பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள்

பூச்சிகள் மூலம் கீழ்க்காணும் நோய்கள் மிக எளிதாக மனிதனுக்கு பரவி துன்பத்தை கொடுக்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பது எப்படி? வந்த பிறகு அவற்றை குணப்படுத்துவது எப்படி? போன்ற விபரங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.


  • மலேரியா காய்ச்சல்
  • டெங்கு காய்ச்சல்
  • சிக்குன்குன்யா
  • யானைக்கால் நோய் (லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ்)
  • காலா அசார்

மலேரியா காய்ச்சல்

மலேரியா காய்ச்சல் என்பது நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பாராசைட்ஸ் என்ற ஓரு வகையான ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய். மலேரியா காய்ச்சல் பிளாஸ்மோடியம் விவாக்ஸ்(பி.விவாக்ஸ்), பிளாஸ்மோடியம்பால்ஸிபார்ம் (பி.பால்சிபார்ம்) பிளாஸ்மோடியம் மலேரியா(பி.மலேரியா) மற்றும் பிளாஸ்மோடியம் ஒவேல் (பி.ஒவேல்) எனப்படும் க்பாராசைட்டுகளால் ஏற்படுகிறது.

மலேரியா காய்ச்சல், தொற்றும் தன்மை கொண்ட ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட அனோபிலிஸ் எனப்படும் ஒருவகை கொசு கடிப்பதினால் மலேரியா உருவாகிறது.

நோயை தொற்றுவிக்கும் இவ்வகை கொசு ஒருவரை கடித்தால் கடித்த 10 முதல் 14 நாட்களில் மலேரியா காய்ச்சல் ஏற்படும்.

மனிதருக்கு இந்நோயை பரப்பும் இரண்டுவகை பாரசைட்டுகள் உள்ளன. அவை 1. பிளாஸ்மோடியம் விவாக்ஸ், 2. பிளாஸ்மோடியம் பால்ஸிபார்ம். இவை இந்தியாவில் காணப்படுபவை என கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகை பாராசைட்டுகள் மனித உடலில் தன் வாழ்க்கை சுழற்சியின் பல்வேறு மாறுதல்களின் வழியே கடந்து செல்கிறது.

இந்த வகை பாராசைட்டுகள் தன் வாழ்க்கை சுழற்சியை ஈரல் மற்றும் சிவப்புஇரத்த அணுக்களில் நிறைவு செய்கிறது.

பி.பால்ஸிபார்ம் வகையான பாராசைட்டின் மூலம் ஏற்படும் நோய் மிகவும் பயங்கரமான விளைவை ஏற்படுத்தக் கூடியது.

நமது நாட்டில் ஏற்பட்ட மலேரியா சம்பவங்கள் 

2004-ஆம் ஆண்டிற்கான தற்காலிக தகவலின் படி, அதிகமான அளவு மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டோர் ஒரிசாவும் , அடுத்ததாக, குஜராத். சடிஸ்கர், மேற்குவங்கம், ஜார்கக்ண்ட், கர்னாடகா, உத்தரபிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை ஆகும். அதிகப் படியான மரண எண்ணிக்கை ஒரிசாவிலும் அதற்கடுத்தாற்போல் மேற்கு வங்கம், மிசோரம், ஜார்க்க்ண்ட், கர்நாடகா, திரிபுரா மற்றும் அஸாம் என தகவல் தெரிவிக்கிறது

மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள்.


மலேரியா காய்ச்சல், தலைவலி, வாந்தி, மற்றும் ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

உடற்சோர்வு, காக்கா வலிப்பு, இழுப்பு மற்றும் சுயநினைவு இழத்தல் போன்ற நிலைகள் ஏற்படுகிறது.

மகப்பேறுகாலத்தில் மலேரியா காய்ச்சல் ஏற்படின், தாய்க்கும் வளரும் மற்றும் பிறந்த குழந்தைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.மலேரியா காய்ச்சல் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக்க சிரமத்தை அளிக்கும்.கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் நிலை உருவாகும்.

மலேரியா காய்ச்சலால் ஏற்படும் அதிகமான பிரச்சினைகளும்;விளைவுகளும்:


மிகவும் பலவீனம் (அமரக்கூட முடியாத நிலைமை) புத்திசுவாதினமின்மை ,சுறுசுறுப்பின்மை மற்றும் சுயநினைவு இழத்தல் ( கோமா).
சுவாசிப்பதில் கடினத்தன்மை (மூச்சுவிடுவதில் கடினம்)
தீவிர இரத்த சோகை
தாகத்திற்கு தண்ணீர் கூட அருந்த இயலாத நிலையும் ,வாந்தி வருவது போன்ற உணர்வும் இருக்கும்.

தீவிரமான மலேரியா காய்ச்சலினால் ஏற்படும் ஆபத்துக்கள்


இந்நோய் பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பகுதிகளில் இந்நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. ஆனால் இளம் வயதினருக்கு இந்நோய் சிக்கலான நிலையை எற்படுத்துகிறது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இந்நோய் பரவும் தன்மை மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகளவில் காணப்படுகிறது.

அதிகளவில் நோய்பரவும் தன்மையுள்ள பகுதிகளில், ஐந்து (5) வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், அப்பகுதிக்கு வருபவர்கள்,விருந்தினர், அப்பகுதியில் வேலை செய்யக் குடிபெயர்ந்து செல்லும் கூலித் தொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகன்றனர்.

மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண்ணால் மலேரியாவின் தாக்கத்தை தாங்கிக் கொள்வது கடினம். மேலும் மலேரியா ,கருவிலிருக்கும் குழந்தையையும் பாதிக்கச் செய்யும்.

மலேரியா காய்ச்சலை பரப்பும் காரணிகள்: 

பல காரணிகள் உண்டு.

அனொபிலிஸ்குல்ளிபேளியஸ்எனும் முக்கிய நோய்பரப்பும் காரணி (கொசு)
சிறியது முதல் நடுத்தர அளவுள்ள கொசு.
1.இந்த கொசுவின் உணவு பழக்கம்:

இது ஒரு வகை விலங்குகளை சார்ந்து வாழக்கூடிய உயிரினம்.
இவைகளின் எண்ணிக்கை பெருகும் போது மனிதர்களின் இரத்தத்தை உட்கொண்டு வாழும்.
2. ஓய்வு எடுக்கும் பழக்கம்

மனித வாழ்விடங்கள் மற்றும் மாட்டுத்தொழுவங்களில் பகல் வேலையில் ஓய்வு எடுக்கும்.
3. இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்

மழைநீர் குளங்கள், குட்டைகள், வெட்டப்பட்ட தண்ணீர் குட்டைகள், ஆற்றுநீர் படுகைகள், பாசன நீர்க்கால்கள், கழிவுநீர் தேக்கங்கள், பயிர்நிலங்கள், குளக்கரைகள், மெதுவாய் செல்லும் நீரோடைகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யும்.
பருவகால மழைக்குப்பின்ன மிக அதிகளவில் இனப்பெருக்கம் செய்யும்.
4. கொசு கடிக்கும் நேரம்

நோய்பரப்பும் காரணிகளின் இனவகையை கொண்டு கொசு கடிக்கும் நேரம் தீர்மாக்கப்படுகிறது.
பெரும்பாலான நோய்பரப்பும் கொசுவின், அனெடிரிஸ் குஸ்ஸிபெளியஸ்-ம் சேர்ந்து, மாலை சூரியன் மறைந்தவுடன் இரவுவேளைகளில் கடிக்க ஆரம்பித்துவிடும். எனவே கோடைகாலங்களை விட குளிர்க்காலங்களில் கொசு கடிப்பது மிக அதிகமாகவும், விரைவாக ஆரம்பித்துவிடும். ஆனால் அதிகளவில் கொசு கடிக்கும் நேரம் என்பது கொசுக்களின் இனத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
மலேரியாவை கட்டுப்படுத்தும் முறைகள்
1. ஆரம்பத்திலேயே மலேரியா காய்ச்சலை கண்டறிந்து சிகிச்சையளித்தல்.

இது முதன்மையான மலேரியாவை கட்டுப்படுத்தும் முறை. இந்நோயை பரவாமல் தடுப்பதற்கு மலேரியா காய்ச்சல் பாதிக்கபட்டவர்களுக்கு அடிப்படை சிகிச்சைமுறை அவசியம்.
குளோரோகுய்ன் என்பது சிக்கலில்லாத சாதாரண மலேரியா காய்ச்சலை எதிர்க்கக்கூடிய ஒரு முக்கிய மருந்து.
மலேரியா காய்ச்சலை எதிர்க்கும் இவ்வகை மருந்துகள் மக்களுக்கு சுலபமாக கிடைக்கும் வண்ணம் மருந்தினை விநியோகம் செய்யும் மையங்கள் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்களை கிராமப்பகுதிகளில்அமைக்க வேண்டும்.
குளோரோகுய்ன் என்னும் மருந்தினை எதிர்க்கக்கூடிய மலேரியா காய்ச்சலுக்கு மலேரியா மருந்து செயல் திட்டத்தின் ஒழுங்கின்படி மாற்று மருந்தினை பரிந்துரை செய்ய வேண்டும்.
2. நோய் காரணிகளை கட்டுப்படுத்துதல்

வேதியல் முறையில் கட்டுப்படுத்துதல் - மலேரியா காய்ச்சல் கட்டுப்படுத்தும் துறையின் செயல்திட்டத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளப் பயன்படுத்தலாம்.

உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல்

லார்வா புழுக்களை உண்ணக்கூடிய வண்ண மீன்களை தொட்டிகள் நீரூற்றுகள் மற்றும் பிறநிலைகளில் வளர்ப்பதின் மூலம்
உயிர்கொல்லிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துதல்.
(3) ஒவ்வொரு தனிநபர் மற்றும் சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு முறைகள்.

கொசுக்களை விரட்டும் உடற்பூச்சு களிம்பு, திரவம், சுருள் மற்றும் பயன்படுத்த வேண்டும்.
வீட்டின் ஜன்னல்கள், கதவுகளில் கொசு உட்புகுவதைத் தடுக்க பின்னல் வலைகளை அமைக்க வேண்டும்.
பூச்சிகளை கொல்லும் தன்மை கொண்ட வலைகளை படுக்கையைச்சுற்றி அமைக்க வேண்டும்.
உடல் முழுவதும் மூடும் வண்ணமாக கொசு வகைகளை தம் கட்டப்படல் வேண்டும்.
(3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கொசு உற்பத்தியை குறைக்கும் முறைகள்

உற்பத்தியைக் குறைப்பது என்பது

கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ள நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது.
சேமிக்கும் தண்ணீரை சரியாக மூடி பாதுகாப்பது.
கழிவு நீர் தேங்காத வண்ணம் சாக்கடை வசதிகளை முறைப்படுத்துவது.
மலேரியா காய்ச்சல் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?


இது ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படும் காய்ச்சல்.
இவ்வகை காய்ச்சல் ஏடிஸ் இஜிப்டி வகை கொசு கடிப்பதினால் பரப்பப்படுகிறது.
இவ்வகை கொசு கடித்த 5 அல்லது 6 நாட்கள் கழித்து இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
இவ்வகை காய்ச்சல் இரண்டு விதத்தில் தோன்றும். ஒன்று டெங்கு காய்ச்சல், மற்றொன்று இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல் ஒரு மோசமான நோய், ப்ளூ போன்று சுகாதார கேட்டினை விளைவிக்கும்.
இரத்தப்போக்குடன் கூடிய டெங்குகாய்ச்சல் மிகவும் மோசமான நோய். இவ்வகை காய்ச்சல் மரணத்தையும் விளைவிக்கும்.
டெங்கு காய்ச்சல் மற்றும் இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் இருக்குமோ எனத் தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அடையாளம் மற்றும் அறிகுறிகள்

திடீரென மிக அதிகபப்டியான காய்ச்சல் ஏற்படுவது.
தாங்கிக் கொள்ள முடியாத முன்தலைவலி
கண்களின் பின்புறம் வலி தோன்றும். இது கண்களின் அசைவையும் கடினமாக்கும்.
தசை மற்றும் மூட்டுவலி ஏற்படும்.
ருசியை உணரும் தன்மை மற்றும் பசி ஏற்படுவது குறையும்.
மார்பு மற்றும் கைகளில் தட்டம்மை போன்று தழும்புகள் எற்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலின் அடையாள அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சலுக்கான அனைத்து அறிகுறிகளும் காணப்படும்.
தொடர்ச்சியான தாங்கிக்கொள்ள முடியாத வயிற்றுவலி.
சருமம் வெளிர்தல், சில்லிட்டுப்போதல் மற்றும் பிசுபிசுப்புத்தன்மை ஏற்படும்.
மூக்கு, வாய், பல் ஈறுகள் மற்றும் தோலில் உள்ள கொப்புளங்களிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படும்.
இத்துடன் அல்லது இரத்தம் இல்லாமலோ அடிக்கடி வாந்தி ஏற்படும்.
தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை ஏற்படும்.
அதிக தாகம் ஏற்படும் மற்றும் நாக்கு வறண்டுபோகும்.
வேகமான (படபடவென) பலவீனமான இரத்த நாடி காணப்படும்.
சுவாசிப்பதில் கடினத்தன்மை ஏற்படும்.
இந்நோய்தொற்றக்கூடிய காலம்

டெங்கு காய்ச்சல் கண்ட நபரை கொசு கடித்தல் டெங்கு காய்ச்சல் கண்டவரிடமிருந்து வைரஸ் கிருமி கொசுவின் உடலில் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். இந்த காலகட்டத்தில் அக்கொசு மற்றொருவரை கடிக்கும் போது கொசுகடிபட்ட நபருக்கு டெங்கு காய்ச்சல் தோன்றுகிறது.
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் நபரின் வயது மற்றும் இனம்

எல்லா வயதினர் மற்றும் இருபாலினருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்.
இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது குழந்தைகள் இறப்பது மிக அதிகமாக காணப்படும்.
டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு நோய்பரப்பும் காரணிகள்

ஏடிஸ்இஜிப்டி வகை கொசு டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.
இது சிறிய கருப்பு வெள்ளை, வெள்ளை நிற கோடுகளை கொண்ட சுமார் 5 மில்லி மீட்டர் அளவிலான ஒரு கொசு
இந்த வகை கொசுக்களின் உடலில் 7 முதல் 8நாட்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்கிறது. பின்னர் இந்நோயினை மற்றவருக்கு பரப்புகிறது.
கொசுவின் உணவுப்பழக்கம்

இவ்வகை கொசுக்கள் பகல் வேளைகளில் கடிக்கும்.
முக்கியமாக வீட்டிலும், வீட்டைச்சுற்றியுள்ள மனிதர்களின் இரத்தத்தை உட்கொண்டும் வாழக்கூடியவை.
திரும்பத் திரும்பக் கடிக்கும் தன்மை கொண்டவை.
ஓய்வெடுக்கும் பழக்கம்

வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஓய்வெடுக்கும்.
வீட்டின் இருட்டான மூலைகள், தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகள், குடைகள் அல்லது மேசைநாற்காலி போன்றவைகளின் அடியில் ஓய்வெடுக்கும்.
இனப்பெருக்கம் செய்யும் முறை

ஏடிஸ் எஜிப்டி வகை கொசுவானது பாத்திரங்கள் மற்றும் நீரை சேமிக்கும் பாத்திரங்களில் மிக குறைந்த அளவு தண்ணீர் இருந்தாலும், தங்கள் இனப்பெருக்கத்தை செய்யும்.
இவ்வகை கொசுக்களின் முட்டைகள் ஓராண்டிற்க்கும் மேலாக தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் உயிரோடு இருக்கும் தன்மை கொண்டவை.
இனப்பெருக்கத்திற்கு உகந்த இடங்கள்
குளிர்ப்பானங்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள்(பிரிட்ஜ்) , தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர்வடிபள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப்பெருக்கத்தை செய்கின்றன. டெங்கு/இரத்தப்போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல்.

டெங்கு நோய் வரும்முன் காப்பது சரியானது.
இவ்வகை நோய்களுக்கு மருந்தோ தடுப்பு மருந்தோ இல்லை.
ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதே இவ்வகை நோய்களை தடுப்பதற்கான சிறந்த முறையாகும்.
இவ்வகை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.சரியான சிகிச்சை முறையை கையாள்வதின் மூலம் உயிரிழப்பு நேரிடுவதை கணிசமாகக் குறைக்கலாம்.
நோய்பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
1. சுயபாதுகாப்பு முறைகளின் மூலம் கட்டுப்படுத்துதல்.

கொசுக்களை விரட்டும் உடல் பூச்சுகளிம்புகள், திரவம், சுருள் பயன்படுத்தவும்.
முழுக்கை சட்டை, பேண்ட்ஸ், மற்றும் கால்உறை பயன்படுத்தலாம்.
குழந்தைகள் தூங்கும் போது படுக்கையை சுற்றி கொசுவலைகளை பயன்படுத்தி கொசுக்கள் கடிப்பதை தவிர்க்கலாம்,
குளிர்ப்பானகளில்(பிருட்ஜ்) தேங்கும் நீரினை மற்றும் சிறுசிறு பாத்திரங்களில் தேங்கும் நீரினை வாரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்தும் போதுஇந்நோயைப்பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம். சட்டைபோடாமல் விளையாட அனுமதிக்கக்கூடாது.
2. உயிரியல் முறையில் கட்டுப்படுத்தல்

லார்வா புழுக்களை உண்ணக்கூடிய வண்ணமீன்களை மீன் தொட்டிகள், நீர் ஊற்றுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் வளர்ப்பதின் மூலம்
உயிர்க்கொல்லிகளை பயன்படுத்தியும் தடுக்கலாம்.
3. இரசாயன முறையில் கட்டுப்படுத்தல்

லார்வா புழுக்களை அழிக்கக்கூடிய அபேட் என்னும் இரசாயனப் பொருளை கொசு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களில் பயன்படுத்தக்கட்டுப்படுத்தலாம்,
4. சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் கொசு உற்பத்தியை குறைக்கும் முறைகள்
ஆய்வுக்கூட சோதனைகள் மூலம் நோயினை கண்டறிதல்

மருத்துவர், நோயினால் பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலையை கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும். டார்ன்குட் டெஸ்ட் என்னும் முறையினை பயன்படுத்தி முழங்கையில் சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றுகின்றனவா என்பதனை கண்டறிய வேண்டும்.
இரத்தப்போக்குடன் கூடிய காய்ச்சல் கண்ட எல்லா நோயாளிகளின் உடலிலும், இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனும் தட்டை இரத்த அணுக்ககளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதனை சரியாக கண்டறிய வேண்டும்.
அதிர்ச்சி மற்றும் நிலைகுலைவு அதாவது சுயநினைவிழக்கும் நிலை ஏற்படும் போது வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் தேவையற்ற நீர் சேர்க்கை ஏற்ப்ட்டுள்ளதா என்பதனை கண்டறிய வேண்டும்.
டெங்கு நோயினை கையாளும் முறை

டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.
நோயின் அறிகுறிகளை அறிந்து அதற்கேற்றாற்போல் கையாள வேண்டும்.
டெங்குவினால் சுய நினைவு இழப்பு ஏற்படின் கீழ்காணும் சிகிச்சை முறைகளை பரிந்துரை செய்யலாம்.
இரத்தத்திலுள்ள பிளாஸ்மா எனும் திரவப்பொருள் இழப்பினை ஈடுசெய்வது.
உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் தொந்தரவுகள் போன்றவற்றை சரிசெய்வது.
உடலில் உள்ள இரத்தத்தை புதியதாக செலுத்தி மாற்றியமைப்பது,
டெங்கு காய்ச்சல் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

சிக்குன்குன்யாசிக்குன்குன்யா என்றால் என்ன?
(சிக்குன்குன்யா வைரஸ் நோய் அல்லது சிக்குன்குன்யா காய்ச்சல் என்கின்ற பெயர்களிலும் கூறப்படுகிறது.)

சிக்குனகுன்யா என்பது ஒரு பலவீனப்படுத்தும், ஆனால் மரணத்தை உண்டாக்காத வைரஸ் நோய். இந்த நோயானது கொசுக்கள் கடிப்பதனால் பரப்பப்படுகிறது.

எந்ததெந்த மாநிலங்களில் சிக்குன்குன்யா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரேதசம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் சிக்குன்குன்யா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

சிக்குன்குன்யா நோயினை ஏற்படுத்துகிற காரணி எது?
சிக்குன்குன்யா நோய் சிக்குன்குன்யா என்னும் வைரஸினால் ஏற்படுகிறது.

சிக்குன்குன்யா எப்படி பரவுகிறது?
சிக்குன்குன்யா எஜிஸ் முதன்மையாக ஏடிஸ் எஜிப்டி எனப்படும் கொசுக்கள் கடிப்பதினால் ஏற்படுகிறது. சிக்கன்குன்யா வைரஸின் முதன்மையான சேமிப்பு இடம் மனித உடல் ஆகும். கொசுவானது இந்நோய் கண்ட நபரை கடித்த பின்னர் மற்றொரு நபரை கடிக்கும் போது இந்நோய் முதல் நபரிலிருந்து இரண்டாம் நபருக்கு தொற்றுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக இந்நோயினை மற்றவர்களுக்கு பரப்பமுடியாது .(அதாவது இந்நோய் ஒட்டிப்பரவக்கூடிய தன்மை கொண்டதல்ல). ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் பகல் நேரங்களில் கடிக்கும்.

சிக்குன்குன்யாவின் அறிகுறிகள் யாவை ?
சிக்குன்குன்யா திடீரென காய்ச்சல், சிறிது இரத்தப்போக்கு, தலைவலி, குமட்டல், வாந்தி, அதிக வலியுடன் கூடிய முட்டுவலி அல்லது சிவப்புநிற கொப்புளங்களுடன் தோன்றும். பெரும்பாலும் சிறுபிள்ளைகளில், இந்நோய் எவ்வித அறிகுறிகளையும் தோற்றுவிப்பதுமில்லை. இந்நோயிலிருந்து குணமடைந்தாலும், நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து விடாப்பிடியான முட்டுவலி காணப்படும். இச்சுசூழலில் முட்டுகளில் ஏற்படும் வீக்கங்களை குணமாக்கவும் வலியினை குறைக்கும் மாத்திரைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளவேண்டும்.

கொசு கடித்த எவ்வளவு காலத்திற்குள் இந்நோயின் அறிகுறிகள் தோன்றும்?
கொசு கடித்து வைரஸ் உடலுக்குள் சென்று 1 முதல் 12 நாட்களுக்குள் இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும்.

சிக்குன்குன்யாவினை எப்படி கண்டறிவது?
இரத்தப்பரிசோதனையின் முலம் சிக்குன்குன்யாவினை கண்டறியலாம்.

யார் சிக்குன்குன்யாவின் பாதிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்?
சிக்குன்குன்யா வைரஸை கொண்டுள்ள கொசு, கடிக்கும் எந்த ஒரு நபருக்கும் சிக்குன்குன்யா ஏற்படும்.

சிக்குன்குன்யாவிற்கான சிகிச்சை முறை என்ன ?
சிக்குன்குன்யாவிற்கு எந்த ஒரு தனிப்பட்ட சிசிச்சை முறையும் கிடையாது. நான்-ஸ்டீராய்டு ஆன்டி-இன்பளேமட்டரி மருந்தினை எடுக்கவைப்பதின் முலமோ மற்றும் அதிக நேரம் ஓய்வு எடுக்கச்செய்வதின் முலமே சிக்குன்குன்யாவின் அறிகுறிகளை குறைக்கலாம். இந்நோய் கண்ட நபரை கொசுக்கள் இல்லாத தூய்மையான பகுதியில் தனிமைப்படுத்தவேண்டும். இப்படி செய்து இந்நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.

சிக்குன்குன்யாவினை எப்படி தடுக்கலாம்?
சிக்குன்குன்யாவை தடுக்க மருந்தோ அல்லது தடுப்பூசியோ கிடையாது. இதை தடுக்க கொசு கடிப்பதனை தவிர்க்கவேண்டும். கொசுக்களின் இனப்பெருக்க இடங்களை கண்டறிந்து அகற்றுவது மற்றொரு முக்கிய தடுப்பு முறையாகும்.
கொசு கடிப்பதனை தடுக்க கீழ்காணும் முறைகளை கையாளலாம்.

கொசுவிரட்டிகள் உடலில் பூசிக்கொள்ளலாம் மற்றும் கொசுக்கள் கடிக்காத வண்ணம் உடைகளை அணியலாம்.
தூங்கும்போது கொசு வலைகளை பயன்படுத்தலாம்
பகல் நேரங்களில் வெளியில் வேலை செய்யும்போது முழுக்கை சட்டை மற்றும் நீளமான பாண்ட்ஸ் அணிவதன் முலம் கொசு கடிப்பதனை தவிர்க் கலாம்.
ஏடிஸ் வகை கொசுக்களின் இனவிருத்தியை கட்டுப்படுத்துவது எப்படி?
கொசுக்களின்உற்பத்தியைகட்டுப்படுத்தும் முைறகள்

குடியிருப்பு பகுதி மற்றும் அதை சூழ்ந்த பகுதிகளில் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த இடங்கள் காணப்படின் அவ்விடங்களை கண்டறிந்து சுத்தம் செய்ய வேண்டும்.
தண்ணீரை ஒருவாரகாலத்திற்கு மேல் சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.தேங்கியிருக்கும் நீரை அகற்றி அந்த இடத்தை உலறச் செய்தல் வேண்டும்.
சேமித்துவைக்கப்பட்ட நீரை வாரத்திற்கு ஒருமுறை சுத்தமான துணியினைக்கொண்டு வேறு பாத்திரத்தில் வடிகட்டி லார்வா பருவத்தில் உள்ள கொசுக்களை அகற்றி பின்னர் அந்த நீரை காய்ச்சி தான் பயன்படுத்த வேண்டும். அப்படி வடிகட்டியாக பயன்படுத்திய துணியினை சூரியவெளிச்சத்தில் நன்கு உலர்த்தி அல்லது (கொதிநீரில் நனைத்திடல்) அத்துணியில் உள்ள முழுமையான வளர்ச்சிபெறாத கொசுக்களை அழிக்கவேண்டும்.
லார்வாக்களை கொல்லும் பொருட்களைபயன்படுத்தி

கால்நடைகள் மற்றும் பிற பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் அகற்றமுடியாத தண்ணீரினை டீமிபாஸ் என்றும் பொருளை பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி நீரில் உள்ள லார்வாக்களை அழிக்கலாம்.
பைரித்ரம் சாறினை வீட்டின் அறைகளில் தெளித்து வீடுகளில் மறைந்திருக்கும் கொசுக்களை அழிக்கலாம்.
உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல்
காம்புசியா மற்றும் கப்பி எனப்படும் லார்வாக்களை உண்ணும் மீன் வகைகளை நீர்நிலை தேக்கங்களில் வளர்ப்பதின் முலம், கொசுக்களின் பெருக்கத்தை தவிர்க்கலாம்.
சிக்குன் குன்யா காய்ச்சல் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

யானைக்கால் நோய் (லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ்)லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ் என்றால் என்ன?
லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ் பொதுவாக யானைக்கால் நோய் என அறியப்படுகிறது. இது உருவத்தை மாற்றும் மற்றும் செயல்படாத்தன்மையை ஏற்படுத்தும் நோயாகும். சாதாரணமாக சிறுபிள்ளை பருவத்தில் வரக்கூடியது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறிகளும் இன்றி காணப்படும்

லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ் (யானைக்கால் நோய்) எப்படி ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது?
நன்கு வளர்ந்த பைலேரியாஸிஸ் புழுவானது மிக சிறிய லட்சக்கணக்கிலான முழுவளர்ச்சியடையாத மைக்ரோபைலேரியே என்னும் புழுக்களை தோற்றுவிக்கும். இவை இரத்தத்தில் பரவி, உடலில் 4 முதல் 6 வருடங்கள் வரை உயிர்வாழ்ந்து இன்னும் அநேக மைக்ரோபைலேரியே லார்வாக்களை தோற்றுவிக்கக்கூடியவை.
லிம்பாடிக் பைலேரியாஸிஸ் கொசுக்கடிகளின் மூலம் பரவுகிறது. கொசுவானது, மைக்ரோபைலேரியாவை கொண்டுள்ள ஒருவரை கடிக்கும் போது, இவ்வகை லார்வா கொசுவின் உடலில் வந்துவிடுகிறது. லார்வா கொசுவின் உடலில் வளர்ச்சியடைய 7 முதல் 21 நாட்களை எடுத்துக்கொள்ளும்.

யாருக்கு இந்நோய் ஏற்படும் அபாயம் அதிகம்?
கொசுக்கள் மாதக்கணக்கிலிருந்து வருடக்கணக்கில் ஒரு நபரை கடித்தால் அநத நபருக்கு இந்நோய் ஏற்படும்.

லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ்-ன் அறிகுறிகள் யாவை?
முதலில் இந்நோயின் அறிகுறிகள் அவர்களின் உடலில் உள்ளது என்பதனை பெரும்பாலோனோர் அறிவதில்லை. உடலில் உள்ள பைலேரியல் புழுக்கள் இறக்கும் வரை இந்நோயின் அறிகுறிகளை அவர்களால் உணரமுடிவதில்லை. இந்நோய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒன்றல்ல என்றாலும், நிணநீர் வடி நாளங்கள் மற்றும் சிறுநீரகங்களை நிரந்தரமாக சேதப்படுத்தக் கூடியதாகும். ஏனெனில், நிணநீர் மண்டலம் சரியாய் தன் வேலையை செய்யாமல் நிணநீரானது ஆங்காங்கே சேரும்போது, கைகள் கால்கள் மற்றும் மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. இப்படி நிணநீர் சேர்ந்து வீ’ககம் ஏற்படுவதை நிணநீர் கோவை எனப்படும். ஆணகளுக்கு இனப்பெருக்க உறுப்புபகுதிகளில் இதுபோன்ற வீக்கங்கள் ஏற்படும், இதனை விரை வீக்கம் (ஹ்‎ட்ராசில்) என்பர். கால், கை, பாலுறுப்பு பகுதிகளில் இதுபோன்ற வீக்கங்கள் ஏற்படுவதினால் இவ்வனைத்து உறுப்புகளும் தன் இயல்பான அளவை விட பன்மடங்கு பெரியதாய் வீங்கிவிடும். மேலும் இது போன்ற வீக்கங்கள் ஏற்பட்டு நிணநீர் மண்டலத்தின் செயல்பாடு குறைவதினால், உடலானது நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலை எதிர்ப்பது கடினமாகிறது. இந்நோய் கண்டவர்களில் பாக்டீரியாக்கள் அதிக அளவில் தோல் மற்றும் நிணநீர் மண்டலத்தில் தொற்றிக்கொள்கின்றன. இது தோலினை தடிமனாக்கி கடினத்தன்மையை கொடுக்கிறது, இதனை யானைக்கால் நோய் என்பர்.

இந்நோய் வருவதை தடுப்பது எப்படி?
சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இந்நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் புழுக்களை கொல்லும் மருந்தினை எடுக்கச் செய்வது மற்றும் கொசுக்களின் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவதும் இந்நோய் தடுப்பு முறையாகும். இந்த பைலோரியா புழுக்களை பரப்பும் கொசுக்கள் சாதாரணமாகவே மாலை இருட்டும் நேரத்திலிருந்து காலை விடியும்வரை கடிக்கும் தன்மையுடையது. இந்நோய் உள்ள பகுதிகளில் வாழ்பவராயின் கீழ்காணும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்

கொசுவலை/பூச்சிக்கொல்லியுடன் கூடிய வலையின் கீழ் தூங்கலாம்.
மாலை இருட்டும் நேரத்திலிருந்து காலை விடியும்வரை உறங்கும் நேரத்தில் வெளியில் தெரியும் உடலின் தோலில் கொசுவிரட்டிகளை தடவிக்கொள்ளலாம்.
லிம்ப்பாடிக் பைலேரியாஸிஸ்க்கான சிகிச்சை என்ன?
வளர்ந்த பைலேரியல் புழுவால் பாதிக்ப்பட்டவர்கள் டிஇசி என்னும் மருந்தினை உட்கொண்டு இரத்தத்தில் உள்ள மைக்ரோபைலேரியா லார்வா புழுக்களை கொள்ளலாம். இதனால் வளர்ந்த புழுக்கள் கொல்லப்படவில்லையென்றாலும், இந்நோய் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கிறது. நோய்கண்ட நபரில் வளர்ந்த புழுக்கள் இறந்தாலும் நிணநீர்கோவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கீழ்க்காணும் அடிப்படை காரியங்களைக் கடைபிடிப்பதினால் நிணநீர் கோவை மோசமாவதை தடுக்கலாம்

வீக்கம் கண்ட பகுதிகளை சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு ஒவ்வொரு நாளும் கவனமாக கழுவவேண்டும்
பாக்டீரியாவினை அழிக்கும் களிம்புகளை மருத்துவரின் ஆலோசனைபடி காயமுற்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். இது பாக்டீரியா தொற்றுவதைத் தடுக்கும்.
வீக்கம் கண்ட கை மற்றும் காலை மேலே தூக்கியோ அல்லது சில உடற்பயிற்சிகளை செய்வதின் மூலம் நிணநீர் ஓட்டத்தை சரிசெய்யலாம்.
தொடர்ந்து மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
யானைக்கால் நோய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)

காலா அசார்காலா அசார் என்றால் என்ன?
காலா அசார் என்பது லீஷ்மான்யா இன ஒட்டுண்ணிகளால் நாட்டுப்புற பகுதிகளில் ஏற்படக்கூடிய ஒரு நோய். காலா அசார் நோய்க்கு பின்னர் "டெர்மல் லீஷ்மானியாஸிஸ்" எனப்படும் ஒரு தோல் வியாதி ஏற்படும். இது, "லீஷ்மானியா டோனோவான்" என்கின்ற பாரசைட் தோலில் நுழைந்து, தங்கி, பெருகுவதின் மூலம் ஏற்படுகிறது.

காலா அசாரின்(கருப்பு காய்ச்சல்) அடையாள மற்றும் அறிகுறிகள் யாவை?
திரும்பத்திரும்ப விட்டுவிட்டு வரும் காய்ச்சல்
பசியின்மை, வெளிர்ந்து, உடல் எடை குறைவதினால் உடல் மெலிந்து காணப்படுதல்
மண்ணீரல் பெருவாரியாக வீங்குதல். மண்ணீரல் மிக பெரியதாக வளர்ந்து மென்மையாக காணப்படும்.
ஈரல் பெரிதாகி (மண்ணீரல் அளவிற்கு அல்ல) மென்மையாகவும் கூர்மையான விளிம்புகளை கொண்டுமிருக்கும்
தோலில் ஏற்படும் மாற்றம்- தோல் வறண்டு, மெலிந்து, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த பகுதியில் ரோமங்கள் உதிர்ந்து விடும். சிவந்த நிறம் உடையவர்கள், கைகள், கால்கள், வயிறு மற்றும் முகப்பகுதியில் உள்ள தோலின் நிறம் சாம்பல் நிறமாக மாறிவிடும். எனவே தான் இதன் காலா அசார் எனும் இந்திய பெயர் கொடுக்ப்பட்டுள்ளது. காலா அசார் என்றால் கருப்பு காய்ச்சல் என பொருள்
இரத்த்சோகை வேகமாக ஏற்படும்
காலா அசார் சேர்ந்து ஏற்படுத்தும் நோய் -
விஸரல் லீஷ்மானியாஸிஸ். இவ்வகை நோய் நோய் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் நோய்கண்ட நபரில் மிகவும் எளிதாக நோய் ஏற்படக்கூடிய தன்மை கொண்டது

காலா அசார் எப்படி பரவுகிறது?
காலா அசார் என்பது நோயினை பரப்பும் காரணிகளால் வரக்கூடியது.
பிளபோடோமஸ் அர்ஜென்டிபெஸ் இன மணல் ஈக்கள் மட்டுமே இந்தியாவில் இந்நோயினை பரப்பும் காரணிகள் என அறியப்பட்டுள்ளது.
பெண் மணல் ஈக்கள் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலிலிருந்து இந்நோயினை மற்றவர்களுக்கு பரப்புகிறது
இந்தியாவில் காலா அசார் நோய் பரப்பும் காரணிகள்?
ப்பிபோடோமஸ் அர்ஜென்டிபெஸ் இன மணல் ஈக்கள் மட்டுமே இந்தியாவில் காலா அசார் பரப்பும் முக்கிய காரணியாகும்.
மணல் ஈக்கள் சிறியவகை பூச்சிகளாகும். இவை கொசுக்களின் உருவளவில் நான்கில் ஒரு பங்கேயாகும். இவைகளின் நீளம் 1.5 முதல் 3.5 மி.மீ வரை வேறுபடும்
வளர்ந்த ஈக்கள் சிறகுகள் வளர்ந்த நிலையில் மங்கலாக மிகசிறியளவாக இருக்கும். இவைகளின் இறக்கை மற்றும் உடல் முழுவதும் அதிக ரோமங்களால் மூடியிருக்கும்.
இவற்றின் வாழ்க்கை சுழற்சியானது, முட்டை, லார்வா, கூட்டுப் புழு, வளர்ந்த ஈ என அமைந்துள்ளது. முழு வாழ்க்கை சுழற்சி ஒரு மாதத்திற்க்கும் மேற்பட்ட காலத்தை எடுத்துக் கொள்ளும். இந்த சுழற்சி காலம் வெப்பநிலை மற்றும் சுற்றுச் சூழலை பொறுத்தது.
இவை அதிக ஈரப்பதமான, வெப்பமான, நிலத்திற்கு கீழ் அதிக நீர்பாங்கான மற்றும் அதிக செடி கொடிகள் உள்ள பகுதிகளை நாடுபவை.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்