உடல் சூட்டால் வரும் வயிற்று வலி நீங்க

 உஷ்ணத்தால் வயிறு வெந்து புண் ஏற்படும்போது வயிற்றுவலி - பசி இன்மை, செரிமானக் கோளாறு எனப் பல உபாதைகள். வயிற்றுப் புண்ணுக்கு அற்புத நிவாரணி வெந்தயம். வேக்காளத்தை நீக்கும். அயன் சத்து நிரம்பியது. எனவே வெந்தயம் என்ற காரணப் பெயர்.

வெந்தயத்தைச் சற்றே வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதன்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மட்டுப்படும்.

பச்சரிசி நெய் வெந்தயம் பூண்டு தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி செய்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வயிற்று வலி நீங்கும். இதை எல்லோருமே சாப்பிடலாம். உளுந்து சேர்க்காது வெந்தய தோசை செய்து சாப்பிடலாம். இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நம்மை நெருங்காது.
 
மேலும் வெந்தயத்தை முதல்நாள் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலை முழுகி வர மூளை குளிர்ச்சி அடையும். பொடுகு மறையும். இதைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

Comments

Popular posts from this blog

ஓ... சார்லி அதிகம் விருது வாங்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமா? வெளிவந்த ரகசியம் !

உனக்கு சில்க் ஸ்மிதா ன்னு நினைப்பா? ஸ்ரேயாவின் தீயாய் பரவும் படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பு !

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !