பன்றிக்காய்ச்சல் தடுப்பு முறைகள் - அறிகுறிகள் - சிகிச்சைகள்

இன்று உலக மக்களை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக்காய்ச்சல் உருவெடுத்துள்ளது. பன்றிக்காய்ச்சல் பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மக்களை காத்திட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் அதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகும் சூழ்நிலை சில உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.

பன்றிக்காய்ச்சல்: 


தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மெக்சிகோவில் தான் இந்த காய்ச்சல் முதலில் தோன்றியது. அந்த சமயத்தில் அந்தக் காய்ச்சலைப் பார்த்து உலகமே பயந்தது. இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அன்று அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் பயந்தார்கள்.

இந்த காய்ச்சலுக்கு ‘ஹெச் 1 என் 1’ என்று பெயர் சூட்டினர்.

‘ஸ்வைன் ப்ளூ’ என பன்றி காய்ச்சலை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது ‘ப்ளூ வைரஸ்’ எனப்படும் ‘இன்ப்ளூயென்சா வைரஸ்’ என்ற கிருமியால் பன்றிகளுக்கு வரக்கூடிய நோய். இந்த வைரஸ், எப்படி மனிதர்களுக்கு சளி- காய்ச்சலை வரவழைக்கிறதோ, அதேபோன்று பன்றிகளுக்கும் பாதிப்பை வரவழைக்கும்.

தொடக்கத்தில் பன்றிகளிடம் இருந்துதான் இந்த நோய் மனிதர்களுக்கு பரவியது. ஆனால், இப்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக காற்றின் மூலம் பரவி வருகிறது. தும்மல் மற்றும் இருமல் ஆகிய இரு முக்கிய காரணங்கள் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்:

சாதாரண காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தான் இந்த காய்ச்சலுக்கும் தோன்றும். எனவே காய்ச்சல் ஏற்படும்பொழுது அசட்டையாக இருக்காமல், உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் தொற்றினால் மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய காய்ச்சலுக்குரிய அறிகுறிகள்தான் இருக்கும். குறிப்பாக சளி, காய்ச்சல், தொண்டைவலி, சோர்வு, உடல் வலி, குளிர் போன்றவையும் வரும். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கும் ஏற்படக்கூடும். பன்றி காய்ச்சலை பரப்பும் வைரசுக்கு ஒரு வினோத சக்தியும் இருக்கிறது.

அது என்னவென்றால் இது இன்னொரு வைரசுடன் சேர்ந்து மூன்றாவதாக புதிய வைரசாகவும் உருமாறிவிடக்கூடும். எனவே அலட்சியம் காட்டினால், நோய் தீவிரம் அடைந்து உடல் உறுப்புகள், செயல் இழந்து உயிரிழப்பும் வரலாம்.

பன்றிக் காய்ச்சல் வைத்தியம்:

பன்றிக் காய்ச்சலுக்கு டாமி ப்ளூ மாத்திரை சாப்பிட்டாலே போதும். மத்திய பன்றிக் காய்ச்சலை சாதாரணப் ஃபுளு காய்ச்சல் என்றே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து உண்டா என்று கேட்டால், ‘உண்டு’ என்பதுதான் பதில். பன்றிக்காய்ச்சல் வைரஸ் கிருமியை அழிக்கும் ‘ஒசல்டாமிவிர்‘ என்ற மாத்திரை இருக்கிறது. ஆகவே அதற்கான அறிகுறிகள் தென் பட்டால் டாக்டரிடம் சென்று பார்க்க வேண்டும். மேலும், இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் போடப்படும். இந்த வைரஸ் ஒவ்வொரு வருடத்திற்கும் மாறி மாறி உருவெடுப்பதால், ஆண்டுதோறும் புது தடுப்பூசி போட வேண்டும்.

பன்றிக்காய்ச்சல் எச்சரிக்கை:

"பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் வெளியேறும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், கைகுலுக்குகிறோம். ஏற்கெனவே, சிலர் பயன்படுத்திய சில பொருட்களை நாமும் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அதனால்தான் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாகக் கழுவ வேண்டும். முகமூடி அணியச் சொல்கிறோம். இது பன்றி காய்ச்சலுக்கு மட்டுமில்லை. பொதுவாகப் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைதான்"


பன்றிக்காய்ச்சல் வைரஸ்கள்

பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்தில் எச்1என்1 என்ற வைரஸ்தான் பரப்பியது. தற்போது அதில் படிப்படியாக பல மாற்றங்கள் உருவாகி, எச்3என்2, எச்2என்1, எச்2என்3, எச்1என்2, எச்3என்1 என்ற பல்வேறு வைரஸ் வகை வந்து விட்டன. பொதுவாக இந்த காய்ச்சல் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகிறது.

ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற இடங்களில் இருந்துதான் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் அதிகம் பரவுகிறது. பொதுவாக மற்ற மாதங்களில் இது அதிக பிரச்சினையை ஏற்படுத்துவது இல்லை.

பன்றிக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை பொறுத்து, அவருக்குரிய பாதிப்பை கூறுகிறார்கள். அதாவது, ஏ, பி, சி என்ற 3 நிலைகள் இதில் உள்ளன.

நிலை-‘ஏ’ பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் நோயாளிக்கு ஏற்படும் ‘ஏ‘ நிலைக்கான அறிகுறி என்பது மெல்லிய உடல் உஷ்ணம், லேசான தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு ஆகியவை.

ரத்தப் பரிசோதனை


இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற எல்லாமே பொதுவான அறிகுறிகள் தானே? அப்படியானால் எந்தெந்த அறிகுறிகளைக் கண்டு பன்றி காய்ச்சலுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? "தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுபோக்கு போன்றவை இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரணக் காய்ச்சலுக்கும் பொருந்தக்கூடியதுதான்.

எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரைப் பார்க்கும்போது ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதன்மூலம் பன்றி காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

நிலை-‘பி’ கடும் காய்ச்சல், கடும் தொண்டை வலி.


நிலை-‘சி’ மேற்கண்ட ‘ஏ‘ மற்றும் ‘பி‘ நிலைகளில் காணப்படும் அறிகுறிகளுடன், மூச்சு திணறல், நெஞ்சு வலி, குறைவான ரத்த அழுத்தம், தலைசுற்றல், மயக்கம், மந்தநிலை, கை கால்கள் நீல நிறமாகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக நிச்சயம் சேர்க்கப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

என்னென்ன பரிசோதனை?


தொண்டை பகுதியில் இருந்து எடுக்கப்படும் சளியை பரிசோதித்து எந்த வைரஸ் தாக்கி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள். குறிப்பாக ‘சி‘ நிலை அறிகுறி உள்ளவர்களுக்கு அவசியம் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு


பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் தற்போது அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் கவனம்


பெரியவர்கள்கூட எச்சரிக்கையுடன் இருந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. பெரியவர்களுக்குச் சொல்லப்படும் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதே நல்லது. எந்த வகை காய்ச்சல், சளியாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது பரவாமல் தடுக்க, இது உதவும்.





Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்