நீண்ட ஆயுள் தரும் சோற்றுக் கற்றாழை
நீண்ட ஆயுள் பெற வேண்டுமா?1.சோற்றுக் கற்றாழை:இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால் கண் பார்வை கூர்மை பெறும். நீண்ட ஆயுள் பெற சோற்றுக் கற்றாழை நரை, திரை நீங்கி இளமையான தோற்றம் உண்டாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவையாகும்.2. மன வேதனை மாறி தெளிவு பெற:தினமும் காலையில் குளித்து முடித்த பின்னர் சிறிதளவு எள்ளை எடுத்து சாப்பிட்டு வந்தால் மன வேதனை, உடல் வேதனை நீங்கும்.எள்ளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் இருக்கின்றன. துருக்கி நாட்டு போர் வீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன் எள்ளினை ஒரு பையில் போட்டு தங்களுடன் எடுத்துச் செல்வார்களாம். ஒரு வேளை தாங்கள் போரில் தோற்றுப் போய் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டால் சிறையில் இந்த எள்ளினை சாப்பிடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் மற்ற கைதிகளை விட வெகு நாட்கள் மன வேதனை, உடல் வேதனை இன்றி உயிருடன் இருந்திருக்கிறார்கள். எள்ளின் பூவினை எட