வடிவேலு அதிரடி ! குல தெய்வ நிலம் மீட்பு

 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மிக அருகில் உள்ளது காட்டு பரமக்குடி கிராம ம். இங்கு மிகப் பிரசித்திப் பெற்ற திருவேட்டர் அய்யனார்தான் நடிகர் வடிவேலும் குல தெய்வம். இவர் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். 

இந்நிலையில் இந்தக் கோவிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம், ந த்தம் என்று அழைக்கப்படும் சேத்தூர் கிராமத்தில் உள்ளது. இது சுமார் 5 கோடி மதிப்பு இருக்கும். 

vadivelu kula theivam


அந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்த நிலையில், அந்த நிலத்தை மீட்டுத் தருமாறு அறிநிலையத்துறை அதிகாரிகளிடம்  பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால் மெத்தனமாக அவர்கள் நடந்து கொண்டதை அடுத்து, வடிவேல் நடிகர் ஒரு அதிரடி காட்டியுள்ளார். 

அதன் பிறகு அந்த நிலத்தை மிக துரிதமாக நடிவடிக்கை எடுத்து அறிநிலையத்துறையினர் மீட்டு எடுத்து கோவிலுக்கு சொந்தமாக்கியுள்ளனர். நடிகர் வடிவேலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இது பற்றி பேசிய பிறகுதான் இந்த விரைவு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...