Posts

Showing posts from January, 2016

நீண்ட ஆயுள் தரும் சோற்றுக் கற்றாழை

Image
நீண்ட ஆயுள் பெற வேண்டுமா?1.சோற்றுக் கற்றாழை:இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால் கண் பார்வை கூர்மை பெறும். நீண்ட ஆயுள் பெற சோற்றுக் கற்றாழை நரை, திரை நீங்கி இளமையான தோற்றம் உண்டாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவையாகும்.2. மன வேதனை மாறி தெளிவு பெற:தினமும் காலையில் குளித்து முடித்த பின்னர் சிறிதளவு எள்ளை எடுத்து சாப்பிட்டு வந்தால் மன வேதனை, உடல் வேதனை நீங்கும்.எள்ளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் இருக்கின்றன. துருக்கி நாட்டு போர் வீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன் எள்ளினை ஒரு பையில் போட்டு தங்களுடன் எடுத்துச் செல்வார்களாம். ஒரு வேளை தாங்கள் போரில் தோற்றுப் போய் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டால் சிறையில் இந்த எள்ளினை சாப்பிடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் மற்ற கைதிகளை விட வெகு நாட்கள் மன வேதனை, உடல் வேதனை இன்றி உயிருடன் இருந்திருக்கிறார்கள். எள்ளின் பூவினை எட

10 பாரம்பரிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !

Image
பாரம்பரிய இயற்கை மருத்துவம்..! இயற்கை மருத்துவம் மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும். ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும். வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமா கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும். வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும். புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும். தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும். அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும். மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

டான்சில் பிரச்னை தீர (தொண்டையில் சதை வளர்ச்சி)

Image
தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள். டான்சில் சதை வளர்ச்சி  இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் நோய் இதை நீக்க எளிய சிகிச்சை காண்போமா? ஒரு துண்டு பப்பாளிக்காயை அம்மியில் நசுக்கிச் சாறு எடுக்கவும். ஒரு சிறிய கரண்டி அளவு சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊற்றித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும். மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு மேற்படிச் சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம். இந்த முறையில் தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி / டான்சில் பிரச்னை யை சரி செய்யலாம்.

செரிமான கோளாறு சரி செய்யும் சீரகம்

Image
செரிமானக் கோளாறு பிரச்னை தீர இயற்கை வைத்தியம் பசியின்மை - ருசியின்மை - புளித்த ஏப்பம் - நெஞ்செரிச்சல் - வயிற்று உப்புசம். இந்தக் கோளாறுகள் இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வியாதி. இது முற்றினால் வயிற்றுப்புண் (அல்சர்) ஏற்படும். அஜீரண கோளாறு இதற்கு எளிமையான மருந்து சீரகம். சீராக உள் உறுப்புகளைக் காப்பதால் இதற்குச் சீரகம் என்ற காரணப்பெயர். நூறு கிராம சீரகத்தை மண்சட்டியில் காப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும். அதனை நன்கு பொடி செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.

எலும்பு முறிவு, இரத்தக் கட்டுக்கு பாரம்பரிய வைத்தியம்

Image
இது நாகரீக உலகம். எனவே வீட்டில் கழிப்பறை, குளியல் அறை வரை வழவழப்பான மொசைக் தரை. இது காலத்தின் கட்டாயம். இதன் மறுபக்கம் முதியோரும், குழந்தைகளும் அடிக்கடி வழுக்கி விழுவது. எலும்பு முறிவு குணமாக இதற்குப் பெரிய அளவில் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் என மொசைக் தரைச் செலவுடன் போட்டியிடும் மருத்துவச்செலவு. எலும்பு முறிவு இன்றி நரம்பு பிசகுதல், தசை பிறழ்தல், ரத்தக்கட்டு போன்றமைக்கு எளிமையான மருத்துவம் காண்போமா? ஒரு கைப்பிடி அளவு நெல்லை மண்சட்டியில் இட்டு கருகும் வரை வறுக்கவும். பின்பு நைசாகப் பொடிக்கவும். காப்பித்தூள் கலரில் பொடி இருக்கும். சாதம் வடித்த சூடான கஞ்சியில் சிறிது எடுத்து மேற்படிப் பொடியை அதில் கலக்கவும். சேறு பதத்தில் கலந்து மிதமானச் சூட்டில் பற்றுப் போடவும். அரிசி கழுவிய கழுநீரில் புளிய இலை - ஒதியன் இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மறுநாள் அதை சூடு செய்து பற்றுப்போட்டதை நன்கு கழுவவும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும்.

நரம்பு சிலந்தி குணமாக நாட்டு வைத்தியம்

கெண்டைக்காலில் முதலில் கொப்புளம் ஏற்படும். பின்னர் புண்ணாகி நீர் வடியும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் மீண்டும், மீண்டும் தலைகாட்டும். காலே நிறம் மாறிக் கருத்துவிடும். வில்லங்கமான சரும வியாதி இது. குழந்தைகளுக்கு வந்தால் 'கால்கடுவன்' என்று பெயர். பெரியவர்களுக்கு வந்தால் நரம்புச் சிலந்தி என்று பெயர். இது நீர்பட்ட இடமெல்லாம் பரவும். இதற்கு அற்புத மருத்துவம் காண்போமா? சுடுசோற்றில் புளித்தத் தயிர்விட்டுப் பிசைந்து மிதமான சூட்டில் புண்மீது அப்பவும். அதன் மீது பூவரசன் இலையை ஒட்டி நன்கு கட்டவும். மறுநாள் வெந்நீர் ஊற்றிப் புண்ணை நன்கு கழுவவும். மேலே உள்ள அழுக்குகள் நீங்கிப்புண் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மீது நன்கு கனிந்த பப்பாளிப்பழத்தைப் பிசைந்து அப்பவும். அதன் மீது வெற்றிலையை ஒட்டிக்கட்டவும். உள்ளே உள்ள துர்நீர் வடிந்து வீக்கம் குறையும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும். மீண்டும் வராது.

மூட்டு வலி நீக்கும் முடக்கற்றான் இலை

முழங்கால் முழுங்கைகளில் அடிக்கடி வலி ஏற்படும், நீட்டவோ மடக்கவோ, அதிக சிரமம்-வலி உயிர்போகும். எந்தந்த தைலம் தேய்த்தாலும் சிறிது நேரம் தான் கேட்கும் பின் முன்னிலையிலும் அதிகமான வலி. இதற்கு முடக்கற்றான் நல்ல மருந்து. முடக்குவாதம் போக்கும் மூலி இது. எனவே முடக்கு அற்றான் என்ற காரணப்பெயர். இந்த இலையை கைப்பிடி அளவு 4 மிளகாய் வற்றல் சிறிது உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிறிது அனைத்தையும் வறுத்து உப்பு, புளி சேர்த்து சாப்பிட்டுவர வலி நீக்கும். இந்த கீரையை கைப்பிடி அளவு 1 டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும். இந்த கீரையுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்க வைக்க வைத்து மேல் பூச்சாகவும் உபயோகிக்கலாம். புழுங்கல் அரிசி சிறிது வெந்தயம் முடக்கு அற்றான் இலை அனைத்தையும் முதல் நாள் அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்க்கலாம்.வாரம் ஒரு முறை முடக்கு அற்றான் இலையை உணவோடு உண்டு வந்தால் முடக்குவாதம் மெல்ல, மெல்ல விலகும்.

மஞ்சள் காமாலை, பித்தபை நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

"கையான் தகரை", இதைக் கரிசலாண்கண்ணி என்றும் கூறுவர். நீர் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும். சொரசொரப்பான இலையும் வெள்ளைப் பூக்களும் கொண்டது இது கல்லீரல், பித்தப்பை நோய்களைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை வந்தவர்கள் கீழாநெல்லிச் சாற்றுடன் இதன் சாற்றையும் அருந்திவர நல்ல பசி எடுக்கும். துரித நிவாரணம் கிட்டும். இதனால் பல் துலக்கினால் ஈறுகள் பலப்படும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் அகலும். உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாத போது தொண்டையில் கசப்பும், குமட்டலும் இருக்கும். இந்த இலையை அடிநாக்கில் சுவை மொட்டுகள் மீது அழுத்தித் தேய்த்து வர சுரப்பிகள் நன்கு வேலை செய்து கசப்பு மாறும். தொண்டையில் உள்ள கோழையும் வெளியேறும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும். சாற்றை நேரடியாகத் தலையில் தேய்த்துக் குளிக்க மூளைக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். நல்ல உறக்கம் வரும்.

மார்புச் சளி நீங்க கல்யாண முருங்கை

மார்புச் சளியால் அவதிப்படும்போது மூச்சுத்திணறல்-லேசாய் காய்ச்சல், குளிர் இருமல் போன்றவையும் கூட்டணி அமைத்து வாட்டும். இதற்குச் சிறந்த நிவாரணி கல்யாண முருங்கை. இது மரவகையைச் சார்ந்தது. சிவப்பு நிற பூக்களும், முருங்கைக்காய் போன்ற காய்களும் கொண்ட கிளைகளில் முள் உண்டு. எனவே முள் முருங்கை என்ற பெயரும் உண்டு. இதன் இலையை நசுக்கி இரண்டு சங்கு சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட சளி எளிதில் வெளியேறும். இந்தச் சாற்றில் பழுக்கக் காயவைத்த இரும்புக்கரண்டியை முக்கிக் கொடுத்தால் கூடுதல் நிவாரணம். அப்போது சற்று இரும்புச்சத்து சேர்கிறது. எனவேதான் இந்த ஏற்பாடு. திருஷ்டி - பயந்த குணம் போகும் என்று மறைமுகமாகக் கூறுவார்கள் பெரியவர்கள். ஊறவைத்தப் புழுங்கல் அரிசி ஒரு கைப்பிடி இந்த இலை கைப்பிடி அளவு இவை இரண்டையும் மசிய அரைத்து உப்பு - மிளகு - சீரகம் தட்டிப் போட்டு அடை சுட்டு சாப்பிட பெரியவர்களுக்கு சளி எளிதில் வெளியேறும். நன்கு பசி எடுக்கும்.

மூட்டு வாதம், கீழ் வாதம் நீங்க இயற்கை வைத்தியம்

வாயுவினால் பல தொல்லைகள். இதில் மூட்டு வாதம் எனும் கீல்வாதம் மிகவும் தொல்லை கொடுக்கக்கூடியது. கை கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. வலி உயிர் போகும். இதற்கு சிறந்த நிவாரணி.         வாத நாராயணன்!          ஆக்கல் பிரமன் - அழித்தல் சிவன் - காத்தல் நாராயணன். வாத நோயிலிருந்து நம்மைக் காப்பதால் இந்தக் காரணப்பெயர். இது மர வகையைச் சேர்ந்தது. இந்தக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வாதநோய் முற்றிலும் குணமாகும். மேலும் வீக்கம் இருந்தால் இந்த இலையை வெந்நீரில் இட்டு நன்கு கொதித்த பின் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும். இந்த இலையை வதக்கியும் ஒத்தடம் கொடுக்கலாம். இலையை அரைத்து சூடு செய்தும் பற்றுப்போடலாம்.

ஒவ்வாமை போக்க அற்புத நிவாரணி

ஒவ்வாமைக்கு அற்புத நிவாரணி மிளகு. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. எனவேதான் விஷக்கடிக்கு மிளகு மந்திரித்துக் கொடுப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.  மிளகை அரைத்துச் சூடு செய்து பற்றுப் போடத் தலைவி - மூட்டு வலி நீங்கும். மிளகையும் ஜீனியையும் கருக்கிக் கஷாயம் வைத்து சாப்பிட உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மிளகை ஊசியில் கோர்த்து விளக்கில் காட்டி அந்தப் புகையை மூக்கில் இழுக்க மண்டையில் நீர்க்கட்டு (சைனஸ்) நீங்கும். மிளகைப் பசும்பால் விட்டு அரைத்து சூடு செய்து தலையில் தேய்த்து தலைமுழுகி வர தூக்கமின்மை, மனஅழுத்தம், தலைபாரம், உற்சாகமின்மை அகலும். எனவேதான் துக்க வீட்டில் மூன்றாம் நாள் அன்று ரத்த சம்மந்தம் உடைய நெருங்கிய உறவுகள் மிளகுப்பால் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்று சம்பிரதாயம் ஏற்படுத்தினர் நம் முன்னோர். அத்துடன் மிளகுப் பொடி - மிளகு ரசம், மிளகுக் குழம்பு செய்து சாப்பிட உடல்நலம் சிறக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும் இயற்கை பொருட்கள்

பொதுவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் தான் பல்வேறு நோய்களின் தாக்குதல். அப்படிப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும் அற்புத நிவாரணி நெல்லிக்காய். எனவே தான் ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கினான். ஒரு ஆப்பிளை விட ஒரு நெல்லிக்காயில் சத்து அதிகம். எனவேதான் ஏழைகளின் ஆப்பிள் என்று இதற்குப் பெயர். நெல்லிக்காய் லேகியம் மிகச் சிறந்த மருந்து. இது காயகல்ய மூலியை. அதாவது எவ்வளவு நாட்கள் ஆனாலும் இதன் குணம் மாறாது. இதனை வற்றலாகக் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கருப்பட்டி தேன் விட்டு லேகியமாகக் கிளறி சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஊறுகாய் துவையல், பச்சடி செய்து சாப்பிடலாம். நெல்லிவற்றலும் மஞ்சலும் சேர்த்து சூடு செய்து நெஞ்சு முகம் கழுத்தில் பற்றுப் போடசளி, சைனஸ், மூச்சுத் திணறல் குணமாகும். இந்த வற்றலை ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர சூடு நீங்கி கூந்தல் செழித்து வளரும். தலையில் அழுக்கு பொடுகு பேன் நீங்கும்.

உடல் சூட்டால் வரும் வயிற்று வலி நீங்க

 உஷ்ணத்தால் வயிறு வெந்து புண் ஏற்படும்போது வயிற்றுவலி - பசி இன்மை, செரிமானக் கோளாறு எனப் பல உபாதைகள். வயிற்றுப் புண்ணுக்கு அற்புத நிவாரணி வெந்தயம். வேக்காளத்தை நீக்கும். அயன் சத்து நிரம்பியது. எனவே வெந்தயம் என்ற காரணப் பெயர். வெந்தயத்தைச் சற்றே வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதன்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மட்டுப்படும். பச்சரிசி நெய் வெந்தயம் பூண்டு தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி செய்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வயிற்று வலி நீங்கும். இதை எல்லோருமே சாப்பிடலாம். உளுந்து சேர்க்காது வெந்தய தோசை செய்து சாப்பிடலாம். இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நம்மை நெருங்காது.   மேலும் வெந்தயத்தை முதல்நாள் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலை முழுகி வர மூளை குளிர்ச்சி அடையும். பொடுகு மறையும். இதைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

நல வாழ்வு தரும் வாழை

 நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை இலை சிறுநீர் பெருக்கி. அத்துடன் உடலில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவேதான் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை விளக்கெண்ணெய் தடவிய வாழை இலையில் படுக்க வைக்கிறோம். தற்போதைய மூலிகைக் குளியல் மருத்துவ முறையிலும் வாழை இலை பயன்படுகிறது. பண்டைய நாட்களில் நம் முன்னோர் வாழை இலையில் தான் உணவு அருந்துவது வழக்கம். சூடான உணவை இலையில் வைக்கும்போது இலை சற்றே வெந்து அதன் மருத்துவகுணம் உணவில் கலந்து விடும். எனவேதான் பண்டிகை விரதம் போன்ற நாட்களில் கட்டாயம் வாழை இலையில் சாப்பிடுகிறோம். அதோடு படையல் செய்த இலையை அடுத்தவர்க்குக் கொடுக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களே சாப்பிட வேண்டும் என மறைமுகக் கட்டுப்பாடுகள். எனவே சூடான உணவை இலையில் பொதித்து சாப்பிட்டு வர பல்வேறு வியாதிகள் குணமாகும். சிறுகுழந்தைகளுக்கு வாழை இலையைக் குடிநீராக்

மலச்சிக்கல் பிரச்னை தீர இயற்கை வைத்தியம்

மனிதனின் எதிரிகள் இரண்டு, ஒன்று மனச்சிக்கல், இரண்டு மலச்சிக்கல். பலவித நோய்களுக்கும் காரணம் மலச்சிக்கலே. இதற்கு அற்புத நிவாரணி கடுக்காய். திப்பிலி - சுக்கு - கடுக்காய்  இணைந்த சூரணம் மிகவும் சக்தி வாய்ந்தது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என நம்முன்னோர் கூறி இருக்கின்றனர். கடுக்காய் கஷாயம் அல்லது பொடியை இரவு சாப்பிட்டால் காலையில் எளிதாக கழிவுகள் வெளியேறும். குடல் சுத்தமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட சேற்றுப்புண் குணமாகும். இதை தேங்காய் எண்ணெய் சேர்த்துத் காய்ச்சித் தலைக்குத் தடவி வர முடி உதிர்தல் குறையும்.

ஆறாத வயிற்றுப் புண் குணமடைய இயற்கை வைத்தியம்

அறு சுவையும் சமச்சீர் அளவில் அமைந்தால் தான் நல்ல ஆரோக்கியம் கிட்டும். அதை நாம் தற்போது மறந்து விட்டோம். முக்கியமாக துவர்ப்பு உணவை தவிர்த்து விட்டோம். அதன் காரணமாக அனைவரும் குடற்புண், இரைப்பைப் புண் என்று மருத்துவரிடம் ஓடும் நிலை. இது குழந்தைகள் - பெரியோர் -முதியோர் என எல்லாத் தரப்பினரையும் ஆட்டும்விக்கும் நோய். இதற்கு அற்புத நிவாரணி வாழைப்பூ.          இதைப் பருப்புடன் சேர்த்துப் பொரியல், கூட்டு அல்லது துவையல் என அடிக்கடி சாப்பிட்டு வர வயிற்றுப் புண்ணைத் தவிர்க்கலாம். வாழைப்பூவின் உள் மொட்டைக் குழந்தைகளுக்கு பாட்டிகள் பச்சையாக உண்ணக் கொடுப்பது வழக்கம். குழந்தைகளும் அதனை விரும்பிச் சாப்பிடுவர். தற்போது இந்தப் பழக்கங்களைக் கைவிட்டதால வந்த விளைவே மேற்படி நோய்கள்.         இதை இடித்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்கள் மட்டுப்படும். வாழையின் மருத்துவக் குணத்தை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் நீத்தார் நினைவுச் சடங்குகளின் போது வாழையிலை, காய்,பூ,கனி, தண்டு அனைத்தையும் பயன்படுத்தி வந்தார்கள்.

உயர் இரத்த அழுத்தம் நீங்க இயற்கை வைத்தியம்

தற்கால வாழ்வில் அதிக பரபரப்பு. அதன் காரணமாக படபடப்பு (டென்ஷன்) உயர் ரத்த அழுத்தம். முடிவில் இதயத்தில் பிரச்சனை. அதிக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதய நோயை எளிதில் கட்டுப்படுத்தும் எளிய மருந்து 'செம்பருத்தி'. இந்தப் பூவை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்திவர இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கிடைக்கும்போது சேகரித்து உலர்த்தியும் உபயோகிக்கலாம். இதன் இலையை அரைத்து தலைக்குத் தேய்த்துவர மூளை குளிர்ச்சி அடையும். முடி செழித்து வளரும். பூக்களைத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வரக் கூடுதல் நன்மை கிடைக்கும். கைப்பிடி அளவு ஊறவைத்தப் புழுங்கல் அரிசி, மேற்படி இலை பிடி, அளவு, உப்பு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடல் குடல் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் தீரும்.

குடல் சூடு, உடல் எரிச்சல் தனிய வீட்டு மருத்துவம் !

கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் வரும் விளைவுகளும் அதிகம். உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.       இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும். இதை இரண்டாகக் கீறி உள்ளே வெந்தயத்தைத் தூவி இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். மூன்றாம் நாள் வெந்தயம் முளைத்து விடும். அதை உலர வைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

காய்ச்சலுக்கு பிறகு வரும் இருமல் நீங்க

காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை. முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.       தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.         மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.          இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன்

நெஞ்சு சளி நீங்க இயற்கை வைத்தியம்

Image
வராத வியாதி வந்தால் கூட தாக்குபிடிக்கலாம். இந்த ஒரு வாரம் மட்டும் வந்து போகும் சளி தொல்லையை மட்டும் தாங்கவே முடியாது. அந்தளவிற்கு ஆட்டுவிக்கும். மேலும் "சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல" என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல். இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான். இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.       நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கி

சூடு தணிக்க இயற்கை வைத்தியம்

உடலில் சூடு தணிக்க இயற்கை வைத்தியம். உடம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.         இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும், இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும். இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கிரீன் காபி

Image
நீரிழவு நோயின் வீரியத்தைக் கட்டுபடுத்துகிறது "கிரீன் காபி". வறுக்காமல் காப்பி கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பச்சை நிற காப்பி - Green Coffee யில், நீரிழவு நோயை இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வரும் குளோ ரோஜினிக் ஆசிட் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கிரீன் காபி இது இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது என்கிறார்கள். இதே போல ஆப்பிள், செரீப்பழம், பிளம்ஸ் மற்றும் பிறவகை பழங்கள், காய்கறிகளில் இந்த குளோரோஜினிக் ஆசிட் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே நாம் இவற்றை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு  வருவதைத் தவிர்க்கலாம்.

முகம் பொலிவு பெற கேரட், பீன்ஸ்

Image
முகம் பொலிவு பெற கேரட், பீன்ஸ், செலரி போன்றவற்றைப் தினமும் உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் முதுமை எட்டிப் பார்க்காது. முகம் அழகாக காட்சி அளிக்கும். எப்பொழுதும் புத்துணர்வுடன் இருக்கும். முகம் பொலிவு பெற டிப்ஸ் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனம் நன்றாக இருந்தால் புன்னகை முகத் தோடு அனைவரையும் வசீகரிக்கும் முகமாக அழகாக மாறி விடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டுமே. எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்த்தால் தானாகவே முகம் வசீகரிகமாகும். இவை அனைத்தையும் விட முக்கியமானது தினசரி சராசரியாக 7 மணி நேரம் தூங்குவது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் மு கம் அழகாகும் . போதுமான ஓய்வு, மன அழுத்தம் இல்லாமை, போஷாக்கான உணவுகள், சரியான தூக்கம் இவைகள் இருந்தால் இயற்கையாகவே "முகம் பொலிவு" பெற்றுவிடும். முகம் பொலிவு பெற இதையும் செய்து பார்க்கலாம். ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும்.  மேலும் அ

ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள்

Image
ஆண்மை குறைவதற்கு என்ன காரணம்? எதனால் இது ஏற்படுகிறது? இதற்கு தீர்வு உண்டா என்றால் கண்டிப்பாக தீர்வு உண்டு. இதில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே " ஆண்மை குறைவை " சரி செய்திடலாம். முதலில் ஆண்மை குறைவு ஏற்பட என்ன காரணம் என்பதை பார்க்கலாம். ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் ஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணமே உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைய ஆரம்பிப்பதுதான். இது குறைந்தால் பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று பொருள். மன இறுக்கமும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதை தான் வெளிப்படுத்தும். மேலும் ஆய்வு ஒன்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், இதனை சரிசெய்யலாம்.  உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், எனர்ஜியானது குறைவாக இருக்கும். ஆனால் நிறைய ஆண்கள் தற்போது அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாகத் தான் எனர்ஜி குறைவாக உள்ளது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் உடலில் எப்போதுமே எனர்ஜி இல்லாதது போல் உணர்ந்தால், உடனே மருத

உடல் எடை குறைய தமிழில் டிப்ஸ்

Image
உடல் எடை குறைய இயற்கையான வழிமுறைகள்:  மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர் க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்மு டைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். உடல் எடை குறைய டிப்ஸ் பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனை களை தெரிந்து கொள்ளலாம். மனதால் நினைக்கனும் நம்முடைய உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட் டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். உடல் எடை குறைக்க உணவுகள் நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உ

பித்தத்திலிருந்து விடுபட சித்த வைத்தியம்

Image
பித்தத்தின் வகைகள் பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது. பித்தம் நீங்க இயற்கை வைத்தியம் அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி' என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது. ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது. ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது. ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்

பாசிப் பயிறு | மருத்துவ குணங்கள்

Image
பாசிப்பயறு - மருத்துவ குணங்கள் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோநேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசி பயறு | மருத்துவ குணங்கள் பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்: இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியு ள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம் . காய்ச்சல் குணமாகும்: சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை

டான்சில், வயிற்றுப் போக்கு, இடுப்பு வலி நீங்க பாட்டி வைத்தியம்

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள

கோபத்தை குறைக்க சில வழிகள்:

கோபத்தை குறைக்க சில வழிகள்: கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. கோபத்தை குறைக்க சில வழிகள்: சராசரியாக எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? 1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானம

இரைப்பை புண்ணுக்கு மருந்து

இரைப்பையில் ஏற்படும் புண்ணை உடனடியாக குணப்படுத்தி ரத்தக் கசிவை நிறுத்தக் கூடிய மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்துக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது. வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவரும், இரைப்பை குடல் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத் கடந்த 2011-ஆம் ஆண்டு இரைப்பை புண்ணால் பாதிக்கப்பட்ட மென்பொருள் நிபுணருக்கு பல்வேறு சிகிச்சைகளை அளித்தார். ஆனால், அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் புண் உருவாகி உள்ள பகுதியில் முட்டை ஜவ்வு மூலம் திசு வளர்ச்சியை உடனடியாக ஏற்படுத்தி குணப்படுத்தும் மருந்தைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் டாக்டர் மோகன்பிரசாத் ஈடுபட்டார். இதையடுத்து, முட்டை ஜவ்வு மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தை (ஹீமோஹீல்ஸ்ப்ரே) கொண்டு இரைப்பையில் ஏற்பட்ட புண் மீது எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின் 48 மணி நேரத்தில் புண் முற்றிலுமாக குணமடைந்தது. மேலும், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய மருந்து

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்

வெங்காயம் இல்லாமல் சமையலே கிடையாது எனும் அளவுக்கு அனைத்து வகை சமையலிலும் வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு  சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். சிறிய வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம். சில நிமிஷங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடலில் கட்டிகள் தோன்றும். இதற்கு, சிறிய வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். சிறிய வெங்காயத்தை துண்டுகளாக்கி பசு நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

உதிர போக்கு நிற்க கொய்யா இலை

கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும். கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.

இரத்த குழாய் அடைப்பு நீக்குவது எப்படி?

ஆஞ்சியோகிராம் வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாயின் தன்மை, அடைப்புகளின் அளவு ஆகியவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சிபோபிளாஸ்ட்டி செய்து அடைப்பை அகற்றி ஸ்டென்ட் பொருத்தலாம். அடைப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

குறைந்த நேர தூக்கத்தால் சிறுநீரக பாதிப்பு

நாள்தோறும் ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாஸ்டன் நகரில் உள்ள பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. மனிதர்களின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வழக்கமான காலமுறையை (circadian clock) பின்பற்றுகின்றன. அதாவது சில உறுப்புகள் நாம் தூங்கும்போதும் மட்டும் இயங்கும். நாம் தூங்கும் நேரத்துக்கும் சிறுநீரக செயல்பாட்டுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. இதில், நாள்தோறும் குறைவாக தூங்குபவர்களின் சிறுநீரக செயல்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக பிர்ஹாம் பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்களது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 4,238 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை மருத்துவர் ஜோசப் மெக்மில்லன் கூறினார். அதாவது, இரவில் 7 மணிநேரம் தூங்கும் பெண்களைவிட, 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் பெண்களில் 65 சதம் பேரின் சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த ஆய்வு