Posts

Showing posts from December, 2015

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

டெங்கு காய்ச்சல் : தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் சென்னையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மக்களிடையே பெரும் அச்சமும்,பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் திடீரென வந்த ஒன்றல்ல. கடந்த ஏப்ரல் மே மாதங்களிலேயே நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போதே கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தவறியதன் விளைவாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவத் தொடங்கியது. டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடு

உடல் உறுப்புகள் காட்டும் நோய் அறிகுறிகள் !

Image
எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்  . முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை . கை பெருவிரல் (THUMP FINGER) கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும். ஆட்காட்டி விரல் (INDEX FINGER) ஆட்காட்டி

குளிர்கால குழந்தை பாதுகாப்பு முறைகள் !

அப்பாடா!  வெயில் காலம் முடிஞ்சது... ஒருவழியா கோடை கால நோய்கள்லேருந்து குழந்தைகளை காப்பாற்றியாச்சு’ என்று நிம்மதி மூச்சு விடுவதற்குள்ளேயே அடுத்து மழைக்காலம், குளிர்காலம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.ஸ்கூல் விட்டு வரும்போதே ‘ஹச்... தொண்டையிலே கீச் கீச்...’ என்று மூக்கையும் கண்ணையும் கசக்கிக்கொண்டு வருவார்கள். குளிர்காலத்தில் பரவும் வைரஸ்கள் பெரியவர்களையே படுத்தும் போது, குழந்தைகளை விட்டு வைக்குமா? குளிர்காலம் ஆரம்பிக்கப்போகும் சூழ்நிலையில் எந்த விதமான வைரஸ்களால் குழந்தைகளுக்கு என்னென்ன நோய்கள் வரும்? அவற்றின்அறிகுறிகள்? விளைவு கள்? தடுக்கும் முறைகள்? விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் தீபா ஹரிஹரன். “குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்கள் அதிகமாக பரவும். வைரஸ் தொற்று ஏற்பட்டு, தொண்டை வலி உண்டாகும். தொண்டை வலியால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். சில அம்மாக்கள் வலுக்கட்டாயமாக குழந்தையை மடியில் வைத்து ஊட்டுவார்கள். இது தவறு. இதனால் தொண்டையில் இருக்கும் வைரஸ் தொற்று காதுக்கும் பரவி சீழ் வடியும் அளவுக்கு கடுமையாகக்கூடும். 6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு சளி

உணவுகள் செரிமானம் ஆக எடுத்துக்கொள்ளும் நேரங்கள் !

Image
சைவ உணவுகள் நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள் கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் உணவு ஜீரணமாக எடுத்துக்கொள்ளும் நேரம் ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள் காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம் அசைவ உணவுகள் மீன் - அரை மணி நேரம் முட்டை - 45 நிமிடங்கள் கோழி - 2 மணி நேரம் வான் கோழி - இரண்டரை மணி நேரம் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம் TIME பாத்து சாப்பிட்டு கொள்ளுங்கள்..!!!