நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்போ குடிக்க வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் மட்டும் தான் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு சருமம் என்றால் மல்லி நீரை தினமும் குடியுங்கள