ஊரங்கடால் வேலையை காட்டிய மன் மதர்கள்....! 23 லட்சம் ஒரே மாதத்தில் கர்பமாம்..!
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் வரும் காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திறன், ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான இடையூறுகளானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும். உலக அளவில் 114 குறைந்த மற