15 நிமிட உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் !
அக்காலத்திலேயே பாரதியார் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்து தமது பாடலில் குறிப்பிட்டிருப்பார். மாலை முழுவதும் விளையாட்டு என. ஒருவர் எந்த ஒரு நோய் நொடியின்றி, அதிக எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட நாள் உயிர்வாழ கண்டிப்பாக "உடற்பயிற்சி" தேவை. நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது. தினமும் 15 நிமிட உடற்பயிற்சி செய்வதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
தினமும் 15 நிமிட உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கு உடற்பயிற்சி பெரிதும் பயன்படுகிறது.
கடுமையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க முடியும் என்பது கிடையாது 15 நிமிடம் செய்தாலே போதுமானது.
ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சியை மேற்கொண்டால் மனிதனின் இறப்பு விகிதம் 22 சதவீதம் குறையும்.
ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் சர்க்கரை நோய் வராது.
இவ்வாறு 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் உடல் எடை அதிகரிக்காது. எடை சீராக இருக்கும்.
தினமும் அதிகாலை 15 நிமிடம் நடைபயிற்சி செய்தால் நமது உடலில் உள்ள விட்டமின் டி-யின் அளவு மிகவும் அதிகரிக்கும்.
15 நிமிட நடைபயிற்சியின் மூலம் கேன்சர், புற்றுநோய், மார்பக புற்று நோய் ஆகிய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.
நமது இதயம் ஆரோக்கியமாக மற்றும் சீராக இருப்பதற்கு இந்த 15 நிமிட நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
15 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வதனால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி செய்யுங்கள். உன்னத நிலையை அடையுங்கள். நோயின்று வாழுங்கள்.
Comments
Post a Comment