Posts

Showing posts from February, 2020

தேமல் மறைய நாட்டு வைத்தியம்

Image
தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்... ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை.. உங்களது வ

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?

Image
 வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம் இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன. முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய். முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது. இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது. `உலகில் சர்க்கரை கலந்த மென்பானம் அதிகம் குடிக்கும் மெக்ஸிக்கர்கள்' நீரிழிவு நோயை ஸ்மார்ட்ஃபோன் மூலம் கட்டுப்படுத்த முயலும் விஞ்ஞானிகள் பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது. உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம். இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும். நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது? பிரதானம் உணவு பழக்கம்தான். ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எ

மயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அடிக்கடி மயக்கம் வருது இதற்கு காரணம் என்ன என்று கேட்டால், சிலர் உடம்பில் தேவையான சத்து இல்லை என்று சொல்வார்கள். உண்மையான காரணம் அது கிடையாது. உடம்பில் அதிகப்படியான பித்தம் இருந்தால் இந்த மயக்கம் ஏற்படும். ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு பலகாரணங்கள் இருக்கும். மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு இரண்டுமே மூளையுடன் தொடர்புடையது. கிறுகிறுப்பு மற்றும் மயக்கம் இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறலாம். வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்புகளை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்துகிறது. தீவிரமான கிறுகிறுப்பையே மயக்கம் என்று சொல்லலாம். சரி இந்த தலை சுற்றல் சரியாக மற்றும் மயக்கம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது படித்தறிவோம் வாங்க… பித்த தலை சுற்றல் குணமாக (Vertigo home remedies): சிலருக்கு உடலில் அதிகளவு பித்தம் இருந்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த பித்தத்தை குறைக்க சிலவகை உணவு பழக்கங்களை தவிர்த்து கொள்வதினாலும், சிலவகை உணவுகளை பின்பற்றுவதினாலும் பித்தத்தினால் ஏற்படும் மயக

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம் !

என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம். இன்று பாட்டி வைத்தியத்தில், உடலின் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம். 1. தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் : கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும். வெற்றிலையை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறில் கிராம்பை நன்றாக அரைத்து கொண்டு, நெற்றியின் இரண்டு பொட்டு பகுதியில் நன்றாக தேய்த்து வந்தால் தலை வலி குணமாகும். 2. வாய் புண் குணமாக (Paati vaithiyam tamil): மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும். நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். 3. பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் : பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் க

பற்கள் மஞ்சள் கறையை போக்கிட TIPS

Image
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் (Teeth Problems Solutions In Tamil). ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். இதையும் படியுங்கள்–>சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள். சரி வாங்க பற்களில் ஏற்படும் மஞ்சள் கறை நீக்குவதற்கு என்னென்ன வழிகள் (teeth problems solutions in tamil) இருக்கின்றன என்று இவற்றில் பார்ப்போம். பற்கள் மஞ்சள் கறை படிவதற்கான காரணங்கள்: பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே. பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளைய

இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் !

Image
30 Best Anti-Aging Foods for Women  தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் ‘செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து. உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ‘ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள். தினசரி ஒரு கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும்.

முகம் பொலிவு பெற தவிர்க்க வேண்டிய உணவுகள் !

 உடலுக்குள் நடக்கும் சில மாற்றங்களும் கூட நம்முடைய அழகைத் தீர்மானிக்கும். மாசு, மரு ஏதுமில்லாமல் சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமென்றால், நாம் உண்ணுகிற சில உணவுகளை ஓரங்கட்டியே ஆக வேண்டும். அப்படி ஓரங்கட்ட வேண்டியவைகள் என்னென்ன? இதோ…. வறுத்த உணவுகள் சிப்ஸ், வறுத்த மீன், சிக்கன், முந்திரி போன்ற அத்தனைக்கும் கொஞ்சம்கூட இடம் தரக்கூடாது. அவற்றை அனுமதித்தால், உங்கள் சரும அழகுக்கு நோ சொல்ல வேண்டியிருக்கும் சோடா சோடா கலந்த பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள் வறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, தோலுரிக்கப்படாத கோழி ஆகியவற்றுக்குப் பெரிய முழுக்கு போடுங்கள் வெஜிடபிள் ஆயில் வெஜிடபிள் ஆயில் ஆக்சிடைஷ் செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் ஆயில் இதயத்துக்கும் நல்லது. உங்கள் சருமத்தையும் பொலிவாக்கும். சுத்திகரிக்கப்படாத தண்ணீர் நம்முடைய எல்லா உணவுகளையும் விட சுத்தமான தண்ணீர் மிக அவசியம். பெரும்பாலான நோய்கள் சுத்தமில்லாத தண்ணீரால் தான் உண்டாகின்றன. நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. உப்பு கடலில் இ

பரு மற்றும் தழும்புகள் நீக்க அழகு குறிப்புகள் !

டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சந்தன ஃபேஸ் பேக் : சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும். வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் : சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள். வெந்தய ஃபேஸ் பேக் : சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத&##3021;தில்

நீண்ட கூந்தல் பெற இப்படி செய்யுங்கள் !

அழகான நீண்ட கருமையான கூந்தல் பெறுவது என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கும். எவ்வளவு அழகாக இருப்பினும் கூந்தல்/தலைமுடி மட்டும் சிக்கலாக, ஜீவன் இழந்து காணப்பட்டால் தோற்றத்தில் ஒரு வித மாற்றம் தென்பட்டு, காண்போரை முகம் சுளிக்க வைத்துவிடும். பெண்களுக்கு கண்கள் மட்டுமல்ல தலை மயிரும் முக்கியம். முக அழகை பராமரிப்பு செய்வதில் காட்டும் ஆர்வம் கூந்தல் பராமரிப்பில் காட்டுவதில்லை. இதனாலேயே நீண்ட கூந்தல் ஆசையெல்லாம் மலையேறிவிட்டது. இப்போதுள்ள பெண்கள் மிக குறைந்த குட்டையான கூந்தல் பெறுவதையே விரும்புகின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் கூந்தலை பராமரிக்க நேரமின்றி, பியூட்டில் பார்லர் சென்று SHORT HAIR STYLE செய்து வந்துவிடுகின்றனர். ஆனால் தமிழ் பெண்கள் பொறுத்தவரை நீண்ட, அழகான, கருமையான கூந்தல் அழகு தான் தனித்துவம் வாய்ந்த அழகாகும். சரி, அப்படிப்பட்ட அழகான கூந்தல் பெற என்ன செய்யலாம்? என்ன செய்தால் தலை முடி கருமையாக, செழுமையாக வளரும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. * தேங்காய் எண்ணெய்யை  வெதுவெதுப்பாக சூடேற்றி,  தலைக்கு தடவி  20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர

முடி அடர்த்தியாக வளர பராமரிப்பு குறிப்புகள் !

 முடி இயற்கையாக அடர்த்தியுடன் விரைவாக வளர இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். இங்கு கொடுக்கப்படும் "முடி பராமரிப்பு" குறிப்புகளை பின்பற்றி நீங்களும் அருமையான வளமான கூந்தலைப் பெறுங்கள். இயற்கை வழி பராமரிப்பு ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர். மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்று உணர்ந்து, தற்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமென்று இணையதளத்தில் தேடி அலைகின்றனர். குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளானது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இதனை சரியாக பின்பற்றி வந்தால், தலை வழுக்கையாவதைத் தடுக்க

வழுக்கை தலை சரியாக சித்த மருத்துவ குறிப்புகள் !

வழுக்கைத் தலை பிரச்சனையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர். உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்துவிடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர். ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறை கொண்டு, சில எளிமையான முடி பராமரிப்புக்களை மேற்கொள்ளுங்கள். அதற்காகவே உங்களுக்காக இந்த இணையதளம், முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழிகளை பட்டியலிட்டுள்ள்து. இத்தகைய வழிக

தொப்பையை குறைக்க இதுதான் வழி !

  ப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய உணவுகள் என்னவென்று ஒரு 20 உணவு வகைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன. ஓட்ஸ் ஓட்ஸ் சுவையானது மட்டுமல்லாமல், வயிற்றை நிரப்பக்கூடியதும் ஆகும். குறிப்பாக இதனை குறைவாக சாப்பிட்டாலே, வயிறு நிறைந்துவிடும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, சீராக வைக்கும். முட்டை முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களுடன், குறைவான கலோரியும் உள்ளது. எனவே உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், முட்டையை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் அதகரித்து, கெட்ட கொலட்ஸ்ட்ராலை குறைக்கும். ஆப்பிள் ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தேவையான கனிமச்சத்துக்களுடன், பெக்டின் என்னும் பொருளும் உள்ளதால், இவை கொழுப்பு செல்களை உறிஞ்சி, உடலில் இருந்

கால், முட்டி, முதுகு வலியை குணமாகும் ஹீல் பயிற்சி !

Image
கால் வலி, முட்டி வலி, முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கால், முட்டி, முதுகு வலியை குணமாகும் ஹீல் பயிற்சி ஹீல் பயிற்சி தினமும் நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கூட கால்களை வலுவுடன் வைத்திருக்க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொடங்கினால் நல்லது. கால்களை வலுவாக்கும் எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது மற்றும் விரைவில் பலன் தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். முன் கால் விரல்களை தரையில் பதித்தபடி நின்று கொண்டு பின்னங்கால் பாதத்தை முடிந்தவரை உயர்த்தி பின் கீழ் இறக்கி தரையை தொடாமல் மீண்டும் உயர்த்தவும். இதுபோல் 20 எண்ணிக்கையில் இரண்டு செட்கள் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 3 வேளைகள் என தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்வதால் தண்டந்தசை வலுப்பெறும். முட்டி வலி, முதுகு வலி குணமாகும். கணுக்கால் வலியைப் போக்க

வழுக்கை தலையில் முடி வளர இயற்கை வைத்தியம்

இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வால் அதிகம் சிரம்படுகிறார்கள். விக் வைப்பது. சொட்டை தலையையில் முடி வளர்த்து அதை மறைப்பது என கஷ்டப்படுகின்றனர். முடி வளர்க்க எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு நல்ல பலனும் கிடைத்தப் பாடில்லை. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும். முக்கியமாக இந்த வழியின் மூலம் வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டச் செய்யலாம். தேவையான பொருட்கள்:     தேங்காய் எண்ணெய்     விளக்கெண்ணெய்     வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் கற்றாழை செய்முறை #1: முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். செய்முறை #2: பி

விஷ கடி முதலுதவி

விஷ உயிர்கள் கடித்தால் உடனே மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். எந்த வகையான பூச்சி கடித்தது என்று தெளிவாக கூற வேண்டும். பாம்பு, தேள், பூரான் மற்றும் சிலந்தி போன்ற விஷமுள்ள உயிரினங்கள் கடிப்பதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் உடனடியாக கீழ்கண்ட முதலுதவி சிகிச்சைகளை செய்து, உடனடியாக மருத்துவரை சந்திக்க செல்ல வேண்டும். விஷ ஜந்துக்கள் கடித்த உடன் செய்ய வேண்டிய அவசர மருத்துவம்  கண்ணாடி விரியன்:-          பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். நல்ல பாம்பு:-               வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க. தேள்:-            கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும். வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர். சிலந்தி:-        ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவா

உடல் எடை குறைக்க டிப்ஸ் !

உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட இதோ சில முக்கியமான குறிப்புகள்... 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.  தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.   காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.   தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.   பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.   இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை து

காய்ச்சல் ஒரு நோயா? டாக்டர் விளக்கம் !

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம்.இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நோயா? காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. காய்ச்சல் மூளையை பாதிக்கும

மூட்டு வலிக்கு உணவு பத்தியம் உதவுமா?

மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா? வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை. இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள். மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும் மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன. அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சமச்சீரான உணவு உதவும் மூட்டு வலி போக்

தாய்ப்பால் சுரக்க அருமையான டிப்ஸ்

குழந்தை பிறந்த உடனே முதலில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தான உணவு தாய்ப்பால் . அது ஒரு சிலருக்கு தாரளமாக சுரக்கும். ஒரு சிலருக்கு மிக் குறைவாக இருக்கும். குழந்தையின் முதல் உணவு அது என்பதால், மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பதும், இயற்கையான உணவு என்பதாலும் அதற்கு என்றுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்றைய இயந்தர உலகத்தில், உண்ணும் உணவும், வாழ்க்கை முறையும் மிக வேகமானது என்பதாலும், இயற்கையான வழிமுறைகளை கையாளதாதாலும் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளாகவே இந்த குறைபாட்டை பார்க்க முடியும். சரி, எப்படி தாய்ப்பாலை அதிகம் சுரக்க வைப்பது? என்ன காரணத்தால் அது சுரக்காமல் இருக்கிறது? என்னென்ன உணவுகளை உட்கொண்டால் குழந்தைக்குத் தேவையான தாய் பால் கிடைக்கும் என்பதை இங்கு அறிந்துகொள்வோம். தாய்ப்பால் சுரக்காமல் போவதற்கான காரணங்கள்:  1. புரலோக்சன் என்ற ஹார்மோன் உண்டு. அது பால்சுரக்க தூண்டுவது. அது குறைந்தால் பெண்களுக்கு பால் சுரப்பது குறையும். 2. கர்ப்ப காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக்கொள்ளாத பெண்களுக்கு இயல்பாகவே பால் சுரத்தல் இன்றி இருக்கும். 3. பரம்பரை ஜூன் வழியாக கடத்தப்படும் மரபு குறைபாடு காரணமாக

சுவையான இடியாப்பம் செய்வது எப்படி?

Image
சுவையான இடியாப்பம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.  தேவையான அளவு அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். இந்த கொதிநீரை அரிசி மாவில் சேர்த்து சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  இப்படி பிசைந்த மாவை இடியாப்ப இயந்திரத்தில் இட்டு இடியாப்பம் பிழிந்து இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம். இதோடு தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இடியாப்பம் - 2 தேவையான அளவு அரிசி மாவு எடுத்து தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு மூடி தேங்காய் துருவலுடன் கசகசா சிறிது கலந்து போதுமான அளவு வெல்லம் சேர்த்து இந்த கொதிநீரை அரிசி மாவில் கொட்டி பிசைந்து இடியாப்ப இயந்திரத்தின் உதவியால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.  பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டுகளில் இந்த பிழிந்த இடியாப்பத்தை வைத்து ஆவியில் நன்கு வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான். இடியாப்பம் ரெடி. சுட சுட வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். விரும்பி சாப்பிடுவர். இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவர்.