டெங்கு காய்ச்சல் விரட்ட
இன்று எல்லோரும் பயப்படும் ஒன்று உண்டு என்றால் அது டெங்கு காய்ச்சல்தான். நன்றாக இருந்தவர்கள் கூட அந்த காய்ச்சலுக்கு பலியாகிவிடுகிறார்கள். காரணம் எச்சரிக்கை இன்மைதான். சாதாரண காய்ச்சல்தானே என்று அசட்டையாக இருந்துவிடுவதால், டெங்கு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால், நமக்கெல்லாம் எங்கு காய்ச்சல் வரப் போகிறது என்ற அசாரண எண்ணம் இதுவெல்லாம்தான் சதாரணமாக இருக்கும் ஒருவரை டெங்குக்கு பலியாக்கி விடுகிறது. டெங்கு காய்ச்சல் அறிகள் என்ன? டெங்கு காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடன் வருகிறது. பிறகு காய்ச்சல் கடுமையாகிறது. தாங்க முடியாத தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தோல் நமைச்சல் ஆகியவைகள் தோன்றுகிறது. உடலை கடுமையாக பாதிக்கும் காய்ச்சல் என்பதால் இதனை எலும்பு முறிவு காய்ச்சல் என்கின்றனர். நோய் கடுமையான நிலையில் குருதிபோக்கு காய்ச்சல் (இரத்தப் போக்குடன் காய்ச்சல்) ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஆகும். உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். டெங்கு பாதிப்பு தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல் வயிற்று வலி கடுமையான தாகம் கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும் உ