வயிற்று வலியால் துடித்த மகள்... மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு இடியாக இறங்கிய அதிர்ச்சி

thanthai magalசில நேரங்களில் இயற்கைக்கு மாறான சில நிகழ்வுகள் நம்மை முகம் சுழிக்க வைக்கும். பண்பாடு மிக்க பாரத நாட்டில் சில பண்பாட்டு, பாரம்பரியம், முறைக்கு எதிராக சில விடயங்கள் நடந்து நம் மானத்தை வாங்கும். அந்த வகையில்தான் இந்த நிகழ்வும்.

தெலுங்கானா மாநிலத்தில் தந்தையே தன் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், குடும்ப வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கும் சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் டுண்டிகள் பகுதியில், 14 வயது சிறுமி கடந்த சில வாரங்களாகவே வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின் 14 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மாவிற்கு மேலும் ஒரு இடியாக இதற்கு காரணம் சிறுமியின் தந்தையே என்ற உண்மையும் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கு பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் மருத்துவர்கள் அதற்கு உடன்படவில்லை.

14 வயது சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய, சிறுமியின் தந்தையின் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் நடந்தது என தெரிவிக்கபட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்