காய்ச்சலுக்கு பிறகு வரும் இருமல் நீங்க
காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை.
முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.
மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.
இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்.
முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.
மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.
இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்.
Comments
Post a Comment