Posts

Showing posts from August, 2020

கொரோனாவால் 2 ஆயிரம் கோடி இழப்பு ! அடேங்கப்பா..அந்தளவுக்கு இவர் பிசினஸ் மேனா? ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்.. விவரம் உள்ளே..!

Image
இந்த கொரோனா ஊரடங்கால் இவருக்கு மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று பீலா விட்டு கொண்டிருக்கிறார். என்னடா இது.. ரோஜா கணவன் செல்வமணிக்கு எப்படி ? அப்போ இவர் என்ன பிசினஸ் செய்கிறார் என்று பலரும் பலவிதமாக நினைத்துக் கொண்டிருக்க,  அப்பப்பா.. அது அப்படி இல்ல.. சினிமா துறை முடங்கியதால் சினிமாத் துறையின் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் விவரமாக கூறியிருக்கிறார்.  இந்த 4 மாதங்களில் 2 ஆயிரம் கோடி என்றால், அதுவும் கணக்கு வராத பணம் எத்தனை கோடியோ? என்று ரசிகர்கள் ஏகமனதாக யோசித்து கேள்வி கேட்கின்றனர்.  சினிமாத்துறை பணம் செய்யும் துறை. அது பல வழிகளிலும், பலருக்கு தொழில் கொடுத்து, வருமானம் கொடுத்து வருகிறது.  மிகப்பெரிய பண முதலைகள் இதில் முதலீடு செய்து, பெரும் இலாபம் சம்பாதித்தும் வருகின்றனர். இன்று வரை 2 ஆயிரம் கோடி இழப்பு என்றால்.. மற்ற சினிமா சார்ந்த வருமான எண்ணிக்கை எத்தனையோ?  கேள்விகள் ஆயிரம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் நடுத்தர, வறுமைகோட்டு கீழ் உள்ள சினிமா தொழிலாளர்கள் தான்.  சாப்பாட்டுக்கு வழியில்லை நேரடியாக கண்ணீர் விட்டு கதறியழுத எத்தனையோ

இளைஞனுக்கு மொட்டை.. பிரபல இயக்குநரின் வெறிச்செயல் !!!

Image
 ஏழை என்றால் இளப்பம் தான் என்று அடிக்கடி சொல்வார்கள். இருப்பவனுக்கு ஒரு கோடி, இல்லாதவனுக்கு தெரு கோடி என்று சொல்வார்கள்.  இருமாப்புடன் இருப்பவனுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது உலகு.  இல்லாத ஏழைகள் என்றால், இருப்பவனுக்கு இளப்பம். என்ன செய்தாலும் யாரும் எதுவும் செய்திட முடியாது என்ற தினாவட்டு.  இந்த மனநிலை படித்தவர், பணக்கார ர், பதவியில் இருப்பவர், இல்லாதவர் என ஏகமனதாக வேறூன்றியே உள்ளது.  என்ன செய்ய? சில தலைமுறைகளாக இப்படிப்பட்ட சூழலை உருவாக்கி, அதில் ஊறி, அதை விட முடியாமல் வெறிப்பிடித்து திரிகின்றனர் இன்னும்.  அந்த வகையில் இந்த சம்பவமும் நடந்தேறி உள்ளது. தெலுங்கு இயக்குர்/நடிகர் நாயுடு. இவர் ஒரு சில படங்கள் நடித்திருக்கிறார். அவர் வீட்டில் ஒரு தலித் இளைஞன் வேலை செய்திருக்கின்றான். மூன்று, நான்கு மாதங்களுக்குப் பிறகு, அங்கு வேலை செய்ய பிடிக்காமல் வேலையை விடுவதாக கூறியிருக்கிறான்.  வேலை வாங்கி பழக்கப்பட்டவன், சாதி உணர்வில் வாழ்ந்தவன் சும்மா இருப்பானா?  போக முடியாது என்று தடை போட்டிருக்கிறான். செல்போன் திருடினாய் என பழி போட்டிருக்கிறான். பயந்த இளைஞனை ப

ஓனம் பண்டிகை... தனி விமானம் ! காதல் பறவைகளுக்கு சொல்லவா வேண்டும்.. ?!!!!

Image
எப்பொழுது பார்த்தாலும், ஏதாவது ஒரு பரபரப்பை உண்டாக்கி கொண்டே இருக்கும் இந்த காதல் ஜோடி. ஒரு சில காதல்களுக்குப் பிறகு, இந்த நடிகை மட்டும் நிரந்தரமாக 4, 5 ஆண்டுகளாக ஒரே இயக்குனர்/நடிகருடன் ஜோடி சேர்ந்து சுற்றுவது கோலிவுட் வட்டாரத்திற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நிரந்தர கணவன் மனைவியாக இன்னும் அவர்கள் ஆகவே இல்லை. அதனால் அவர்களின் காதல் நிறைவேறுமா? வெறும் ஊர்சுற்றலும், ஓட்டல் ரூம்களும் என ஓடிவிடுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  அந்த ஜோடி யார் என்பது உங்களுக்கே இப்பொழுது தெரியும். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர். இவர் என்றால் ஒன்பதும் தலைகீழாகும். அடேங்கப்பா... இவர் வந்து போனால் தமிழக இளைஞர்கள் மனது சூடேறும்.  இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகள் கனவு கன்னி (?) யாகவே இருப்பார் என்று தெரியவில்லை. தமிழ் நடிகைகளில் "சூப்பர் ஸ்டார்" ரேஞ்சுக்கு உயர்த்தப்பட்டு, சீதாவாகவும் நடித்திருக்கிறார்.  அம்மன் வேடத்திலும் கலக்கியிருக்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் ஆன்மீகத்திற்கும், இறை பக்திக்கும் சினிமாவைப் பொருத்தவரை ஒழுக்கம் ஏதும் தேவையில்லை. 

தினமும் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் !

Image
அனுதினமும் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதில் உள்ள சத்துக்கள் மருத்துவ குணம் கொண்டவனை. அவற்றை ஒவ்வொருவரும் தினமும் ஏதாவது வடிவில் எடுத்து வர 100% விகித உடல் நலத்தைப் பெற்றிடாலம். பூண்டு எப்படி சாப்பிடுவது?  வெறும் வயிற்றில், பூண்டு எடுத்து தோலுரித்து 2 முதல் 4 பல் எடுத்து இரண்டு மூன்றாக சிறிதாக குறுக்க வெட்டி, அதை ஒரு தட்டில் ஒரு பத்து நிமிடம் வரை போட்டு வைத்திருக்க வேண்டும்.  அதன் பின் அதை எடுத்து வாயில் மாத்திரை விழுங்குவதை போல போட்டு, குடிநீர் அருந்தி விழுங்கிவிட வேண்டும்.  அவ்வளவுதான்.  வேறொருமுறை:  வெட்டி வைத்து, 10 நிமிட காத்திருப்பிற்கு பிறகு வாயில் போட்டு, பற்களால் இலேசாக கடித்து, பிறகு டம்ளரில் நீரெடுத்து ஊற்றி விழுங்க வேண்டும்.  பூண்டு பற்களை இரண்டு மூன்றாக வெட்டி துண்டாக்கிக்கொண்டு, அதனை ஏதாவது பாத்திரம் அல்லது பொருள் கொண்டு நசுக்கி, பத்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு வாயில் போட்டு, நீர் ஊற்றி விழுங்கலாம்.  எந்த நேரத்தில் சாப்பிடலாம்? சாப்பிடுவதற்கு நேரம் காலம் என்று எதுவும் இல்லை. எனினும் முறையாக சாப்பிடுவதால் பலன் அதிகம் கிடைக்கும்.  அதிகாலை எழுந்து வெற

குஞ்சாமணி ஜிப்பில் மாட்டிக் கொண்டால் எப்படி எடுப்பது?

Image
தலைப்பை பார்த்ததும் என்னடி இப்படி ஒரு பதிவுன்னு உங்களுக்குத் தோணும். ஆனால் இது பெரிய விசயமே அடங்கியிருக்குங்க.. சாதாரணமா பேண்ட் ஜிப் போடும்பது கவனா போட்டால் ஒண்ணும் ஆகாது. ஆனால் அவசர அவசரமாக போட்டால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் குஞ்சா மணி அதுல சிக்கிக்கும். ஜீப் லாக் ஆனதும், அதைத பிரிக்கவும் முடியாது. ஜாய்ண் பண்ணவும் முடியாது. இப்படித்தான் எங்க ஊர்ல ஒரு சிறுவனுக்கு ஜட்டி போடாமல் புதுசா ஒரு ஜூன்ஸ் பேண்ட் , T-shirt வாங்கி வந்தாங்க. ஆசையா பையனை குளிப்பாட்டி, சட்டையை போட்டுவிட்டு, பேண்ட்டை போட்டாங்க. ஜிப்பை அவங்க அப்பா போட, சரக்குன்னு இழுத்தாரு. பையன்.. அய்யோ. அம்மா.. ன்னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டான்.. அப்புறம் என்ன? பேண்ட் போட்டதுக்கு ஏண்டா இப்படி அழவறேன்னு அவங்க கோவிச்சிட்டுப் போய் சோபாவுல உட்கார்ந்திட்டாரு. பையன் கதறிகிட்டே அவங்க அம்மா கிட்ட போகவும்தான் தெரிஞ்சது... பையன் குஞ்சு மணி ஜிப்பில மாட்டி வெளியில பாதி தொங்கிட்டு இருந்தது. அதை எடுக்கவும் முடியல.. பிரிக்கவும் முடியல... உடனே ஒரு கத்திரை எடுத்து ஜிப் பக்கத்துல வெட்டி பேண்ட்டை கழட்டிட்டாங்க. ஆனால் ஜிப் மட்டும் குஞ்சா மணியில ஒட்டிட்டு இ

ஜோடி சேர்ந்து நீச்சல் குளத்தில்.. ! பிரபல நடிகை செய்த குறும்பு...!! ப்பா.. இப்படியா பொது வெளியில் நடந்துக்கிறது...? !!!

Image
தமிழில் நேரம் என்று ஒரு படம் வந்த்ததல்லவா. அதில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நஸ்ரியா நசீம். உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் 2013 ஆம் ஆண்டு நம்ம தளபதி ஸ்பெஷல் டைரக்கடர் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பிரபலமானார். ரசிகர்கள் இப்படி ஒரு நடிகை இருக்கிறாரா என்று ஆர்வத்துடன் ரசித்து கண்டு களித்தனர். தமிழ் திரை உலகில் இப்படி ஒரு நடிகை இருப்பது அந்த படத்தின் வழியாகதான் கண்டுகொண்டார்கள். அதன் பிறகு மலையாள கரையோர பக்கம் ஒதுங்கிய இவர் அங்கு நடிகராக இருந்த பகத் பாசில் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு நீண்ட இடைவெளியிட்ட நசீம். திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் கணவருடன் ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்.டிரான்ஸ் எனும் அந்த படத்தில் இருவரும் ஜோடியாக நீச்சல் குளத்தில் அரை குறை ஆடையுடன் இருக்கும் படத்தை எடுத்து சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வைரல் ஆக்கியுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் உள்ளே அப்படி என்னதான் செய்கிறார்களோ என்று கமெண்ட் செய்து

தொடர் தும்மல் வந்து அவதியா? இதோ இயற்கைத் தீர்வு !!!!

Image
எப்பொழுதும் விடாமல் தொடர் தும்மல் வந்து கொண்டிருந்தால், இந்த வீட்டு வைத்தியத்தை செய்வதன் மூலம் உடன் தும்மலை நிறுத்திடலாம். கரோனோ என்று பயப்படத் தேவையில்லை. சுற்றுப்புறச்சூழல், தூசிகள், வீட்டின் ஒட்டடைகள், விலங்குகளின் ரோமங்கள் இப்படி ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளால் சிலருக்கு விடாமல் அச் அச் என்று தும்மல் வந்து கொண்டே இருக்கும். நிற்காது. சிலருக்கு குடி நீர் சேராமல் சளி பிடித்து தும்மல் வந்து, மூக்கில் "நீர்" ஒழுகும். அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாமல், தலைவலி வந்து பாடாய் பட்டுக் கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு சூப்பர் "ரெமிடி" உள்ளது. அது வீட்டிலேயே உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் பசு மஞ்சள். ஒரு விரல் அளவு எடுத்து அதை தோல் சீவி, அழகாக வட்ட வடிவமாக "கேரட்" போல வெட்டி, ஒவ்வொரு துண்டமாக எடுத்து வாயில் போட்டு, உதடுகளை மூடி, மெல்ல மெல்ல ரசித்து மென்று எச்சில் உடன் கலந்து மெல்ல மெல்ல அந்த மாவை விழுங்கினால், அடடா.. அடா... அந்த ஒரு கணத்தை என்னவென்று சொல்ல... உடன் ஒரு சில நிமிடங்களில் தும்மல், நீர் ஒழுகுதல், சளித்தொல்லை, காய்ச்சல் எல்லாம் போய் தொலைந்து

இரத்த சோகை, ஹீமோகுளோபின் குறைவா? இந்த ஒரு பொருளை சாப்பபிட்டு வாங்க.. போதும் போதும்ங்கிற அளவிற்கு இரத்தம் ஊறும் !!!!

Image
பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படும். இரும்பு சத்துப் பற்றாக்குறை காரணமாக இரத்த சோகை ஏற்பட்டு, மயக்க நிலை ஏற்படும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். இரண்டு நபர்களுக்குத் தேவையான உணவை அவர்கள் உண்டே ஆக வேண்டும். கிராம்புற, ஏழை எளிய மக்களுக்கு இது ஒரு பெரிய சாப கேடாகவே உள்ளது. இரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவதால் பல்வேறு உடல் நல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. சரி... எப்படி ஓவர் நைட்டில் இரத்த அணுக்களை (ஹீமோ குளோபின்) அதிகரிக்கலாம்? ஓவர் நைட்டில் எல்லாம் கட்டாயம் முடியாது. ஒரு வாரத்திற்காகவு சிவப்புநிறமுடைய உணவுகளை எடுத்ததுக்கொள்வதன் மூலம் இரத்த சோகையை சீர்படுத்த முடியும். குறிப்பாக இரும்புச் சத்துமிக்க உணவுகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கை கீரை, செவ்வாழை, பேரீட்சை போன்றவற்றில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக செவ்வாழையில் அதிகளவு பீட்டா கரோட்டின் மற்றும் உடலுக்கத் தேவையானச த்துக்கள் நிரம்பி உள்ளதால், அதை தினந்தோறும் ஒன்று என்ற வீத த்தில் எடுத்து வந்தால் கட்டாயம் ஹீமோ குளோபின் அளவு அதிகரித்து, சீரான

வாய் துர்நாற்றம் தீர இயற்கை வழிமுறைகள் !

Image
சிலர் பக்கத்தில் வந்தால் "கப்பு" ஆளை த்தூக்கும். அடேங்கப்பா... இந்த ஆள் கிட்ட பேசறதவிட, பாழும் கிணத்துல விழுந்து செத்து போயிடலாம் போல ஒரு வெறுப்பு உணர்வு தோன்றும். ஆளையே வாய் துற்நாற்றம் கொன்று விடும் அளவிற்கு மிக மோசமானதாக இருக்கும்.  ஆனால் எதிர் இருப்பவர் நண்பரோ அல்லது மிக நெருக்கமான சொந்தக் கார்ரோ இருந்து விட்டால், அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற எண்ணமே அதிகம் வந்து போகும்.  சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருக்கும் அந்த தருணம் இருக்கிறதே... அப்பப் ப்பா... அதைத்தான் தர்ம சங்கடம் என்று சொல்வார்கள். அதே துர்நாற்றம் நமக்கே வந்து விட்டால், ... அதை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதா? அப்படி வந்து விட்டால் என்ன செய்வது? அதற்கான ரெமிடி தான் நாம் இங்கே பார்க்கப்போவது. பொதுவாக இதுபோன்ற வாய் துற்நாற்றம் ஜீரண கோளாறுகளால் ஏற்படக்கூடியவை. இதனால் பெருங்குடலில் புண்கள் ஆகி, அதன் வெளிப்பாடாக வாயின் வழியாக அந்த நாற்றம் குடலைப் பிடுங்கும் அளவிற்கு வெறியேறும்.  சரியாக பல் துலக்காத காரணத்தில் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். இதனை உடனடியாக தவிர்க்க வேண்டுமானால், வாயில் நறுமணம் வீசும்

முகம் அழகா இருந்தாலும்.. இது மட்டும் இல்லேன்னா... அப்புறம் கஷ்டம் தான்...! muga alagu kurippugal

Image
பெண்கள் அழகுக்கு முக்கியத்துவர் அளிப்பார்கள். குறிப்பாக முகத்திற்கு இஷ்டத்திற்கும் பேஸ் கிரீம்கள், லோசன்கள், முக புவடர்கள், ஃபேஸ் வாஷ்கள் என ஏகப்பட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளை முகத்தில் போட்டு ஒரு வழி செய்து விடுவார்கள். ஆனால் பாருங்கள், அங்கேயே அருகில் இருக்கு இரு காது மடல்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுவார்கள். முகம் அழம்புவது என்றாலும் முன் புற முகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நீவி, வழித்து கழுவுவார்கள். காதுமடல்களை ஏனோதானோவென நனைத்து டவல் கொண்டு ஈரத்தை மட்டும் துவட்டி விட்டு விடுவார்கள். இதனால் என்ன ஆகும் என்றால், காது மடல்கள் முகத்தை விட டல்லடித்து, கலர் மங்கலாக காணப்படும். அப்படி உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டுப் பெண்களுக்கோ இருந்தது என்றால், இப்படி செய்து பாருங்கள். உங்கள் காது மடல்கள் அழகாகி, வசிகரமாக தோற்றமளிக்கும். உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் Baby Lotion ஐ கொஞ்சம் எடுத்து காது மடல்களில் தடவி வந்தால், முகத்திற்கு ஈடாக, காது மடல்களின் நிறம் மாறி பார்ப்பதற்கு ஜொலிக்க ஆரம்பிக்கும். காது மடல்கள் உங்கள் காதுகளில் வந்து என் அழகை பார

குசு வெளியேறும்பொது துர்நாற்றம் வீசினால்.. எச்சரிக்கை மணி !

Image
ஒவ்வொருவருக்கும் ஆசன வாயில் வாயு வெளியேறுவது என்பது இயற்கையானதுதான். ஆனால் அது துர் நாற்றத்தை வெளிப்படும்பொழுதுதான் பிரச்னையே துவங்குகிறது. சாதாரணமாக ஜீரண மண்டலத்தில் ஏதும் பிரச்னை இல்லாதவரைக்கும் வாயு வெளியேறினால் கூட நாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கும். அப்படி இருந்தால் உடலின் ஜீரண மண்டலம் சீரான இயக்கத்தில் உள்ளது என்று பொருள். அதுவே அசிங்கமாக, பிறர் முகம் சுளிக்கும்படி துர்நாற்றம் வீசும்படி இருந்தால், ஜீரண  மண்டலத்தில், வாயு தங்கி பிரச்னை ஏற்படுத்துகிறது என்று பொருள். வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக்கப்படுகிறது. மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும். புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும். தேங்காய் துரு

ஆண் குறியை சுத்தம் செய்யும் முறைகள் ! ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்ள கூடிய தகவல்கள் உள்ளே !

தினமும் குளிப்பதை போல, பல் துலக்குவதைப்போல, ஆண்குறியை சுத்தம் செய்வதும்..ஆண்களின் கடமை முன் தோலிற்கும் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் இடையே உருவாகும் Smegma என்ற பொருள் ஆண்குறியின் தலைப்பகுதிக்கும் முன்தோலுக்கும் இடையே நேரடியாக உராய்வை தடுக்கவும் எரிச்சல் உருவாக இருக்கவும் பயன்படுகிறது.. ஆனால் இதையே வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பும்..சில தோல் சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.. எனவே அதை தினசரி சுத்தம் செய்வது அவசியம்.. குளிக்கும் போது தினமும் ஒரு தடவையாவது முன்தோலை பின்நோக்கி தள்ளி பின் சுத்தம் செய்யவேண்டும்..இதற்கு மென்மையான அதிக வாசனையற்ற வெண்மை நிறமுள்ள சோப்பு பயன்படுத்தலாம்.. ஒரு நாளிற்கு ஒரு முறை சோப்பு பயன்படுத்தினால் போதுமானது.. ஒரே நாளில் இரு முறை..மூன்றுமுறை சுத்தம் செய்தால் நன்று.. ஒரு முறை சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்து..பின் வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவினால் போதுமானது.. தலைக்கு போடும் சாம்பூ..அதிகம் வாசனையுடைய சோப்புகள்..கெமிக்கல் உடைய சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாசனைக்காக சென்ட் போன்றவை

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

Image
எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும். எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம். ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம் தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக

தம்பீ விட்டுர்ரா.. டேய்.. கதறிய 51 பேர் ..! பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞர் ! வழக்கில் வெளிவந்த அதிரடி தீர்ப்பு !

Image
கடந் த ஆண்டு மார்ச் மா தம் 15 ஆம்  தே தி நியூசிலாந் தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூ திகளில் நடந் த அந் த கொடூர சம் பவ த் தை அவ்வளவு எளி தில் யாரும் மறந் திருக்க முடியா து. உலகையே ஒரு நிமிடம் அசை த் து ப்  பார் த் த து அந் த கொடூர த்  து ப் பாக்கிச் சூடு சம் பவம். ஆஸ் திரேலியா நாட்டை சேர்ந் த 29 வய தான  பிரெண்டன் டாரண்ட் என்ற இளைஞர் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூ திகளில் கொடூரமாக நட த் திய  து ப் பாக்கிச் சூட்டில் 51  பேர்  பரி தா பமாக ப்  பலியானார்கள். மசூ திகளில்  தொழுகை நடந் து கொண்டிருந் த நேர த் தில் அங்கு ப்  புகுந் த அந் த இளைஞர் கண்ணில்  பட்டவர்களை எல்லாம்  ப ப்ஜி கேமில் சுட்டு த்  தள்ளுவ தை ப்  போலச் சுட்டுக் கொன்றார்.  தங்கள து உயிரைக் கா ப் பாற்றிக் கொள்ள எவ்வளவோ க தறியும், அ தை ப் பற்றி சிறி தும் ஈவு இரக்கமின்றி கொன்ற தோடு,  தான் செய் த கொலையை ஃ பேஸ் புக்கில் நேரடியாக ஒளி பர ப் பும் செய் தார்  பிரெண்டன் டாரண்ட். இந் த கொடூர சம் பவம்  தொடர் பாக அவர் மீ து, கொலை, கொலை முயற்சி மற்றும்  பயங்கரவா த குற்றச்சாட்டு ப்  ப திவு செய்ய ப் பட்ட து. ஆரம் ப த் தில்  தன

பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாவா? என்னய்யா சொல்றீங்க? அதிர்ச்சிதகவல் !!!!

Image
சின்னத்தம்பி படம் மூலம் தமிழக பட்டிதொட்டிகளெல்லாம் பிரபலமானவர் நடிகர் பிரபு. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே அமைந்திருந்தன. 80,90 களில் பிரபு - சத்யராஜ் படங்கள் என்றாலே ரசிகர்கள் விரும்பி பார்த்தார்கள். இளைய திலகம் பிரபு சிரித்தால் கவர்ச்சியாக கண்ணத்தில் குழி விழும். அந்த அழகை பார்த்து ரசிக்காத ரசிகைகளே இல்லாதிருக்க முடியாது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல மணிரத்னம் இயக்கிவரும் பிரம்மாண்ட ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் ராஜராஜசோழன் பாத்திரத்தில் ஜெயம் ரவியும் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிகர் கார்த்தியும் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபு மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் பொன்னியின் செல்வன் கதையில் வரும் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சரத்குமாருக்கு பதிலாக தற்போது சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நிழல்கள் ரவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் பிரபுவே நடிப்பார் என்றும் எதிர்பார்க

தளபதி மகளின் புதிய புகைப்படம் . ! விஜய் மகளா இது என வாய் பிளக்கும் ரசிகர்கள் ! (புகைப்படம் உள்ளே)

Image
தமிழ் சினிமாவை பொருத்தவரை தளபதிக்கு இன்னும் ஈடு கொடுக்க எந்த நடிகராலும் முடியவில்லை. புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டு தான். பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய், பிகில் படத்திற்கு பிறகு "மாஸ்டர்" படத்தில் நடித்தார். அதன் பிறகு கொரோனோ காரணமாக படபடிப்புகள் நிறுத்தப்பட்ட வேளையில் வீட்டில் இருந்த அவர் பல நடிகர்களுக்கு முன்னோடியாக சில செயல்களை செய்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் மரக்கன்று நடும் சேலன்ஜில் மரக்கன்று நடுவதை போன்ற போட்டோ வெளியிடப்பட்டு வைரல் ஆனது. தளபதி திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது. சங்கீதா என்ற டாக்டரை மணமுடித்த அவர் இதுவரைக்கும் அதே இளமையுடன் அவரை காதலித்து வருவதாக தெரிவித்திருந்தது திருமணமான தம்பதிகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, தான் விருப்பட்ட நடிகரையே திருமணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே. சஞ்சய், சாஷா என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்பத்தை கவனித்து வருகின்றார். சினிமா பட சூட்டிங் இ

தீப்பெட்டி கணேசனுக்கு ராகவா லாரன்ஸ் செய்த அதிர்ச்சி செயல் ! எப்பா.. இப்படி ஒரு மனுசா இந்த உலகத்துல.! மகிழ்ச்சியில் ரசிகர்கள் போட்ட கமெண்ட் !!

Image
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அடிப்படையில் மிக வறுமையில் இருந்து , யாருடைய பின்னணி இல்லாமல், சினிமாவில் வளர்ந்து வந்தவர். அதனால் பிறர் படும் கஷ்டங்கள் அவருக்கு அத்துப்படி. அதனடிப்படையில் அவர் சேவை நிறுவனம் தொடங்கி, இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு, உடல் குறைபாட்டுடன் இருப்பவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய நடன (Dance) பயிற்சி பள்ளியில், பணக்கார பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், ஏழை எளிய திறமையுடையவர்களுக்கும் இலவசமாக பயிற்சியை கொடுத்து வருகிறார். மேலும் இயற்கை இடர்பாடுகள், வறுமையில் வாடும் மக்கள் என அவர் பார்வைக்கு சென்றடையும் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறார். பண உதவி மட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். அந்த வகையில்  தீப்பெட்டி கணேசன் நடிகர் கொரோனோ ஊரடங்கு காலத்தில் குடும்பத்தை நிர்வகிப்பதற்கு போதுமான பணமில்லாத நிலையில், வறுமையில் வாடி வருவதை அறிந்து, தானே நேரில் சென்று அவர் குடும்பத்திற்கு தேவையான பொருள் உதவிகளை செய்து தந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்கால கல்விச் செலவை ஏற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொ

தப்பித் தவறி கூட இந்த உணவை சாப்பிடாதீங்க ! சர்க்கரை அளவை அதிகபடுத்திடுமாம் !

Image
சர்க்கரைநோய் என்பது ஒரு நோயே அல்ல என்று இன்றைய நவீன மருத்து உலகில் அறிவித்து விட்டனர். அது ஒரு குறைபாடு நோய். அதை உண்ணும் உணவின் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். இன்று சர்க்கரை நோயாளிகள் காலையில் உண்ணும் உணவாக ப்ளாக்ஸ் கார்ன் உள்ளது. இது அடிப்படையில் நல்லது என்றாலும், தொடர்ந்து உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு தாறுமாறாக எகிறும் என்று கணித்துள்ளனர். காரணம் இதுதான். இதில் அதிகளவு செயற்கை சுவையூட்டிகள் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகளவு உள்ளதால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். சில நேரங்களில் கால் வீரல்கள், கால்களை அதிகம் பாதித்து அதை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதும் இதனால்தான். கார்ன் ப்ளேஸ் உணவு சோள மாவால் செய்யப்பட்டதுதான் என்றாலும், அதில் புரோட்டின் குறைவாக உள்ளது. இதனால் பசி அதிகம்

கொரோனாவிலிருந்து குணமாகி, கனடா பிரதமர் மனைவி வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ !

Image
கடுமையான கொரோன நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கபட்ட கனடா பிரதமரின் மனைவி சோபியா ஜார்ஜியா ட்ரோடோ இப்பொழுது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனக்கான பிரார்த்தனை செய்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் உணர்ச்சிப் பூர்வமாக நன்றியை தெரிவித்து அவர் ஒரு நெகிழ்ச்சி வீடியோவை வெளியிட்டிருக்கிறார். முன்னதாக அவர் பிரிட்டானியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, அவருக்கு இலேசான காய்ச்சல் , சளி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றியதால், அதனையடுத்து அவருக்கு கரோனோ சோதனை நடப்பட்டது. அந்த முடிவுகள் வரும் வரை தன்னைத்தானே அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து SOPHIE யின் கொரோனோ பரிசோதனை முடிவுகள் கடந்த 13ம் தேதி வந்தது. அதில் அவருக்கு பாசிடிவ் என வந்நதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனை பேரில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அதை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த ஜஸ்டின் ரூட்டோ, 2 வாரங்களுக்குப் பிறகு , மீண்டும் அவருக்கு சோதனை நடப்பட்டத்து. அதில் அவருக்கு கோரோனோ இல்லை என்ற முடிவுகள் வந்தது. இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர், அவருடைய நோய் தீர பிரார்த்த

ரசிகர்களே தளபதியின் புதிய லுக் காண தயாரா?- சூப்பர் தகவல்

Image
இளைய தளபதி விஜய் என்று பெயர் சொன்னாலே ரசிகர்கள் பலர் உள்ளனர். ரசிகர்கள் இந்த காலத்தில் கொண்டாடும் வகையில் தளபதி நண்பர்களுடன் பேசும்போது எடுத்த புகைப்படமும், செடி நடும் போது எடுத்த புகைப்படமும் ரசிகர்களிடம் அதிகம் வலம் வந்தது. தற்போது ரசிகர்களுக்கு தளபதியின் புதிய புகைப்படம் வெளியாகப்போகிறது என்று கூறினால் எப்படி இருக்கும். ஆமாம் இன்று தளபதியின் மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளும், எஸ்.ஏ. சந்திரசேகரின் பேத்தியுமான சினோ பிரிட்டோவின் திருமணம் இன்று உறவினர்கள் மத்தியில் நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கிறாராம் தளபதி விஜய்.

இந்த ராசியில் பிறந்தவர்களை ஒருபோதும் காதலில் நம்ப கூடாதாம்...!!!

Image
நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் காதலை வளர்ப்பதில் பலர் நம்புகிறார்கள். சிலர் காதலில் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்க ஒரு அசாதாரண தூரம் சென்று எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக இருக்கும்போது, சிலர் ஒருபோதும் நம்பிக்கை வரும்படி நடந்து கொள்ள மாட்டார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளை காதலில் நம்ப முடியாது என்று பார்க்கலாம். மிதுனம் மிதுன ராசியில் பிறந்தவர்கள் சுவாரஸ்யமானவராகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். ஆனால் உறவுகள் என்று வரும்போது, அவை சற்று குழப்பமானவராகவும், சிக்கலானவராகவும் இருப்பார்கள். இவர்களை புரிந்துகொள்வது மிகவும் கடினமாகும், இவர்களை நம்புவது இன்னும் சிக்கலானதாக இருக்கும். இவர்களின் மாறக்கூடிய தன்மை காரணமாக, இவர்களை நம்பமுடியாது. இருப்பினும், சரியான வகையான தகவல்தொடர்பு மூலம், மிதுன ராசிக்காரர்கள் சிறந்தவராகவும் நம்பகமானவராகவும் மாற முடியும். அவர்களுக்கு தேவையானது ஒரு உதவி கை மற்றும் நிறைய பொறுமையாகும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்கள் கவனத்தை ஈர்ப்பவர்கள் மற்றும் உயர்ந்த வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். அதற்காக, அ

உங்கள் வீட்டிற்கு திடீரென எறும்புகள் படை எடுத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Image
வீடுகள் என்று இருந்தால் எறும்புகள் கட்டாயமாக வரும். இதற்கெல்லாம் காரண காரியங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. எறும்புகள் படை எடுத்து வருவதற்கும், காரணம் உண்டா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். குடித்தனம் செய்யும் வீட்டில் திடீரென்று எரும்பு வருவதற்கு காரணம், நம் வீட்டில் உணவு பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதும் ஒன்று. இதைத் தவிர்த்து வெயில் காலங்களில், குளிர்ச்சியான இடங்களைத் தேடி எறும்புகள் வருவது இயற்கைதான். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் வீட்டு வெளிப்புறங்களில், கதவுகளுக்கு பின் பக்கங்களில், இப்படி எறும்புகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சில இடங்களில் திடீரென்று சாரைசாரையாக வரும். இந்த எறும்புகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள ஒரு அவசியம் இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் பிள்ளையார் எறும்பாக இருந்தாலும் சரி. கட்டெறும்பாக இருந்தாலும் சரி. யாருடைய க

தமிழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக மகனுக்கு பெயர் வைத்த சிபி ராஜ்..தீயாய் பரவும் ட்வீட்..!!

Image
வளர்ந்து வரும் நடிகர்களில் சிறந்த நடிகர் சிபிராஜ். பிரபல தமிழ் நடிகர் சத்யராஜின் மகன் இவர் என்பது நாம் அறிந்தது என்றாலும் கூட, இவர் அவரைவிட நடிப்பு, டான்ஸ், சண்டை என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார். ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சிபிராஜ், தமிழ் ஹீரோக்களில் சொல்லிக்கொள்ளும்படி இன்னும் பெரிய படங்களில் நடிக்கவில்லை. இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான முதல் படத்தில் நடிப்பு திறமையை காட்டிய பிறகு, வேறு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் இவருக்கு அமையவில்லை என்பதே உண்மை. வெற்றிவேல், சக்திவேல், மண்ணின் மைந்தன் போன்ற படங்களில் நடித்துள்ள சிபிராஜ் கடைசியாக சத்யா என்ற திரைப்படத்தில் நடித்திருந்திருந்தார். 2008ம் ஆண்டு சிபி ராஜ், ரேவதி என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் சம்மத த்தின் பேரில் நடைபெற்ற இந்த திருமண பந்தத்தின் விளைவாக அழகான மகன் ஒன்றை பெற்றெடுத்தனர். இதற்கு முன்பே சிபிராஜ், ரேவதி 10 ஆண்டுகால நண்பர்களாக இருந்தவர்கள்தான். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதில் நட்பு திருமண பந்தமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்நிலையில் அவர்களின் மகனிற்கு "தீர

யானைக்கால் நோய் குணமாக சித்த வைத்தியம் !!!

Image
யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது, ஃபைலேரியா (Filaria) எனும் நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் நமது நிணநீர் மண்டலத்தை தாக்குவதால் ஏற்படும் ஒரு நோய். மனிதர்களுக்கு இந்த நோய் நுளம்புகளின் (கொசு) வழியே பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப் பட்டவர்களின் தோலும் அதன் கீழே உள்ள திசுப் பகுதிகள் வீககமடைந்து விகாரமான தோற்றத்தைத் தரும். தற்போது இந்த நோய் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் முற்காலத்தில் பரவலாய் பலரும் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர். யானைக்கால் நோய்கான தீர்வுகளை நமது முன்னோர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர். அத்தகைய ஒரு தீர்வினை இன்றைய பதிவில் பார்ப்போம். புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்தியம்” என்ற நூலில் இந்த நோய்க்கான தீர்வினை பின்வருமாறு அருளியிருக்கிறார். வானித்தேன் கருங்குருவை மாப்படி கால்தான் வகையாகத் திருகுகள்ளிப் பாலரைக்கால் நசனித்த பசுப்பால் தானரைக் காலாகும் நறுந்தேனும் படியரைக்கால் நவிலக்கேளு தசனித்த மதனிலே கலந்து கொண்டு தயவாக அடுப்பேற்றி லேகியமாய்க் கிண்டி அசனித்து ஆறவிட்டுக் கல்லிலாட்டி அப்பனே கலசத்தில் பதனம் பண்ணே. பண்ணப்பா கழற்சிக்கா யளவாகக்கொள் பக்குவமா யைந்துதின

பொற்காசு முறையை கைலாசாவில் அறிமுகப்படுத்தும் நித்தி - ஒரு பொற்காசு - 11.66 கிராம் தங்கத்திற்கு நிகரானது

Image
விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் நித்தியானந்தாவின் கைலாசா நாடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்போர் ஏராளம். ரிசர்வ் பேங்க், தனி கரன்சி என அதிரடி காட்டி வந்த நித்தி, நித்தம் நித்தம் ஒரு செய்திகளை வெளியிட்டு பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார்.  விக்கிபீடியா, என்சைக்ளோபீடியாவை எல்லாம் ஓரம் கட்டும் விதமாக வெளியானது நித்தியானந்தாபீடியா… அவரைப் பற்றிய தகவல்களை 1974 முதல் 2020 ஆம் ஆண்டு இன்றைய தேதி வரை அனைத்தும் அப் டூ டேட் ஆக சேகரித்து வெளியிட்டார் நித்தி. தினம் தினம் நடக்கும் சத்சங்கம், போட்டோ ஷூட் என ஒன்று விடாமல் எல்லாம் அதிலே இருக்கும் வகையில் நித்தியானந்தாபீடியா வெளியானது. இந்த பரபரப்புக்கு இடையே இப்போது தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசியிருக்கிறார் நித்தி. அதுவும் கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது.. முழுக்கவே பொற்காசுகள . ஆங்கிலத்தில் டாலர் என்றும், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார் நித்தி. கைலாசாவின் கரன்சி தமிழில் பொற்காசுகள் என்றழைக்கப்படும். ஒரு பொற்காசின் மதிப்பு இன்றைய தங்கத்தின் மதிப்பில் 11.66 கிராம். தங்கத்தின

வேலைவாய்ப்பு தகவலுக்காக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

கூகுள் நிறுவனம், வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ‛கோர்மோ ஜாப்ஸ்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனைப்போக்க, வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'லிங்க்ட்இன்' நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட சில தளங்கள் உள்ளன. இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி, ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வங்கதேசத்திலும், 2019ல் இந்தோனேஷியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும். இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான வேலைகளைப் பரிந்துரை செய்யு

கரம் மசாலா தரும் ஆரோக்கியம் ! யாருக்கும் தெரியாத ரகசியம் உங்களுக்காக !!!

Image
கறிக்குழம்பில் வாசனைக்காகவும் , சுவைக்காகவும் போடும் கரம் மசாலா வெறும் பொடியல்ல... அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம், சோம்பு , பிரிஞ்சு இலை , மிளகு என பல வகையான மசாலா பொருட்களைக் கொண்டு அரைத்த ஒரு மூலிகைப் பொடி எனலாம். அப்படி என்னென்ன நன்மைகள் உள்ளன... செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது. செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது. செரிமானம் : கறி, பிரியாணி போன்ற ஹெவியான உணவுகள் செரிமானம் அடையவே இந்த மசாலா சேர்க்கப்படுகிறது. வயிற்றில் செரிமானத்தைத் தூண்டி அதன் கெமிக்கல்களை சுரக்கச் செய்கிறது. இதனால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லையும் இருக்காது. வளர்ச்சிதை மாற்றம் : இதில் உள்ள மிளகு போன்றவை ஃபைட்டோ நியூட்ரியன்ஸ் க

30 வயதில் இதையெல்லாம் செய்தால், 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.. !!!

Image
நீங்கள் 30 வயதை அடையும் போதே ஆரோக்கியம் என்ற விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் முதுமைக் காலத்தில் நீங்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே அப்படி நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.  காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனெனில் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்வது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனெனில் காலையில் எழுந்து ஒர்க் அவுட் செய்வது அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இரத்த ஓட்டம் சீராக இயங்கும். காலை உடற்பயிற்சி : உங்களுக்கு ஏற்கெனவே உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பின் மகிழ்ச்சி. இல்லை எனில் இன்றிலிருந்தே துவங்குவது அதைவிட மகிழ்ச்சியான விஷயம். ஏனென