Posts

Showing posts from November, 2019

பலவீனமான கூந்தலை பராமரிக்க டிப்ஸ் !

Image
பலவீனமான கூந்தல் (weak hair) நமது தவறான அணுகுமுறைகளினால் மட்டுமே பலவீனமான கூந்தல் உண்டாகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம். 1. அடிக்கடி உப்புத்தண்ணீரில் குளிப்பது. 2. தலைமுடிக்கு அடிக்கடி பிளீச் செய்வது 3. தலைமுடிக்கு அடிக்கடி சாயம் போடுதல் (colouring) நெடுநேரம் வெயிலில் அலைவது போன்ற காரணங்களால் பலவீனமான கூந்தல் உண்டாகிறது. பலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள் : 1. பலவீனமான கூந்தலை உடையவர்கள் ஈர்த்தலையில் அல்லது எண்ணெய் பூசியவுடன் தலையை வாரக்கூடாது. 2. இரசாயனக் கலவை கொண்ட ஷாம்புகளைவிட, இயற்கை மற்றும் ஆயுர்வேத முறைகளில் தயாரிக்கப்படும் சீயக்காய் அல்லது ஷாம்புகளை உபயோகியுங்கள் 3. சீயக்காய் தூளை சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து தேய்த்தால் வறட்சித் தன்மை இல்லாதிருக்கும். 4. கூந்தலை சுத்தம் செய்யும்போது மயிர்க்கால்களையும் கவனம் கொண்டு விரல் நுனிகளால் சுத்தம் செய்ய வேண்டும். 5. மாதத்திற்கு மூன்று முறையாவது எண்ணெய் மசாஜ் செய்வதால் பலவீனமான கூந்தல் பலமான கூந்தலாகும். 6. தலையில் மசாஜ் செய்ய கேரட் சாறு மிகவும் நல்ல பலனைத்தரும். 7. அதிக சூடுள்ள நீரில் குளிக்கக்கூடாது. 8. கூந்தலை டவலால் அடித்து காய வ

சுவையான இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?

இஞ்சி டீ தயாரிப்பது எப்படி...? இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் பிரச்சனைகளும் நீங்கும். இப்போது மசாலா இஞ்சி டீயை எப்படி தயாரிப்பது என்று காண்போம். *தேவையான பொருட்கள்:* இஞ்சி - 1 சிறிய துண்டு எலுமிச்சை - 1 பட்டை - 2 துண்டுகள் புதினா இலைகள் - சிறிது தண்ணீர் - தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு *தயாரிக்கும் முறை:* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் நசுக்கிய இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். Tags: How To Make Ginger Tea In Tamil, Ginger Tea Making Tips, Tamil Recipe, Ingi Tea Vaippathu Eppadi.

மலச்சிக்கல் தீர்த்திட இயற்கை வைத்தியம்

மலச்சிக்கல் வராமல் தடுத்திட டிப்ஸ்  நடிகர் சூர்யா ஒரு படத்தில் கூறுவது போல, "மலச்சிக்கல்" பல சிக்கல் தான். மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வாறு அவசியமாகின்றதோ, அதுபோல ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நன்கு மலம் கழித்தல் அவசியமாகின்றது!! மலச்சிக்கல் ஏற்படுத்தும் பாதிப்புகள் மலம் சரிவரக் கழிக்கப் படாமல் குடலில் தங்கினால் ,அது கெட்டு, ஒருவித வாயு உருவாகி, உடலெல்லாம் பரவி ,வாய் நாற்றம்/ வயிறு உப்புசம்/ தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன!! *மேலும் குடலில் தங்கிய நாள்பட்ட மலத்தில் அமிலம் உற்பத்தியாகி, இரத்தத்துடன் கலந்து, உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கும்!! ★அவசர அவசரமாக உணவை உட்கொள்ளாமல் மெதுவாக உமிழ்நீருடன் கலந்து உண்ணுதல்!! ★குளிர்ந்த நீரை அதிகமாகப் பருகுதல்!! ★பச்சைக் காய்கறி ,கீரை வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல்!! போன்றவற்றால் மலச்சிக்கலை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்!! ★மலச்சிக்கலுக்குச் சிறந்த மூலிகைc"கடுக்காய் சூரணம்"ஆகும்!! ★தினசரி இரவு படுக்கும் முன்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் சூரணம் உண்டு வர, ஜீரண உறுப்புகளில் வாழ்வில் என்றுமே பிரச்சினை வராது!! ★ஆகவே மலச்சிக்

சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?

Image
 சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி? 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், டயாபடீஸ் எனப்படும் சர்க்கரை நோய் சாதாரணமாகிவிட்டது. பிறகு காலை பல்துலக்குதல் போல இன்சுலின் போட்டுக் கொள்வதும், மாத்திரைகளும் நம் தினசரி வாழ்வின் அங்கங்கள்தான். இதிலிருந்து முற்றிலும் விடுபடும் வழியைச் சொல்கிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்... டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்: வீட்டுக்கு விருந்தினர்கள் வருகிறார்கள். காபி தயாரிக்கும் ஆயத்தம் நடக்கிறது. அன்புடன் கேட்கிறார்கள்... ‘‘காபியில சுகர் சேர்க்கலாமா?’’ சர்க்கரை நோய் வந்த பிறகு, நமது வாழ்க்கைமுறையைச் சரியாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிற நாம், அது வருவதற்கு முன்பு நமது வாழ்க்கைமுறையைச் சரிபடுத்திக்கொண்டு அந்த நோயைத் தடுக்க ஏன் தயாராக இல்லை? 40 வயது ஆகிவிட்டால் நீரிழிவும் ரத்த அழுத்தமும் வருவது சகஜம் என்று நினைக்கிறார்கள். ‘‘ஆமாமா, சுகர், பி.பி எல்லாம் இருக்கு. வேலை டென்ஷன் பாருங்க!’’ என்கிறார்கள். நீரிழிவு நோயாளிகளுக்கென்று இப்போதெல்லாம் இனிப்புகளும் சாக்கலேட்டுகளும் பிரத்யேகமாகத் தயாராகின்றன. சர்க்கரை நோய் இப்போது இளைஞர்களுக்கும் ஏன் குழந்தைகளுக்கும்கூட வர ஆரம்பித்துவ

சர்க்கரை நோய் காரணங்கள் - தடுப்பு முறைகள் | neerilvu noi karanangal thaduppu muraigal

 சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும். சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே சர்க்கரை நோயை தடுத்து நிறுத்த சில விஷயங்களை செய்தால், இந்த சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற வயதினர் குறைந்தது வருடத்துக்கு ஒருமுறையேனும் ரத்த சர்க்கரை அளவு சரியான கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை பரிசோதனையின்மூலம் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக அதிக உடல் எடை கொண்டவர்கள், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக தாகம், அதிக சோர்வு, அதிக பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இவர்களெல்லாம் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என உறுதிபடுத்திக் க

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற உணவுகள்! foods for diabetics

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது  கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன. அதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம். கீழே சர்க்கரை நோயாளிகளுக்கான சில சிறப்பான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்ல

வெண்புள்ளி நோய்க்கு இயற்கை மருந்து !

வெண்புள்ளி நோயைசரி செய்ய தேவையான மூலிகைகள் 1. வேப்பம் கொழுந்து 2. மோர் (வீட்டில் தயாரித்தது) 3. கஸ்துரி மஞ்சள் வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும். உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம். உணவு பத்தியம்  தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவ

பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா. சுவாச கோளாறுகள் : பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். கல்லீரல் பிரச்சனைகள் : தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி : பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருக்கள் : உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்க