இந்த 17 வழிகளை பின்பற்றினால் வயிற்று வலி என்பது உங்கள் வாழ்க்கையிலேயே வராது
தலைவலியா? ஜலதோசமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். சமா? என நொடிக்கு ஒருமுறை டி.வி.க்களில் வரும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலடைய வைத்தாலும், உண்மையில் அது இரண்டுமே மிக மோசமானவை என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஆனால், அதைவிட மிக மோசமானது வயிற்று வலி. தலைவலி, ஜலதோசம் வந்தால்கூட எப்படியாவது சமாளித்துவிடலாம். ஆனால், வயிற்று வலி வந்துவிட்டால், நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் தொந்தரவு. வயிற்று வலியால் நாம் நெளிவதைக் கண்டு, நம் அருகில் இருப்பவர்கள், தர்மசங்கடத்தில் நம்மை விட மோசமாக நெளிவார்கள். சரி. அவ்வளவு மோசமான வயிற்று வலி வந்துவிட்டால், நாமே மருத்துவராகி, நாமே மருந்துகளை தேர்வு செய்துவிடக் கூடாது. நாமே மருத்துவரானால், நமக்கு நாமே சங்கு ஊதுகிறோம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக வயிற்று வலி, நெஞ்செரிச்சல் என வந்துவிட்டால், நாம் முதலில் தேடுவது கைவைத்தியம்தான். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, ஓமம் சாப்பிடுவது, வெந்தயம் விழுங்குவது என ம