Posts

Showing posts from April, 2020

ஊரங்கடால் வேலையை காட்டிய மன் மதர்கள்....! 23 லட்சம் ஒரே மாதத்தில் கர்பமாம்..!

Image
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் தடைப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் நவீன கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் வரும் மாதங்களில் தேவையில்லாமல் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல்நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் வரும் காலத்தில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தங்களது குடும்பத்தை நடத்துவதற்கான திறன், ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. கொரோனாவால் ஏற்படும் பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான இடையூறுகளானது பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலை விளைவிக்கும். உலக அளவில் 114 குறைந்த மற

கூரை வீட்டுன்னாலும், கோடீஸ்வர நேர்த்தி (வீடியோ உள்ளே)

Image
ஒருவர் வசிக்கும் வீடு மழைக்கும், வெயிலுக்கும் மறைவு தரக்கூடிய இடம் மட்டுமல்ல. அவருடைய முன்னேற்றத்திலும், அவருடைய வாழ்க்கை வெற்றியிலும் கூட அந்த வீடு முக்கியப் பங்கு வகிக்கின்றது எனலாம். காரணம், அமைதி நிறைந்து நிற்கும் சுற்றுப்புறம் தான், நம்மை நிம்மதியாக யோசிக்க வைக்கும். கவலைகளை மறக்க வைக்கும். அடுத்த கட்டத்திற்கு நகர வைக்கும். 'எனக்கு மட்டும் ஒரு நல்ல வீடு இருந்திருந்தா, நான் எப்படி எல்லாம் இருந்திருப்பேன்' என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். இங்கு தன்னை மறந்து வேலை செய்யும் பலரது கனவுகளிலும் முக்கியமானதும் 'நல்ல வீடு கட்ட வேண்டும்' என்பது தான். அவ்வாறு கட்டிய தனது குடிசை வீட்டின் சுற்றுப்புத்தையும், அதன் உட்புற அமைப்பையும் ஒருவர் வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். தனது சக்திக்கு உட்பட்டு அவர் கட்டி வைத்திருக்கும் ஓலை வீடு காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. வீட்டின் சுற்றுப்புறம் முழுவதும் அழகாக சுத்தம் செய்யப்பட்டு செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. வாசலுக்கு வெளியே ஒரு மண்பானையில் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் அங்கு டிவி

கண்ணே கண்மணியே .வொர்க் ப்ரம் ஹோம்ல இருக்கீங்களா? கண்களை காத்திட இப்படி செய்யுங்க !!!

Image
நாம சாதாரண இருந்தாலே அதிக நேரம் கண் விழித்து கொட்ட கொட்ட கம்ப்யூட்டரையும் செல்போனையும் நோண்டுறதுல கில்லா டிங்க. இந்த லாக் டவுன்ல சும்மா இருப்பமா? அதிக நேரம் தொடர்ந்து கண் விழித்து டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் ஏற்படும் தற்காலிக பார்வை கோளாறை சரி செய்ய இப்படி செய்யுங்க ப்ளீஸ்..!!! மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய சூழலில், அவர்கள் செல்பேசி, கணினி, தொலைக்காட்சி என்று மின்னணுத் திரைகள் முன் கழிக்கும் நேரம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தத் திரைகளில் இருந்து வெளியாகும் அதிசக்தி நீல ஒளி அலைகளின் தாக்கம் கண்களில் அதிகரிக்கும் அபாயமும் கூடியிருக்கிறது. இதனால், பார்வைத்திறன் பாதிப்பு மட்டுமின்றி, மெலடோனின் சுரப்புக் குறைவால் சீரான தூக்கத்திலும் சீர்குலைவு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து, மன அழுத்தம், கவனக்குறைபாடு பிரச்சினை போன்றவை உண்டாகின்றன. மருத்துவ ஆய்வாளர்களின் கருத்துப்படி, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு பாதுகாப்பான மின்னணுத் திரை நேரம் 2 மணி நேரம்தான். ஆனால் இன்று பலரும் இதைப் போல பல மடங்கு நேரத்தை மின்னணு ஒளித்திரைகள் முன் கழிக்கின்றனர். அதனால், நம்மையு

இந்த ஒரு விஷயம் தெரந்தால் பெண்களுக்கான அந்த பிரச்னைகளை ஒரே நாளில் தீர்த்திடலாம்..!

Image
பெண்களுக்கெனபிரத்யேகமாக உள்ள உடல் உபாதைகளை தீர்த்திட இந்த சமயலறை பொருள் வெகுவாக பயன்படுகிறது. இத்தனை நாள் இது தெரியாமல் போயிடுச்சேன்னு நிச்சயம் இதை படித்தவுடன் வருத்தப்படாமல் இருக்க மாட்டீர்கள். மிக சுலபமான அதே சமயம் பெண்களுக்கென பிரத்யேகமான பிரச்னைகளை தீர்ப்பதில் கில் லாடி இந்த "இயற்கை மருத்துவ பொருள்". பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் மற்றும் டெலிவரி, அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு இந்த இயற்கை மருத்துவ பொருள் ஒரு வர பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது இயற்கையிலேயே கிடைக்க கூடியது. அது மட்டுமல்லாமல் இதை மிள எளிதாக பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதும் இல்லை. பக்காவான குணமாக்கும் மருத்துவ திறன் கொண்டது. அனைவருமே இதைப் பயன்படுத்தலாம். வயது பேதமின்றி பயன்படுவதால் இது ஒரு பாரபட்சமற்ற மருத்துவ நிவாரணி என்ற பெயரை பெற்றுள்ளது. வெளிநாட்டவர் உள் நாட்டவர் என அனைவருக்கும் ஏற்றது. பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎ

இந்தியாவில் ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனோ தொற்று ! ஊரடங்கு தளர்த்தலால் இந்த எண்ணிக்கை கூடும் அபாயம் !

Image
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 33050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1718 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1074 ஆக உயர்ந்துள்ளது. 8325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 9915 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 432 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில்

சற்றுமுன்: வட கொரிய அதிபர் கிம் உயிருடன் தான் இருக்கிறார். எழுந்திருக்கவோ, நடக்கவோ முடியாது..!

Image
உலகத்தையே தன் பக்கம் திரும்ப பார்க்க வைத்தவர் வடி கொரிய அதிபர் கிம். தற்பொழுது அவரை பற்றிய செய்திகள் தான் ட்ரெண்டிங்கில் ஓடிக கொண்டிருக்கிறது. அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஒரு தரப்பும், அவர் இறந்த சில நாட்கள் ஆகிவிட்டது என்று மற்றொரு தரப்பும் தகவல்களை பரப்பி கொண்டிருக்கின்றனர். ஆனால் சற்று முன் அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அது பற்றி விரிவாக காண்ப்போம். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், கிம் நலமுடன் இருக்கிறார் என்று, தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் கிம் ஜாங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும், ஆனால் அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் வட கொரிய தூதரக பண

சித்த மருத்துவத்தில், சிறு நீரக வியாதி, தோல் சுருக்கம் தொண்டை வலி, தொண்டை தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் இது ஒரு அருமருந்து !

Image
இந்த உப்பு இல்லாமல் சித்த மருத்துவமே இல்லை என்று சொல்லுமளவிற்கு இது மருத்துவத்தில் அதி சிறந்த பொருளாக உள்ளது. சாதாரண உப்பு தானே என்று இத்தனை நாள் நினைத்திருந்தால் அது மிக தவறு. அது எப்படி எல்லாம் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது என்னென்ன நோய்களுக்கு தீர்வாகிறது என்பதை அறிந்துகொள்வோம்.... இந்துப்பு அதன் பலன்களும் இந்துப்பு என்று அழைக்கப்படும் பாறை உப்பானது இமாலய உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் வெட்டி எடுக்கப்படுகிறது இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன மேலும் சித்தமருத்துவ தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது இதில் அடங்கியுள்ள சேர்மானங்கள் சோடியம் குளோரைடு பொட்டாசியம் குளோரைடு சோடியம் மாங்கனீஸ் இரும்பு துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்கள் வெவ்வேறு அளவுகளில் அடங்கியுள்ளன இந்து உப்பு பயன்படுத்தும் முறை சித்த மருத்துவத்தில் இந்துப்பை சிறு நீரக மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இதை நேரடியாக கடல் உப்புக்கு பதிலாக சாப்பாட்டில் சேர்த்து பயன்படுத்தலாம். நாம் வழக்கமாக சமையலுக்கு பயன்படுத்தும் கடல் உப்பு அதிக உவர்ப்பு

பிரசவம் முடிந்ததும் கண் மூடிய தாய் ! முலைப்பாலுக்கு அழுத குழந்தையைப் பார்த்து மருத்துவமனையே கதறல் !

Image
பிரித்தானியாவில் தமது முதல் குழந்தை பிறந்த அடுத்த நாள், இளம் தாயார் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. பிரித்தானியாவில் 29 வயதான இளம் தாயார் ஒருவர் தமது முதல் குழந்தை பிறந்த அடுத்த நாளே, கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபோசியா ஹனிஃப் என்பவரே தமது குழந்தையை கூட ஒருமுறை பார்க்காமல் மரணமடைந்தவர். மட்டுமின்றி ஃபோசியாவின் 29 ஆம் பிறந்தநாளில் அவர் மரணமடைந்துள்ளதும் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு தமது முதல் குழந்தையை கருவிலேயே இழந்த நிலையில், தற்போது தமது இரண்டாவது குழந்தைக்காக அவர் மிகுந்த கவனத்துடன் மருத்துவ சோதனைகளை நிறைவேற்றி வந்துள்ளார். அவ்வாறாக ஒருமுறை மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதன் அடுத்த நாள், பெரிய பாதிப்பு இல்லை என்றும், குடியிருப்புக்கு திர

ச ட்டி ஒடச்சிப்புட்டு இப்ப பீல் பண்ணி என்னம்ம பிரயோசம் அமலா பால் ! ரசிகர்கள் கி ண் ட ல் !

Image
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை அமலாபால். முதலில் தன்னை விட அதிக வயது வித்தியமுள்ள டைரக்டர் விஜய் திருமணம் செய்து கொண்டார். பெற்றோரை மீறி சினிமா நண்பர்கள் மூலம் அந்த திருமணம் நடந்து. அது ஆறு மாத காலம் கூட நீடிக்கவில்லை. உறவில் விரிசல் ஏற்பட விவாகரத்தில் முடிந்தது. அதற்கு ஒரு பிரபல நடிகர் தான் காரணம் என பெரும்பாலானோர் கிசு கிசு த்தனர்.  அதன் பிறகு அமலா பால் வேறு மாதிரி மாறிவிட்டார். சமீபகாலமாகவே வாழ்க்கைத் தத்துவங்களாக சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமலாபால். அதிலும் குறிப்பாக இரண்டாவது திருமணம் பற்றிய சர்ச்சைகளுக்குப் பிறகு ஆண்கள், பெண்கள் மற்றும் காதல் பற்றிய பதிவுகளை அதிகமாக அவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது. தற்போதும் அதே போன்றதொரு பதிவை அமலாபால் வெளியிட்டுள்ளார். ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தின் புகைப்படத்தோடு, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய தனது ஆதங்கத்தை இந்தப் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில், 'பெண் அடிமைத்தனத்தை அனுபவித்தாள், அவமானத்தை உணர்ந்தாள், பொருளாதாரத்தில் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டாள், எல்லாவற்றிற்கும் மேலாக, தொடர்ச்சியா

உனக்கு சில்க் ஸ்மிதா ன்னு நினைப்பா? ஸ்ரேயாவின் தீயாய் பரவும் படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பு !

Image
சினிமா மார்க்கெட் காலி ஆன பிறகு ஒரு வெள்ளைக் கார்ரை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரேயா. அவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி படம் மட்டுமே ஜொலித்தது. மற்ற படங்கள் அந்தளவிற்கு அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. மாறாக அவரது கவர்ச்சியில் ரசிகர்கள் மயங்கினர். மார்க்கெட் போன நிலையிலும் தமிழ் ரசிகர்களை அவர் கை விடுவதாக இல்லை. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ, கவர்ச்சி படங்கள் என வெளியிட்டு அவர்களை கிறங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்தாலும், ஹாயாக பால்கனியில் உட்கார்ந்து செ ம ஹா ட் போஸ் செல்பி படங்களை எடுத்து இன்ஸ்டாவில் உலவ விட்டிருக்கிறார். அந்த படங்கள் கவர்ச்சியில் தெறிக்கிறது. இந்த வயசிலும் இவ்வளவு இளமையா? கவர்ச்சியா? என ரசிகர்கள் ஜொள்ளி வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி

உங்களை சந்தித்தது கூட கிடையாது ஆனால் எனக்கு பெரிய இழப்பு ! பிரபல நடிகர் மரணத்தால் துக்கமடைந்த சாய்பல்லவி ட்வீட் !

Image
அம்மா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து போக, அவரது இறுதி சடங்குக்கு கூட போக முடியாத நிலைமையில் இருந்த அந்த பிரபல நடிகர், அந்த துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் இறந்தே போனார். பிரபல நடிகராக இருந்தும் பெற்ற தாய்க்கு இறுதி காரியம் செய்ய முடியாமல் போன வெளிப்பாடா அது.? இதோ ஒரு துயர சம்பவம்..! பாலிவுட் நடிகர் இர்பான் கான் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53. இரண்டு வருடங்கள் முன்பிருந்தே புற்றுநோயுடன் போராடி வந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்று சில மாதங்கள் முன்பு தான் இந்தியா திருப்பினார். அவருக்கு சில தினங்கள் முன்பு உடல்நிலை மிக மோசம் அடைந்த நிலையில் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவி ட்விட்டரில் இர்பான் கான் பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார். "நான் உங்களை நேரில் சந்தித்தது கூட இல்லை சார். ஆனால் இந்த இழப்பு எனது சொந்த இழப்பாக உணர்கிறேன். உங்கள் நடிப்பு மற்றும் சினி

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?

Image
இந்தியாவில் பரவி வரும் கொள்ளை  நோ ய் காரணமாக ஊரெங்கும் மக்கள் வீட்டை விட்டு வெளிவராத அளவுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற த ஊரடங்கு காலத்திலும் பல்வேறு பகுதிகளில் சுவாரசியமான சம்பவங்களும் அங்கங்கே அரங்கேறித்தான் வருகிறது. அது போன்று சுவராஷ்யமான  சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.  ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்துகொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் அதிக சிக்கல் ஏற்பட்டது. இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்தார். மேலும், இருவரும் திருமணம் செய்ததன் ஆதாரமாக விளங்கும் சான்றிதழை பெற ஹூடு மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சான்றிதழ் கிடைக்கவில்லை. இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின்

நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் மனமுடைந்த மருத்துவர் செய்த செயல் ! உலகையே ஒரு நிமிடத்தில் அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம் !

Image
மருத்துவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் இதுதான். நோயாளிகளை முடிந்தவரையில் காப்பாற்ற முயற்சிப்பார்கள். சில நேரங்களில் அவர்களை மீறி நோயாளிகளின் உடல் ஒத்துழைக்காத்தால் மர ண ம் ஏற்படும். சில நேரங்களில் போதிய வாய்ப்பு இருந்தும், நோய் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு கண்ணெதிரேயே உயிரி ழப்பு ஏற்படும்... இதனால் மருத்துவர்கள் அதிக மன அழுத்த த்தில் சிக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு மருத்துருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை இது. என்னதான் அடுத்த நோயாளிகளை கவனிக்க சென்றாலும், சில சம்பவங்களை மறக்க இயலாது. அதுபோலதான் அமெரிக்காவிலும் ஒரு சம்பவ ம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இதன் பாதிப்பானது அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கொரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொ லை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்று அவர்

சைக்கிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு கொடுத்த 3-ம் வகுப்பு மாணவனுக்கு குவியும் பாராட்டு

Image
சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மற்றொரு புறம் கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என பலர் போராடி வருகின்றனர். மேலும் பாதிப்பை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் 3-ம் வகுப்பு மாணவன்சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கியுள்ளான். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக பணிபுரிபவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயஸ்ரீவர்மன் , தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டாக உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார் ஜெயஸ்ரீவர்மன். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நில

பெருங்குடல் புற்று நோய் வாரமல் இருக்கு இது ஒரு அருமையான இயற்கை மருந்து தெரியுமா?

Image
அன்றாடம் நாம் உண்ணும் உணவு வகைகளால் தான் நமக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனேவ நாம் உண்ணும் உணவுகளில் நாம் கவனம் செலுத்தினால் மட்டும் போதும் நம்மை எந்த விதமான நோய்களும் தாக்க வாய்ப்பில்லை. இன்றைய நவீன காலத்தில் நாம் நாகரிகம் என்று நினைத்து அதிகஅளவில் பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட்டு பலவகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இந்த பாஸ்ட்புட் உணவுகள் நமது உடல் பருமனை அதிகரிப்பதோடு உடலில் பல வகையான நோய்களையும் நமக்கு தந்து விடுகிறது. இந்தவகையான உணவுகளை நாம் உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டு காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: நாம் அன்றாடம் 50 கிராம் அல்லியம் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பில் நாம் எந்தவகையான வழிமுறைகளை பின்பற்றினால் பெருங்குடல் புற்று நோய் மற்றும் பல வகையான நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனை இருந்து படித்தறியலாம். பூண்டு :   பூண்டில் பல வகையான சல்பர் கலவைகளை கொண்டு

என் மனைவியின் கருத்து சரிதான்... இதை மத பிரச்னையாக்க வேண்டாம்.. இதுவரை வாய் திறக்காத சூர்யா அறிக்கை மூலம் பதிலடி..!!!

Image
ஜோதிகா என்றோ ஒரு விழாவில் கூறிய கருத்துக்கு இன்று வீ ட டங்கு காலத்தில் ஊதி பெரியதாக்கி அதை மத பிரச்னையாக பிரசாரம் செய்யுமளவுக்கு மலிவு அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில். சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது. இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. நடிகர் சூர்யா அறிக்கை  'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 'மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்க

கரோ னா.. தொற்று... டெங்கு காய்ச்சல் பறவை காய்ச்சல்.. எந்த காய்ச்சலா இருந்தாலும்... இந்த ஒரு பானம் போதும்.. பறந்து போயிடும்..!

Image
 டெங்கு, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா, மற்றும் இப்பொழுது பரவி வரும் கரோனா காய்ச்சல் வரை அனைத்திற்கும் நம்முடைய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் உடலில் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை. நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும். நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறி

இதையெல்லாம் தினமும் செய்தால் உங்களுக்கு எந்தக் கிருமியும் தொற்றாது ..!

Image
நீங்கள் உங்களுடைய இரண்டு கைகளிலும் சுத்தமான தேங்காய் எண்ணையை தடவிக் கொண்டீர்கள் என்றால் எந்த கிருமியும் தொற்றாது ... நீங்கள் வெளியே செல்லும் போது இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை நன்றாக தடவிக் கொண்டு செல்லுங்கள் . கிருமிகள் தொற்றாது ... காலை மாலை இரண்டு வேளையும் நீராவி பிடியுங்கள் ... இளஞ்சூடான உப்பு நீரினால் தினமும் வாய் கொப்புளியுங்கள் ( gargling ) Covid19 Prevention: Prevention is always better than cure NHS doctor's advice on how to protect against #covid19. You can prevent from any virus  damaging the lungs. Listen to UK's NHS doctor's advice. Don't wait till you get infected. Prevent infection using above method. "ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக்கலை. வேது (ஆவி )பிடித்தல். # இன்று நேச்ரோபதி ஸ்டீம் பாத் எனப்படும் வேது பிடிக்கும் முறை இன்றும் நமது கிராம மக்களின் வழக்கத்திலுள்ள சித்தர்களின் தமிழர் வைத்திய முறையே. # நொச்சி கற்பூரவள்ளி ஓமம் வாதரச இலைகளுடன் கொதிக்க வைத்த நீரில் வேது பிடிப்பார்கள் இலைகள் இல்லாத நேரத்தில் சிறிது செங்கல் கல

வயிறு சம்பந்த்தான அனைத்து பிரச்னைகளுக்கும் இது ஒன்னே போதும் ! உங்க வீட்டு சமையல் அறையில் ரொம்ப சுலபமா கிடைக்கும். அது என்ன தெரியுமா?

Image
அந்தக்காலத்தில் உடல்நிலை சரியில்லை என்றால் நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்து விடுவார்கள். அதற்கு கை வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என சில பெயர்களை வைத்தார்கள். சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவைதான். அதனால்தான் அதை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். இன்று மல்டி ப்ளக்ஸ் ஹாஸ்பிடல்கள், அதி நவீன வைத்தியம் என பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் கூட சில வியாதிகள் சரியாவதில்லை. அதுவே கை மருந்து, அல்லது நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் செய்து கொண்டால் 48 நாட்களில் குணமாகி, அதிசயிக்க வைக்கும். பல பேருக்கு இதுபோன்று நிகழ்ந்துள்ளது. அப்படி பாட்டி வைத்தியத்தில் வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து, சீரான குடல் இயக்கத்திற்கு வலி வகுக்கிறது ஒரு உணவுப் பொருள். அதன் பெயர் சொல்லி தெரிய வேண்டுமா என்ன? “நமது உணவே மருந்து! நமது மருந்தே உணவு” என்பது நமது சித்த மருத்துவத்தின் உண்மையான சித்தாந்தமாகும். அதனடிப்படையில் நமது நாட்டின் பூர்வீக மூலிகைகள் பல நமது அன்றாட உணவில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று தான் வெந்தயம். இந்த வெந்தயம

மசாலா பொருளா இருந்தாலும், இதுக்குள்ள இத்தனை மருத்துவ குணங்களா? நம்பவே முடியலங்க..!

Image
 இது கூட தெரியாம இத்தனை நாளு இருந்திருக்கோமேன்னு நினைக்கும் போது இலேசா கெதக்குன்னு இருக்கு. மசாலா பொருளா இருந்தாலும், இதுக்குள்ள இத்தனை மருத்துவ குணங்களா? நம்பவே முடியலங்க..! ஏ லக்காய் (Elettaria Cardamomum)   இந்திய உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மசாலா பொருளாகும். ஏலக்காய் தான் உலகிலே 3 வது விலையுயர்ந்த மசாலா பொருள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் உண்மை.   ஏலக்காய் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் உலகளவில் இது டைமண்ட்க்கு(Diamond) நிகரானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது ஏலக்காய். குங்குமப் பூ மற்றும் வெண்ணிலாவுக்கு அடுத்த படியாக இந்த ஏலக்காய் தான் விலையுயர்ந்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசாலா பொருள் உலகளவில் மசாலா பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் அமெரிக்காவில் உள்ள கோட் மாலா என்ற நகரத்தில் தான் ஏலக்காய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் இந்த ஏலக்காயின் பூர்விகம் நமது இந்திய கண்டம் என்பது தான் உண்மை.  நாம் தினமும் குடிக்கும் காபி, டீ-யில் இந்த ஏலக்காய்