வாத நோய் தீர்க்கும் மூலிகைச் செடி !
வாயுவானது உந்தியாகிய தொப்புளிலிருந்து உண்டாகி சிரசில் முட்டிப் பின்னர் தேகத்தில் சஞ்சரிக்கும். இதை தான் பிராணவாயு என்கின்றோம். வயிற்றில் இருந்துக் கொண்டு சிறுநீர்(மூத்திரம்), மலம் இவைகளை வெளித்தள்ளும் இயல்பு உடையது அபானவாயுவாகும். ஆகார ரஸத்தை நாடிகளின் மூலம் தேகமெங்கும் வியாபிக்கச் செய்வது வியானவாயுவாகும். ஆகாரத்தைச் சீரணம் செய்வது உதானவாயுவாகும். இதர வாயுக்களையெல்லாம் சமநிலையாக்குவதை சமானவாயு ஆகும். விக்கல், வாந்தி செய்தல் முதலான செயல்களைச் செய்வது நாகன் என்ற வாயுவாகும். கூர்மன் என்ற வாயு கண்களில் நின்று இமைத்தலைச் செய்கிறது. சிரிப்பு, கொட்டாவி இவைகளைச் கிரிகரன் என்ற வாயு உண்டாக்குகிறது. கோபத்தை ஏற்படுத்துவது தேவதத்தன் என்ற வாயுவாகும். தனஞ்சயன் என்று சொல்லப்படும் வாயு மண்டையுச்சியில் தங்கி நின்று சாகுங்(மரண)காலத்தில் தேகத்திலுள்ள வாயுக்கள் சென்ற பின்னரும் உடலில் 1/3(முக்கால்) சாமம் சூஷ்மமாக இருந்து வியர்வை, வீக்கம் இவைகளை உண்டாக்கிப் பின்னர் கபாலத்தின் வழியாக வெளியேறும். இடை என்ற நாடியானது வலதுகால் பெருவிரலில் ஆரம்பித்து இடது நாசியில் முடியும். பிங்கலை என்ற நாடியானது வலதுகா