பயமுறுத்தும் பறவை காய்ச்சல்

பேர்ட் ஃப்ளூ அல்லது ஏவியன் இன்ஃப்ளூயென்ஸா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் கேள்விப்படுகிறோம்.

ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸை கண்டு அணு ஆய்தத்திற்கு அஞ்சுவது போல் அஞ்சுவதன் காரணம் இதன் பயங்கரமான உயிர் குடிக்கும் தன்மையே. இதனை தீர்த்துக் கட்ட உலக நாடுகள் பல்வேறு வகையில் நட்வடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பறவைக் காய்ச்சல் பற்றி நாம் அறிய முயல்வோம்.

paravai kaichal thadukkum valimuraigal


பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக பறவைகளை தாக்கும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் ஆகும், சில அரிய வேளைகளில் பன்றியையும் தாக்கும். வீட்டில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட பறவை இனங்கள் இந்த வைரஸினால் தாக்கமுறும்போது இது மிக அபாயமான தொற்று நோயாக பரவும் வாய்ப்பு உள்ளது.

பறவைகளுக்கு வரும் நோய்களில் இரண்டு வகைகள் உண்டு. முதலில் சிறு நோய் ஏற்படும் அதாவது ரெக்கைகள் சொறசொறப்பாவதன் மூலம் இதன் அறிகுறிகள் தெரியவரும், அல்லது முட்டைகள் இடுவதில் கடும் எண்ணிக்கை குறைவு ஏற்படும். இரண்டாவது வகைதான் இந்த அபாய பறவைக்காய்ச்சல் வைரஸ். இது தொற்றினால் மரணம் உடனடியாக நிகழும். இதன் அறிகுறிகள் தெரியும் தினத்தன்றே பறவைகள் மடியும்.

மனிதர்களை இந்த இன்ஃப்ளூயன்ஸா தாக்கும்போது சாதரண அறிகுறிகளான, காய்ச்சல், இருமல், தொண்டைப் பிரச்சனை, தசையில் வலி ஆகியவை ஏற்படும். மேலும் கண் நோய், நியூமோனியா, மூச்சுக்குழல் நோய், வைரல் நியூமோனியா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படும்.

பறவைகளில் இதன் அறிகுறிகள் அந்த குறிப்பிட்ட வைரஸ் தன்மை பொறுத்தும் அந்த குறிப்பிட்ட பறவையினம் பொறுத்தும் மாறுபடும். வைரஸின் ஹெச்-5 மற்றும் ஹெச்-7 வகைகள் தாக்கும்போது பரவலான நோய்கள் ஏற்படுகின்றன, இதனால் வீட்டு வளர்ப்பு பறவைகள் உடனடியாக மடிகின்றன.

நீரில் வாழும் சில பறவையினங்கள் இத்தகைய வைரசை தங்களது குடலில் தாங்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கிய பறவையினங்கள் தங்களது உமிழ் நீர், மூக்கிலிருந்து வரும் திரவங்கள், மற்றும் கழிவுகள் மூலம் தொற்ற வெளியிடுகின்றன. கழிவிலிருந்து வாய்வழி வெளியீடு மூலம் இந்த வைரஸ் பறவுவது மிகவும் சகஜமானதே.

இந்த நோய் ஒரு கோழியை பாதித்தாலும் அந்த பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் எரித்து விடவேண்டும் அல்லது கொன்று விடவேண்டும், அதன் எச்ச சொச்சங்களை கவனமாக அப்புறப்படுத்தவேண்டும், கிருமி நாசினிகளை பயன்படுத்தி பண்ணை முழுதையும், தொற்று பரவாமல் செய்யவேண்டும்.

3 மணி நேரத்திற்கு 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை வைத்திருப்பதன் மூலம் இந்த வைரஸை கொன்று விடலாம், அல்லது அரை மணி நேரத்திற்கு 60 டிகிரி செல்சியஸ் வைத்திருக்கலாம். இது தவிர பொதுவாக பயன்படுத்தப்படும் கிருமிக் கொல்லிகளான ஃபார்மான் அயோடின் காம்பவுண்டுகளை பயன்படுத்தி இந்த வைரஸை அழிக்கலாம்.

தண்ணீரில் இந்த வைரஸ்கள் 22 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 நாட்கள் வரையிலும் இருக்கும், பூஜ்ஜியம் டிகிரி செல்ஸியஸில் இந்த வைரஸ் 30 நாட்களுக்கு உயிருடனிருக்கும் தன்மை கொண்டது எனவே இது மிக மிக ஆபத்தானது.

இந்த வைரஸின் நோய்க்கூறு குறித்த ஆய்வுகள் தெரிவிக்கையில் ஒரு சிறிய அளவிலான கிருமி 10 லட்சம் பறவைகளை தாக்க வல்லமை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் பரவும் வேகம்தான் இதன் ஆபத்து. இதனால்தான் உடனடியாக இறைச்சி ஏற்றுமதி இறக்குமதி தடை செய்யப்படுகிறது.

ஒரு நாட்டிற்குள் இந்த நோய் ஒரு பண்ணையிலிருந்து இன்னொரு பண்ணைக்கு தாவும், பறவை எச்சங்களிலிருந்து சிந்தும் பெரிய அளவிலான வைரஸ்கள் காற்றில் உள்ள தூசியையும் மண்ணையும் பாதிக்கும். காற்றில் மிதக்கும் இந்த வைரஸ் சுவாசித்தலில் உடனடியாக தொற்றும்.

சில உபகரணங்கள், வாகனங்கள், தீவனம், கூண்டுகள், காலணிகள் ஆகியவை மூலம் இந்த வைரஸ் பண்ணை விட்டு பண்ணைக்கு தாவும். முட்டைகளை அப்படியே எடுத்துக் கொள்வதை தவிர்க்கவேண்டும். காட்டு வாத்துகள் இந்த வைரஸின் முக்கிய இயற்கை இருப்பிடமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாத்துகள் புழங்கும் நீரை பயன்படுத்தும் மற்ற காட்டு பறவைகள் மூலம் இது வீட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை தாக்குகிறது, பறவைகள் நாடு விட்டு நாடு பெருமளவு செல்லும்போது இந்த நோய் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறது.

இந்த பயங்கரமான தொற்று நோய் ஆசியாவின் சில பகுதிகளை தாக்கினாலும் இந்தியாவில் இந்த நோய் இது வரை பதிவாகவில்லை. மனிதனை இந்த வைரஸ் தாக்கும்போது இதன் பெயர் ஹெச் 5 என்1 என்று அழைக்கப்படுகிறது, இது உயிரிகளை கடந்து மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வைரஸ் ஆகும். வியட்னாமிலும் தாய்லாந்திலும் இது மனிதர்களுக்கும் பரவி பலர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களை இதிலிருந்து பாதுகாக்க வாக்சின் எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை, உலக சுகாதார கழகம் இதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

மனிதர்களை இது தாக்கும் போது இரண்டு விதமான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன, எம்-2 இன்ஹிபிட்டர்கள் என்று அழைக்கப்படும் அமான்டடின், மற்றும் ரிமான்டடின் ஆகிய மருந்துகளும் நியூராமினிடேஸ் இன்ஹிபிடர்கள் என்று அழைக்கப்படும் மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

உலக சுகாதார மையம் பறவைகள் வளர்ப்புப் பண்ணயை பராமரிக்கவும் பராமரிப்பாளர்களுக்கு சில தற்காப்பு வாக்சின்களையும் பரிந்துரை செய்துள்ளது.

Tags: Paravai Kaichal vaithiyam, Parvai kaichal enral enna, Paravai Kaichal Marunthu, Paravai kaichal Maruthuvam, Treatment for Paravai kaichal, panri kaichal, paravai, koil kaichal, koli pannai, paravai kaichal in Tamilnadu. 

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்