மூட்டு வலி நீக்கும் முடக்கற்றான் இலை

முழங்கால் முழுங்கைகளில் அடிக்கடி வலி ஏற்படும், நீட்டவோ மடக்கவோ, அதிக சிரமம்-வலி உயிர்போகும். எந்தந்த தைலம் தேய்த்தாலும் சிறிது நேரம் தான் கேட்கும் பின் முன்னிலையிலும் அதிகமான வலி. இதற்கு முடக்கற்றான் நல்ல மருந்து. முடக்குவாதம் போக்கும் மூலி இது. எனவே முடக்கு அற்றான் என்ற காரணப்பெயர்.

இந்த இலையை கைப்பிடி அளவு 4 மிளகாய் வற்றல் சிறிது உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிறிது அனைத்தையும் வறுத்து உப்பு, புளி சேர்த்து சாப்பிட்டுவர வலி நீக்கும்.

இந்த கீரையை கைப்பிடி அளவு 1 டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

இந்த கீரையுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்க வைக்க வைத்து மேல் பூச்சாகவும் உபயோகிக்கலாம்.

புழுங்கல் அரிசி சிறிது வெந்தயம் முடக்கு அற்றான் இலை அனைத்தையும் முதல் நாள் அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்க்கலாம்.வாரம் ஒரு முறை முடக்கு அற்றான் இலையை உணவோடு உண்டு வந்தால் முடக்குவாதம் மெல்ல, மெல்ல விலகும்.

Comments

Popular posts from this blog

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?