Posts

Showing posts from June, 2019

வாத நோய் தீர்க்கும் மூலிகைச் செடி !

Image
வாயுவானது உந்தியாகிய தொப்புளிலிருந்து உண்டாகி      சிரசில் முட்டிப் பின்னர் தேகத்தில் சஞ்சரிக்கும். இதை தான் பிராணவாயு என்கின்றோம். வயிற்றில் இருந்துக் கொண்டு சிறுநீர்(மூத்திரம்), மலம் இவைகளை வெளித்தள்ளும் இயல்பு உடையது அபானவாயுவாகும். ஆகார ரஸத்தை  நாடிகளின் மூலம் தேகமெங்கும் வியாபிக்கச் செய்வது வியானவாயுவாகும். ஆகாரத்தைச் சீரணம் செய்வது உதானவாயுவாகும். இதர வாயுக்களையெல்லாம் சமநிலையாக்குவதை  சமானவாயு ஆகும். விக்கல், வாந்தி செய்தல் முதலான செயல்களைச் செய்வது நாகன் என்ற வாயுவாகும். கூர்மன் என்ற வாயு கண்களில் நின்று இமைத்தலைச் செய்கிறது. சிரிப்பு, கொட்டாவி இவைகளைச் கிரிகரன் என்ற வாயு உண்டாக்குகிறது. கோபத்தை ஏற்படுத்துவது தேவதத்தன் என்ற வாயுவாகும். தனஞ்சயன் என்று சொல்லப்படும் வாயு மண்டையுச்சியில் தங்கி நின்று சாகுங்(மரண)காலத்தில் தேகத்திலுள்ள வாயுக்கள் சென்ற பின்னரும் உடலில்    1/3(முக்கால்)  சாமம் சூஷ்மமாக இருந்து வியர்வை, வீக்கம் இவைகளை உண்டாக்கிப் பின்னர் கபாலத்தின் வழியாக வெளியேறும். இடை என்ற நாடியானது வலதுகால் பெருவிரலில் ஆரம்பித்து இடது நாசியில் முடியும். பிங்கலை என்ற நாடியானது வலதுகா

செல்வம் மற்றும் உடல்நலம் தரும் கணபதி ஹோமம் !

Image
கணபதி ஹோமம் ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள். நோய்கள், தொழில் தடங்கள்: குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும். கேது திசை: ஜாதகத்தில் கேது திசையில் இருப்பவகள் அக்கிரகத்தினால் உண்டாகும் பாதிப்பு குறைந்து நன்மைகள் உண்டாகும். திருமண தடை: திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், சொல்வ சொழிப்பும் வந்து சேரும். அக்னி ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும். கல்வி குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்க்கும். இறை வழி பாதை இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும். துர்மரணங்கள், விபத்துக்கள் ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும். தனசேர்க்கை நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்