Posts

Showing posts from July, 2017

டெங்கு காய்ச்சல் விரட்ட

இன்று எல்லோரும் பயப்படும் ஒன்று உண்டு என்றால் அது டெங்கு காய்ச்சல்தான். நன்றாக இருந்தவர்கள் கூட அந்த காய்ச்சலுக்கு பலியாகிவிடுகிறார்கள். காரணம் எச்சரிக்கை இன்மைதான். சாதாரண காய்ச்சல்தானே என்று அசட்டையாக இருந்துவிடுவதால், டெங்கு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமையால், நமக்கெல்லாம் எங்கு காய்ச்சல் வரப் போகிறது என்ற அசாரண எண்ணம் இதுவெல்லாம்தான் சதாரணமாக இருக்கும் ஒருவரை டெங்குக்கு பலியாக்கி விடுகிறது. டெங்கு காய்ச்சல் அறிகள் என்ன? டெங்கு காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடன் வருகிறது. பிறகு காய்ச்சல் கடுமையாகிறது. தாங்க முடியாத தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தோல் நமைச்சல் ஆகியவைகள் தோன்றுகிறது. உடலை கடுமையாக பாதிக்கும் காய்ச்சல் என்பதால் இதனை எலும்பு முறிவு காய்ச்சல் என்கின்றனர். நோய் கடுமையான நிலையில் குருதிபோக்கு காய்ச்சல் (இரத்தப் போக்குடன் காய்ச்சல்) ஏற்படுகிறது. இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஆகும். உடனடியாக தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். டெங்கு பாதிப்பு தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல் வயிற்று வலி கடுமையான தாகம் கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும் உ

ஜிகா வைரஸ் தாக்குதல் - காய்ச்சல் அறிகுறிகள் !

மனசனுக்கு எப்படி எப்படியெல்லாம் பிரச்னை வருதுன்னு பாருங்க ! முதல்ல சிக்குன்குனியா, அப்புறம் டெங்கு, பன்றிக் காய்ச்சல், யெல்லோ பீவர், இப்போ ஜிகா வைரஸ் காய்ச்சல். தமிழகத்தில் 'டெங்கு காய்ச்சல்' அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் இப்பொழுது ஜிகா வைரஸ் பாதிப்பும் வந்துவிட்டது. ஏறக்குறைய டெங்கு காய்ச்சல் மாதிரியான அறிகுறிகளைதான் ஜிகா வைரஸ் காச்சலும் இருக்கும். அறிகுறிகள்:  1. கண்கள் சிவந்திருக்கும் 2. காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், சிவந்த கண்கள், உடலில் சிவந்த தடிப்புகள். ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? டெங்கு காய்ச்சலை பரப்பும் அதே ஏடிஎஸ் வகை கொசுக்களால்தான் ஜிகாவும் பரவுகிறது. மூன்று வாரங்கள் மட்டுமே உயிர் வாழும் ஏடிஎஸ் கொசுக்கள், மூன்று வாரங்களில் பல்லாயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, லார்வா, பியூப்பா பத்து நாட்களில் கொசுக்களாக உருமாறும். எனவே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். ஆட்டுரல், தேங்காய் சிரட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்து அவற்றை அப்புறப்படுத்துதல் அவசியம். எந்த ஒரு காய்ச்சலையும் கவனக்குறைவாக, சாதாரணமாக விட்டு வைக்க கூடாது. உடனே ம

தாய்ப்பால் சுரக்க 20 டிப்ஸ் !

Image
தாய்ப்பால் சுரக்க சில தந்திரோபாயங்களைப் பின்பற்றலாம். அதன் மூலம் கண்டிப்பாக மடிப்பால் சுரக்கும். தாய்மை என்பதை முழுமையடைவதென்றால், குழந்தைக்கு மார்பு பால் ஊட்டுவதன் மூலமே நிறைவடையும். தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க வைப்பது எப்படி? என்னென்ன உணவுகளை உட்கொண்டால் அதிகம் பால் சுரக்கும்? இன்று பல தாய்மார்கள் தனிக்குடித்தனத்தில்தான் வசிக்கின்றனர். நகரங்களில் வசிப்போருக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த அதிக அக்கறை இல்லை. அல்லது அதைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். குழந்தைப் பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைளுக்கு முலைப்பால் குடிக்க வைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது. கிராம புறங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பாக நடக்கிறது. கிராம்புற தாய்மார்கள் அங்கு கிடைக்கும் தானிய வகைகள் மற்றும் சத்தான கீரை வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் 99.9% பிரச்னை ஏற்படுவத்திலை. இயந்திர உலகில் வசிக்கும் நகர பெண்டுகளுக்கும், பெருநகர பெண்களுக்கும், நவநாகரீக பெண்மணிகளுக்கும்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்த