வெண்புள்ளி நோய்க்கு இயற்கை மருந்து !
வெண்புள்ளி நோயைசரி செய்ய தேவையான மூலிகைகள்
1. வேப்பம் கொழுந்து
2. மோர் (வீட்டில் தயாரித்தது)
3. கஸ்துரி மஞ்சள்
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.
உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்.
உணவு பத்தியம்
தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.
எந்தவித side-effect வும் ஏற்படுத்தாது.
ஆரோக்ய வாழ்வுக்கு மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்யமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
Tags: Venpullinoi Gunamaga, Iyarkkai Marunthu Venpullinoi, Sidha Marunhu Venpulli Noi
Comments
Post a Comment